மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 29 டிசம்பர், 2022

சினிமா : காரி (தமிழ் - 2022)

 காரி-

சல்லிக்கட்டை மையப்படுத்தி எடுத்திருப்பார்கள் என்று நினைத்துப் பார்த்தால் என்னென்னமோ கதைகள் பேசி இறுதியில் காரி மாட்டைக் களத்தில் இறக்கி விடுறாங்க... அம்புட்டுத்தான்.

திங்கள், 26 டிசம்பர், 2022

சினிமா : கூமன்( Kooman -மலையாளம் - 2022)

கூமன்-

எந்த ஒரு வழக்கு என்றாலும் தனது புத்திக் கூர்மையால் துப்புத் துலக்கி தனது மேலதிகாரியான சோமசேகரனின் - ரஞ்சிப் பணிக்கர் - பாராட்டைப் பெற்று, தன்னைப் பார்த்துப் பொறாமைப்படும் சக காவலர்களிடம் தன்னை நாயகனாகக் காட்டிக்கொள்ளும் கிரி சங்கர் - ஆசிப் அலி - தன்னை யார் கேவலப்படுத்தினாலும் அவர்களை ஏதாவது ஒரு வகையில் பலி வாங்கி விடும் குணம் கொண்டவர்.

வெள்ளி, 23 டிசம்பர், 2022

மனசு பேசுகிறது : படைப்பின் மீதான நம்பிக்கை

 பரிவை படைப்புகள்-

இந்த முறையும் நாவல்தான் வரும்ன்னு நினைச்சிருந்தேன் என்றார் நண்பர் ஒருவர். நானோ இந்த முறை இதுவே வரவேண்டாம்ன்னுதான் நான் நினைத்தேன் என்றேன் சிரித்தபடி. நீங்க வேண்டான்னாலும் உங்க நண்பர் கொண்டு வந்திருப்பார் என்று சொல்லிச் சிரித்தார். அவர் சொன்னது உண்மைதான், அதுதான் இந்த முறை நடந்தது.

சினிமா : குமாரி ( மலையாளம் - 2022)

குமாரி-

தன் குடும்பத்தாரின் விருப்பத்தின் பேரில் சாபம் பெற்ற தம்புரான் குடும்பத்து மருமகளாகிறாள் தாய், தந்தையை இழந்து தன் அண்ணனுடன் மாமா வீட்டில் வாழும் குமாரி. அவள் திருமணாகிப் போகும் போதே ஒரு கிழவி அந்த ஊரில் அடியெடுத்து வைக்காதே என்று சொல்லிச் செல்கிறாள். அதேபோல் அவளின் அண்ணன்காரனுக்கும் தங்கைக்கு இப்படியொரு இடத்தில் மணம் முடிப்பது பிடிக்கவில்லை என்றாலும் விதியின்படியே நிகழ்வு என்பதாய் அவளின் பயணம் தொடர்கிறது.

புதன், 21 டிசம்பர், 2022

மனசு பேசுகிறது : பரிவை படைப்புகள்

ரிவை-

எனக்கு எப்போதுமே எங்க ஊர்ப்பாசம் ரொம்ப அதிகம். இன்று வாழ்வின் நிமித்தம் வெளிநாட்டு வாழ்க்கை என்றாலும் ஊருக்குப் போகும் அந்த ஒரு மாதத்தில் தினமும் காலை அல்லது மாலை எங்க ஊருக்குப் போய் வீட்டில் இருக்கும் மரம், செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சி விட்டு அங்கிருப்பவர்களுடன் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு வருவதுண்டு. அந்தக் காற்றைச் சுவாசித்தாலே மனசுக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைத்தது போல் அத்தனை மகிழ்வாய் இருக்கும். இன்று பல மாற்றங்களை - குறிப்பாக விவசாயம் இழந்து, நாங்க நீந்தி விளையாண்ட கண்மாய் குளிக்க முடியாத அளவுக்கு மாற்றம் - அடைந்திருந்தாலும் நாம் ஓடித்திரிந்த அந்த ஊர் இன்னமும் மனசுக்குள் அப்படியேதான் இருக்கிறது.

சினிமா : அம்மு ( தெலுங்கு - 2022)

ம்மு-

கணவனின் சைக்கோத்தனமான கொடுமைகளை எதிர்க்கொள்ளும் பெண் அந்த வலிகளை உள்ளுக்குள்ளேயே வைத்துத் தவித்து, அதை வலிமையாக எதிர்கொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்கும் போது அதை எப்படிப் பயன்படுத்தி அவனைப் பலி வாங்குகிறாள் என்பதே படத்தின் கதை.

திங்கள், 19 டிசம்பர், 2022

சினிமா : ரத்தசாட்சி ( தமிழ் - 2022)

த்தசாட்சி-

எழுத்தாளர் ஜெயமோகனின் கைதிகள் சிறுகதை அதன் தரத்தைக் குறைக்காமல் திரைப்படமாக்கியிருக்கிறார் புதிய இயக்குநர் ரஃபீக் இஸ்மாயில். அதற்காக அவரை வாழ்த்தலாம்.

ஞாயிறு, 4 டிசம்பர், 2022

மனசு பேசுகிறது : தமிழணங்கு வாசிப்பு அனுபவம்

ச்சுக்குப் போகும் முன் - பிழைதிருத்தம் செய்யும் முன் - நிறையக் கதைகளை, நாவல்களை, கவிதைகளை, கட்டுரைகளை வாசிக்கும் வாய்ப்பு எனக்கு அடிக்கடி கிடைப்பதுண்டு. கரன் கார்க்கி அண்ணனின் 'சட்டைக்காரி'யைப் புத்தகமாவதற்குள் - கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்பே - அவர் எழுதிய சூட்டோடு வாசிக்கும் வாய்ப்புஎனக்குக் கிடைத்த பெரும்பேறு என்று சொல்லலாம். அது குறித்து அண்ணனுடன் நீண்ட நேரம் உரையாடியதும் அதற்குப் பின் இன்று வரை அவரின் தம்பி என்ற அழைப்பு எனக்குக் கிடைப்பதும் பெரும் மகிழ்ச்சி என்றாலும் இன்றுவரை இருவரும் சந்திக்காதது வருத்தமே.