மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 16 மார்ச், 2022

புத்தக விமர்சனம் : சு.தமிழ்ச்செல்வியின் 'கீதாரி'

கீதாரி-
ஒரு மழை இரவில் பைத்தியக்காரி ஒருத்தி பெத்துப் போட்டுட்டுப் போன ரெட்டைப் பிள்ளைகளின் வாழ்க்கைதான் கதை என்றாலும் அதைச் சுமக்கும் ராமு என்னும் கீதாரிதான் கதையையும் இறுதிவரை சுமக்கிறார்.

திங்கள், 14 மார்ச், 2022

புத்தக விமர்சனம் : தொ.பரமசிவனின் 'அழகர் கோவில்'

ழகர் கோவில்-

எழுத்தாளர் தொ.பரமசிவன் அவர்கள் குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் மேற்கொண்ட ஆய்வு நூலாகும். நமக்கெல்லாம் அழகர் கோவில் மதுரையில் இருக்கிறது என்பதும் வைகை ஆற்றில் இறங்கும் மிகப்பெரும் திருவிழாவும் மட்டுமே தெரியும், சிலருக்கு இன்னும் கூடுதலாகச் சில விஷயங்கள் தெரிந்திருக்கலாம்.

திங்கள், 7 மார்ச், 2022

துபையில் 'ராஜா'ங்க இசை

 'எங்கே இசை இருக்கிறதோ
அங்கே வார்த்தைகளுக்கு அவசியமில்லை...
எங்கே இசை இருக்கிறதோ
அங்கே கோவிட் இருக்காது...'

என்பதைச் சொல்லித்தான் ஆரம்பித்தார் இசைஞானி துபை எக்ஸ்போ இசை நிகழ்ச்சியில்...
இதைக் கூட்டம் கடைபிடித்ததா என்றால் தமிழனுக்கு தனித்த குணம் உண்டு என்பதை உணர்த்தும் விதமாக ஒரு சாரார் முன்னால் எழுந்து நின்று பின்னால் இருப்பவர்களுக்குச் சுத்தமாக மேடையை மறைத்துக் கொண்டார்கள்... கொன்றார்கள். இதனாலேயே நிகழ்வின் இறுதிவரை இசைஞானியை பார்க்க விடாமல் நின்றதால் பின்னாலிருந்து 'உக்காரு.. உக்காரு' என்ற குரல்கள் எழுந்த வண்ணம் இருந்தன. சிலர் காலி தண்ணீர் பாட்டில்களையும் வீசினார்கள் என்றாலும் இசைஞானி அலைகடலெனத் திரண்டிருந்த கூட்டத்தை மனதில் கொண்டு ரொம்பச் சாந்தமாகவே, சிரித்தபடியே நிகழ்ச்சியை நடத்திச் சென்றது சிறப்பு. நம்மாளுக திருந்துவானுகங்கிறீங்க... அதுக்கெல்லாம் சான்ஸே இல்லை.

வியாழன், 3 மார்ச், 2022

கோவையின் முகம் வேலாயுதம் ஐயாவின் கரங்களில் 'திருவிழா'

திரு. வேலாயுதம் ஐயா...

விஜயா பதிப்பக உரிமையாளர்...

கோவையின் சிறப்பு முகங்களில் ஐயாவும், அவரின் பதிப்பகமும்...

வாசிப்பால் உயர்ந்தவர், கோவை மக்களை மட்டுமல்ல தமிழக, இந்திய அளவில் வாசகர்களை வாசிப்பை நேசிக்க வைத்தவர்.