மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 25 ஏப்ரல், 2010

கண்ணதாசனின் கவிதை..!

காலத்தால் அழியாத கவிஞர் கண்ணதாசனின் கவிதை ஒன்று சில நாட்கள் முன்னர் எனக்கு மெயிலில் வந்தது. என்னைக் கவர்ந்த கவிதை உங்களையும் கவரும். கவிதை இதோ....





என்ன நண்பர்களே...

எங்கள் சிவகெங்கைச் சீமையின் முத்து கவிஞர் கண்ணதாசனின் கவிதை உங்கள் மனதுக்குள் மலர்ந்ததா..?

-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 16 ஏப்ரல், 2010

பையா - விமர்சனமில்லா வித்தியாசமான பார்வை



லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமனா நடிப்பில் வெளிவந்து பரபரப்பாக (!????) ஓடிக்கொண்டிருக்கும் படம் 'பையா'.

* காரில் பயணிக்கும் கதையில் அவ்வளவாக சுவராசியம் இல்லை.

* பல இடங்களில் அதே ரோடுகள் மீண்டும் மீண்டும் வருகின்றன விக்கிரமன் படப்பாடல் போல.

* தமிழ் படத்திற்கே உரிய லாஜிக் இல்லா காட்சிகள் அதிகம்.

* நீண்ட சண்டைக் காட்சிகள் அலுப்பைத் தருகின்றன.

* இரண்டு வில்லன் குரூப் இருந்தும் விறுவிறுப்பு குறைவு.

* படம் பெங்களூரில் தொடங்கி மும்பை போகிறது. எனக்கு ஒரு பெரிய சந்தேகம் படத்தின் பெயர் பையா என்று ஏன் வைக்கப்பட்டது?. தமனா மும்பையில் இரண்டு தடவை 'பையா' என்ற வார்த்தையை பயன்படுத்துவார் அதனால இருக்குமோ?.

* தமிழில் 'மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி' என்று ஒரு படம் உண்டு அதுபோல் 'பெங்களூரு டூ மும்பை' என வைத்திருந்தால் நல்லா இருந்திருக்கும் என்கிறது மனசு.

இயக்குநர்:

* நல்ல கதைகளை கொடுக்கும் புதிய இயக்குநர்கள் மத்தியில் இன்னும் சில லிங்குசாமிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

* ரன்னும் சண்டைக் கோழியும் விறுவிறுப்பாக இருந்ததால் ரசிக்கவைத்தன. பீமா???

* காரில் துரத்துவதும் புழுதி கிளம்ப பல மைல்தூரம் கடப்பதும் இன்னும் எத்தனை இயக்குநர்கள் மனதில் இருக்கின்றனவோ தெரியவில்லை.

* லிங்குசாமி படம் என்றாலே சண்டைக்காட்சிகள் நீண்ட நேரம் இழுக்கப்படுவது எல்லாருக்கும் தெரியும் இதில் இன்னும் கொஞ்சம் அதிகம்.

* லிங்குசாமியிடம் இருந்து வரும் அடுத்த படமாவது அரைத்த மாவை அரைக்காமல் மலிக்கா, மேனகாஸாதிகா போல் புதிய மாவை அரைக்கட்டும்.

கார்த்தி:

* அழகாக உயரமாக கம்பீரமாக இருக்கிறார். ஆனால் நடிப்பு பருத்தி வீரன். ஆயிரத்தில் ஒருவன் படங்களோடு ஒப்பிடுகையில் அரைக்கிணறு கூட தாண்டவில்லை.

* இன்னும் நடனம் கற்க வேண்டும். அசைவுகள் வராததால் காதல் பாடல்களிலும் நடனம் இல்லாமல் படமாக்கப்பட்டுள்ளது தெரிகிறது.

* உங்களால் பாடல் காட்சிகளில் தமிழர்களின் தற்போதைய கனவுக்கன்னி தமனாவும் வீணடிக்கப்பட்டுள்ளதாக துபாய்ராஜா, பனித்துளி சங்கர் போன்றவர்கள் அதிக வருத்தத்தில் இருப்பதாய் தகவல்.

* பல இடங்களில் பருத்திவீரனை ஞாபகப்படுத்துகிறது உங்கள் நடிப்பு.

* சண்டைக் காட்சிகளில் அத்தனை பேரையும் அடித்து நொறுக்கும் உங்கள் நடிப்பு விசிலடிக்கச் சொன்னாலும் ஏற்றுக் கொள்ளும்படியில்லை. இனி இது போன்ற கதைகளை தவிர்க்கவும்.

* ஷங்கர், ஸ்டார்ஜன், அக்பரின் எழுத்துக்கள் போல சும்மா அடுத்த படத்தில் தூள் கிளப்புங்க.

தமனா:

* தமிழகத்தின் தற்போதை புயல் அழகுப் பதுமை தமனா, பையாவில் ஏனோ ஒரு பிரயாணியாக பயணித்திருக்கிறாரே தவிர மனதில் ஒட்டவில்லை.

* பாடல் காட்சிகளில் சரிவர பயன்படுத்தப்படவில்லை என்பது உண்மை. அவருக்காக தனிப்பாடல் கொடுத்து இருக்கலாம் என்று நாடோடி இலக்கியன் புலம்பித் தள்ளுகிறார்.

* அழகான அருவிப் பிண்ணனியில் (செட்டாமே!!!!!!!!!) தமனா இன்னும் அழகாய்....

* சாப்பிடும் காட்சியில் தனக்கே உரிய பாணியில் நல்லா பண்ணியிருக்கிறார்.

* தேனம்மை, சத்ரியன் , விக்னேஷ்வரியின் கவிதையைப் போல் அழகாய் இருந்தாலும் இன்னும் நல்லா நடிக்க வாய்ப்பு கிடைக்கும் படத்தில் நடிக்க முயலுங்கள்.

இசை:

* யுவனின் இசையில் பாடல்கள் அருமை. குறிப்பாக ''அடடா மழைத்துளி'' பாடல் ரம்மியம்.

* பிண்ணனி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

* உங்களிடமிருந்து பா.ரா, திவ்யா ஹரி ஆகியோரின் அழகிய கவிதைகள் போல் இன்னும் அழகான அருமையான பாடல்களை எதிர்பார்க்கிறோம்.

சண்டைக்காட்சிகள்:

* முப்பது பேர் கையில் கத்தி, கட்டைகளுடன் சுற்றி வர அனைவரையும் கதாநாயகன் அடித்து நொறுக்குவது என்பது சினிமா கலாச்சரம் போலும். இதிலும் கலாச்சாரம் மீறப்படவில்லை.

* வில்லன் ஒரு அடியில் வீழ்ந்தாலும் பல அடிகள் வாங்கி ரத்தம் கக்கி கிடக்கும் நாயகன் மறுபடியும் எழுந்து அனாயாசமாக ஐம்பது பேரை அடிக்கிறார். இது எப்படி சாத்தியம் யோசிக்க மாட்டார்களா?

* ஆமா, எதிரி நூறு பேர் வந்தாலும் கதாநாயகன் கிட்ட மோதும்போது ஒவ்வொருத்தர வாராகளே அது ஏன்னே தெரியலை... எல்லாருமா சேர்ந்து தூக்கிப் போட்டு மி..........

இதுக்கு மேல இதுல சொல்ல ஒண்ணுமில்ல.


ஒளிப்பதிவு:

* படத்துக்கு அழகு மதியின் ஒளிப்பதிவு. படமுழுவதும் அவரது கைவண்ணம் அழகாய் இருக்கிறது. அவருக்கு வாழ்த்துக்கள்.


மொத்தத்தில்...

பாடல்களுக்காகவும் ஒளிப்பதிவுக்காகவும் பையாவை ஒருமுறை திரையரங்கில் பார்க்கலாம்.

---------------------



எங்க வீட்டு செல்லக்குட்டி இப்ப விடுமுறைக்காக மதுரைக்கு போயாச்சாம். அவங்க முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுவிட்டார்களாம். முழுஆண்டுத் தேர்வில் எல்லா பாடத்திலும் 90க்கு மேலாம். பள்ளியில் நடந்த பேஷன் ஷோவிலும் நடனத்திலும் இரண்டாவது பரிசாம். இதை எல்லாம் அவர் போனில் மழலையாய் சொன்னபோது அவருக்கு இருந்த சந்தோஷம் எனக்குள்ளும்....


-'பரிவை' சே.குமார்

புதன், 7 ஏப்ரல், 2010

தங்கமலரும்... அறை மாறிய நிஜக் கதையும்..!

அலை - 1
எனது மழலை இதயம் சிறுகதை சிறுவர்களுக்காக தினத்தந்தி நாளிதழில் வெள்ளியன்று இலவச இணைப்பாக வெளிவரும் தங்கமலர் ஏப்ரல்-2ந்தேதி பதிப்பில் வெளிவந்திருந்தது. சிறுவர்களுக்கான இதழில் வெளியிட்ட ஆசிரியருக்கும் தினத்தந்தி நாளிதழுக்கும் நன்றி.

அலை - 2
நண்பர் ஸ்டார்ஜனின் வலைப்பூவில் சில புல்லுருவிகள் புகுந்து சேட்டைகள் செய்திருப்பதாகவும் அதனால் அவருக்கு ஏற்பட்ட் மனவலி குறித்தும் இன்று காலை அவரது வலையில் பார்த்தேன். நமக்குள் இருக்கும் முகம் தெரியா நட்புக்குள் நண்பர்கள், தோழிகள், சகோதரர்கள், சகோதரிகள், அம்மாக்கள் என எத்தனையோ உறவு முறைகள்...

எல்லாம் நமக்குள் ரத்த சம்பந்தத்தால் வந்தது என்றால் நிச்சயமாக இல்லை. நமக்குள் இருக்கும் பகிர்தலே காரணம். அப்படியிருக்க கேவலமான வார்த்தைகளை பயன்படுத்தி பின்னூட்டம் இட  நினைக்கும் கயவர்கள் தயவு செய்து தங்களுக்கென ஓரு வலை விரித்து அதில் என்ன வேண்டுமானாலும் எழுதுங்கள். உங்களுக்கும் நட்பு கிடைக்கும் உங்களைப் போலவே. தயவு செய்து நல்ல குடும்பத்துக்குள் நாறவாயன் நுழைய வேண்டாம். இதனால் நண்பருக்கு எத்தனை மனவேதனை...!

அவரது நட்பில் உள்ள பெண்கள் பார்த்திருந்தால்...? இனிமேலாவது இது போன்ற பின்னூட்டங்களை தயவு செய்து போடாதீர்கள். ஸ்டார்ஜன் அருமையான எழுத்தாளர். அவரது பகிர்வுகள் அனைத்தும் அருமையானவை. அவர் யாரையும் தாக்கியோ தூற்றியோ எழுதியதில்லை... அப்படியிருக்க அவருக்கேன் இப்படி...?

வலைச்சரத்தில் பட்டயை கிளப்பியதால் வந்த கோபமா என்ன...? யாரா இருந்தாலும் நண்பர்களே இனி இதுபோல் வேண்டாமே..!

அலை - 3
நாங்கள் அறை மாறிய கதை எங்களுக்கு சொல்ல முடியாத மனவலியைத் தந்தது. பிப்ரவரி மாத இறுதியில் நாங்கள் நீண்ட நாட்களாக தங்கியிருந்த கட்டிடம் உடைக்கப்படப்போவதாக நோட்டீஸ் கொடுத்ததால் நாங்கள் வேறு அறை தேடும் பணியில் தீவிரமானோம்.

புரோக்கர்கள் என்ற பெயரில் கொள்ளைக் கூட்டம் ஒன்று அபுதாபியில் அலைவது அப்பொழுதுதான் தெரிந்தது. அறை பிடித்துக் கொடுத்தால் அவருக்கு 1000 அல்லது 2000 திர்ஹாம் கமிஷன் வெட்ட வேண்டுமாம். என்ன செய்ய... நாங்கள் இருந்தது இக்கட்டான நிலையில் எனவே அவர்களிடமும் சொல்லி தேடினோம்.

அதற்குள் நண்பர் மூலமாக கமிஷன் இல்லாமல் ஒரு அறை கிடைத்தது. மார்ச் 2ஆம் தேதி எங்கள் பழைய கட்டிடத்தத்தில் மின்சாரம் எங்கள் தளத்தில் மட்டும் துண்டிக்கப்பட்டது. எனவே அவசர அவசரமாக மாற்றினோம். புதிய அறை நல்ல விசாலமானது. எங்கள் ஆறு பேருக்கு அதிக இட வசதியுடன் இருந்தது. ஆனால் கழிப்பறை மிகவும் மோசமாக இருந்தது. மலையாளிகள் பயன்படுத்தி வந்தனர். சுத்தம் செய்வது என்பது அவர்களுக்கு தெரியாது போலும். அவ்வளவு மோசம்.

கிச்சன் மற்றும் கழிப்பறையில் இருந்து எங்கிருந்து வருகிறது என்று தெரியாமலே எந்த நேரமும் மழைக்காலத்தில் மாட்டுக் கசாலைக்குள் தேங்கி நிற்கும் மூத்திரம் போல இருந்து கொண்டே இருக்கும். அழகான பால்கனி. நல்ல காற்று அதிலெல்லாம் குறையில்ல.

நாங்கள் போன நேரமோ என்னவோ தெரியவில்லை நாங்கள் போகும்போது இயங்கிக் கொண்டிருந்த லிப்ட், மூன்று நாளில் மூச்சை  நிறுத்திக் கொண்டது.  அதை சரி செய்யும் எண்ணம் கட்டிட உரிமையாளருக்கு எழவில்லை. காரணம் அதுவும் இடிக்கப்பட இருக்கும் கட்டிடமாம். போதுமுடா சாமி...!
கடந்த ஒரு மாதமாக பழனிமலை நடை பயணம்தான், தினமும் ஏறினோம்... இறங்கினோம்... இதனால் வலை (Internet) வாங்கும் எண்ணம் ஏனோ தடையானது. அதனால்தான் தமிங்கிலத்தில் அலுவலகத்தில் இருந்து அவசர... அவசரமான பின்னூட்டங்கள்.

மீண்டும் அறை தேடும் படலம் ஆரம்பிக்குமோ என்று மனசுக்குள் கிலி ஏற்பட ஆரம்பிக்கும் போது உறவினர் ஒருவர் தனது மனைவியை பிரசவத்தின் காரணமாக இந்தியா அனுப்புவதால் அந்த அறையை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று முன்பு ஒருமுறை சொல்லியிருந்தார். அவரிடம் வினவ, ஏப்ரல் 2ந்தேதி ஊருக்கு செல்ல இருப்பதால் மாறிக்கொள்ளலாம் என்றார்.
அவர் மூலமாக அந்த பிளாட்டின் உரிமையாளரிடம் பேசினால் எதோ வேலைக்கான நேர்முகத்தேர்வு போல் ஆயிரத்தெட்டு கேள்விகள். அதில் தாண்டி வந்தால் நான் கு பேர்தான் தங்கணும், சிகரெட் தண்ணி கூடாது என்ற கட்டுப்பாடுகள். எல்லாம் ஓகேயானதும் மீண்டும் அறை மாற்ற வேலைகள்.  உறவினர் சொல்லிவிட்டு மனைவியை கொண்டுவிட பத்து நாள் விடுமுறையில் சென்று விட்டார்.

இந்த முறை மூன்று மாடிகள் படிகளில் பொருட்களை இறக்கினோம். 29" தொலைக்காட்சி, ஏசி, பிரிட்ஜ், கட்டில்கள் எல்லாம் படியின் வழியாக... ஸ்... அப்பாடா என்று புது அறைக்கு வந்தபோது மீண்டும் பிரச்சினை.  வந்த முதல் நாள் மூட்டைப்பூச்சி மருந்து அடிக்கிறோம் என்றார்கள் அப்படியே போட்டுவிட்டு வெளியில் தங்கிவிட்டு மாலை திரும்பினால் நாளைதான் அடிக்கிறோம் என்றார்கள்... வந்ததே பாருங்கள் கோபம்...? ம்.... என்ன செய்ய... நமக்கு அறை வேணுமே... அதனால் அடங்கியது மனசின் எரிமலை...

சரி சாவியை கொடுங்கள் நாங்கள் படுப்பதற்காகவாவது இடம் ஒதுக்கிக் கொள்கிறோம் என்றால் கிச்சன் சாவியை மானேஜர் வாங்கிக் கொண்டுவிட்டார். பேச்சிலர்கள் சமைக்க அனுமதியில்லையாம் என்றான் எங்கள் சாவியை கொடுத்தவன்... மானேஜர் மலையாளி, அவனுக்கு நாங்கள் வருவது பிடிக்கவில்லை என்பது பின்னர்தான் தெரிந்தது.

அதற்கு மேல் அடங்கியிருக்க, முல்லைப் பெரியாறு பிரச்சினையில் அமைதி காத்து குடும்பம் நடத்தும் அவரா நாம... நமக்குன்னு ஒரு மரியாதை இருக்குல்ல... அது வாய் வழியாக சற்று வேகமாக இறங்க, இதை எதிர்பார்க்காத சாவியை கொடுக்க வந்த நண்பர் முதலாளிகிட்ட பேசுங்க... என்றார். அவரிடம் சற்று மரியாதை கலந்த சூட்டோடு பேசினோம். அவர் எங்களுக்கு கிரீன் சிக்னல் காட்டினார்.

பின்னர் மேனேஜரிடம் சாவி வாங்கி (அவன் முகத்தில் அணை கட்டியது போலிருந்தது) எல்லாம் சரி செய்து சமைத்து சாப்பிட்டு அறையில் தங்கியாச்சு. பக்கத்துல மலையாளக் கரையாளுங்க, இப்ப பாத்ரூமை குத்தகை எடுத்து உள்ள தூங்குறாங்க போல ... சரி ஆகிறது ஆகட்டும்... போகப் போக நாம எல்லாரையும் பாத்துக்கலமுன்னு மனசை தேத்திக்கிட்டு இருக்கோம். வலை (internet) வாங்கிட்ட நாம பொழப்பு நல்ல போகும்... பார்க்கலாம்.

--'பரியன் வயல்' சே.குமார்