மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 31 ஜூலை, 2023

மனசு பேசுகிறது : ஷார்ஜாவில் நிறைவான சந்திப்புக்கள்

முதல் சந்திப்பு :

ல்லூரியில் படிக்கும் போது எழுத ஆரம்பித்து, இன்று வரை எப்படியோ தொடர்ந்து கொண்டிருக்க்கிறேன் என்றாலும் படிக்கும் போது, சென்னையில் வேலை பார்த்த போது, அமீரகம் வந்த பின் என எழுத்தில் நிறைய மாற்றங்கள் வந்து இப்போது எழுத்தில் என்னளவில் நிறையவே மாற்றிக் கொண்டு, வாழ்வியலைத் தொடர்ந்து பதிவு செய்ய வேண்டுமென எழுதிக் கொண்டிருக்கிறேன்.

திங்கள், 24 ஜூலை, 2023

மனசு பேசுகிறது 'மடை மாற்றுதல்'

ண்பர்கள் அல்லது உறவினர்கள் கூடி ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி தீவிரமாகப் பேசிக் கொண்டிருக்கும் போது அதற்குச் சம்பந்தமில்லாத ஒரு விசயத்தை இடையில் ஆரம்பித்து வைத்து பேச்சின் போக்கையே மாற்றுவதைச் சிலர் வாடிக்கையாக வைத்திருப்பதைப் பார்த்திருப்போம். அதைத்தான் நாம் 'மடை மாற்றுதல்' என்று சொல்வோம்.

ஞாயிறு, 16 ஜூலை, 2023

நிகழ்வு : 'மாயநதி' பேராசிரியை உமாதேவியுடன் கலந்துரையாடல்

மீபமாய் நிறைய நிகழ்வுகளுக்குப் போகும் வாய்ப்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது. பலரைச் சந்திக்க, அவர்களுடன் உரையாட வார விடுமுறைகள் மட்டுமின்றி வாரநாட்களிலும் வாய்ப்புக் கிடைப்பது மகிழ்ச்சி. நேற்றைய நாளும் அப்படி ஒரு நாளாக, ஒரு சிறப்பான பேச்சைக் கேட்கும் நாளாக அமைந்தது.

புதன், 5 ஜூலை, 2023

யாவரும்.காமில் 'பொய்க்கால் குதிரைகள்'

ஜூன்-ஜூலை யாவரும்.காம் இணைய இதழில் எனது சிறுகதை ஒன்று வெளியாகியிருக்கிறது. அதுவும் அடுத்தடுத்த இதழ்களில் தொடர்ந்து சிறுகதைக்கு வாய்ப்பளித்திருப்பது மகிழ்ச்சி. யாவரும் இதழாசிரியர் திரு. ஜீவகரிகாலன் அவர்களுக்கு நன்றி.

ஞாயிறு, 2 ஜூலை, 2023

மனசு பேசுகிறது : வித்தியாசமான முதல் விமர்சனத்தைப் பெற்ற 'வாத்தியார்'

சில நிகழ்வுகள் எப்போதும் இனிமையானவைதான். அப்படியானதொரு நிறைவான தினமாய், என் எழுத்துப் பயணத்தில் மறக்க முடியாத நாளாய் இன்றைய தினம் அமைந்தது.