மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 30 மே, 2020

தப்புக்கணக்கு (பரிசு பெற்ற கதை)

ணேஷ்பாலா அண்ணன் அவர்கள் முகநூலில் படத்துக்கு கதை எழுதும் திடீர் போட்டியை அறிவித்தார். இரண்டு நாட்கள் மட்டுமே போட்டிக்கான கதைகளைப் பதியக் கொடுத்திருந்த காலக்கெடு. ஒருவர் இரண்டு கதைகள் அனுப்பலாம் என்றும் சொல்லியிருந்தார். ஒரு கதை எழுதுவதே கடினம் இதில் இரண்டு எங்கிட்டு எழுத என்று நினைத்து பார்வையாளனாய் நிற்கிறேன் என்றதும் அதெல்லாம் வேண்டாம் நீ எழுது என்றார். வெள்ளி விடுமுறை என்பதாலும் போட்டிக்கான இறுதிநாள் என்பதாலும் மதியச் சாப்பாட்டுக்குப் பின் அமர்ந்து எழுதி, தலைப்பைக் கூட பதியாமல் அப்படியே முகநூலில் தூக்கிப் போட்டுவிட்டேன்.

செவ்வாய், 26 மே, 2020

மனசு பேசுகிறது : எழுத ஆரம்பித்திருக்கும் நாவல்

ங்கு பதிவெழுதி ரொம்ப நாளாச்சு... நிறைய எழுதணும்ன்னு நினைச்சு இந்தக் கொரோனா காலத்துல வீட்டிலிருந்து வேலை பார்க்கும் சூழலில் எதிலுமே மனம் ஒட்டவில்லை என்பதே உண்மை. எழுத நினைத்த எதுவும் எழுதும் எண்ணமே வரவில்லை என்பதும் உண்மை. உடல் நலமும் இரண்டு வாரங்களுக்கு மேல் சரியில்லாமல்தான் இருந்தது... அது கொரோனாவாலா அல்லது தட்பவெட்ப நிலை மாறுதலாலா என்பதை அறியாமலேயே சரியாகி இருக்கிறது. இந்தப் பிரச்சினை எனக்கு மட்டுமல்ல... அறையில் இருக்கும் ஐவருக்கும் இருந்தது... இப்போது எல்லாம் சரியாகிவிட்டது என்றாலும் எழுத மட்டும் எண்ணம் எழவேயில்லை... 

ஞாயிறு, 10 மே, 2020

எதிர்சேவை: 'எதார்த்த மனிதர்களின் வாழ்க்கை' - பால்கரசு சசிகுமார்


புதாபியில் இருக்கும் சகோதரர் பால்கரசு அவர்கள் எதிர்சேவை குறித்து முகநூலில் பகிர்ந்து கொண்ட விமர்சனம்...

னதில் அழுத்திக்கொண்டிருக்கும் சுமைகளை இறக்கி வைக்க எப்போதும் ஒரு நெருங்கிய நட்பு வேண்டும், பரிவை சே. குமார் எனக்கு சில ஆண்டுகளுக்கு முன்புதான் பழக்கம் என்றாலும், என் மனச்சுமையைத் தாங்கும் தோள்கள் கொண்ட நட்பு வட்டத்தில் இணைந்து கொண்டார்.

திங்கள், 4 மே, 2020

மனசு பேசுகிறது : திருமண நாள்

காலம் நகர்ந்து கொண்டேதான் இருக்கிறது... பள்ளிச் சிறுவனாய்... கல்லூரி மாணவனாய்... சுற்றித் திரிந்த நாட்களையெல்லாம் கடந்து உனக்கும் ஒரு குடும்பமாகிப் போச்சு... இனி சூதனமாப் பொழச்சுக்க எனக் காலம் சொல்லி பதினேழு ஆண்டுகள் முடிவடைந்து விட்டது.

சனி, 2 மே, 2020

சினிமா : விக்ருதி (மலையாளம்)

'சட்டத்துக்கு மன்னிக்கத் தெரியாது... ஆனா நம்ம மனுசங்க... நமக்கு மன்னிக்கத் தெரியும்தானே...'

அம்புட்டுத்தான் விகிர்தி சொல்லும் கதை.

வெள்ளி, 1 மே, 2020

'எதிர்சேவை - மண்வாசம்' - எழுத்தாளர் கோபி சரபோஜி

திர்சேவைக்கு மீண்டும் ஒரு விமர்சனம்... இம்முறை எழுத்தாளர் கோபி சரபோஜி அவர்களிடமிருந்து வந்திருக்கிறது. இந்த விமர்சனத்தை எழுதி முடித்து ஏதாவது பத்திரிக்கைக்கு அனுப்பும் எண்ணத்தில் இருந்தவர், எங்கள் அமீரக எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் குழுமம் நடத்திய புத்தக விமர்சனப் போட்டிக்கு அனுப்பலாமா..? என முகநூல் வழி என்னிடம் கேட்டார். தாராளமாக அனுப்புங்கள்... அது உங்கள் பார்வை... உங்கள் எழுத்து என்னிடம் என்ன கேள்வி என்றேன். இறுதி நாளில் அனுப்பி வைத்து வெற்றியின் எல்லையான இறுதிச் சுற்று வரைக்கும் களத்தில் நின்றார்... அது அவரின் எழுத்துக்கு கிடைத்த வெற்றியே ஆகும்.