மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 29 டிசம்பர், 2022

சினிமா : காரி (தமிழ் - 2022)

 காரி-

சல்லிக்கட்டை மையப்படுத்தி எடுத்திருப்பார்கள் என்று நினைத்துப் பார்த்தால் என்னென்னமோ கதைகள் பேசி இறுதியில் காரி மாட்டைக் களத்தில் இறக்கி விடுறாங்க... அம்புட்டுத்தான்.

திங்கள், 26 டிசம்பர், 2022

சினிமா : கூமன்( Kooman -மலையாளம் - 2022)

கூமன்-

எந்த ஒரு வழக்கு என்றாலும் தனது புத்திக் கூர்மையால் துப்புத் துலக்கி தனது மேலதிகாரியான சோமசேகரனின் - ரஞ்சிப் பணிக்கர் - பாராட்டைப் பெற்று, தன்னைப் பார்த்துப் பொறாமைப்படும் சக காவலர்களிடம் தன்னை நாயகனாகக் காட்டிக்கொள்ளும் கிரி சங்கர் - ஆசிப் அலி - தன்னை யார் கேவலப்படுத்தினாலும் அவர்களை ஏதாவது ஒரு வகையில் பலி வாங்கி விடும் குணம் கொண்டவர்.

வெள்ளி, 23 டிசம்பர், 2022

மனசு பேசுகிறது : படைப்பின் மீதான நம்பிக்கை

 பரிவை படைப்புகள்-

இந்த முறையும் நாவல்தான் வரும்ன்னு நினைச்சிருந்தேன் என்றார் நண்பர் ஒருவர். நானோ இந்த முறை இதுவே வரவேண்டாம்ன்னுதான் நான் நினைத்தேன் என்றேன் சிரித்தபடி. நீங்க வேண்டான்னாலும் உங்க நண்பர் கொண்டு வந்திருப்பார் என்று சொல்லிச் சிரித்தார். அவர் சொன்னது உண்மைதான், அதுதான் இந்த முறை நடந்தது.

சினிமா : குமாரி ( மலையாளம் - 2022)

குமாரி-

தன் குடும்பத்தாரின் விருப்பத்தின் பேரில் சாபம் பெற்ற தம்புரான் குடும்பத்து மருமகளாகிறாள் தாய், தந்தையை இழந்து தன் அண்ணனுடன் மாமா வீட்டில் வாழும் குமாரி. அவள் திருமணாகிப் போகும் போதே ஒரு கிழவி அந்த ஊரில் அடியெடுத்து வைக்காதே என்று சொல்லிச் செல்கிறாள். அதேபோல் அவளின் அண்ணன்காரனுக்கும் தங்கைக்கு இப்படியொரு இடத்தில் மணம் முடிப்பது பிடிக்கவில்லை என்றாலும் விதியின்படியே நிகழ்வு என்பதாய் அவளின் பயணம் தொடர்கிறது.

புதன், 21 டிசம்பர், 2022

மனசு பேசுகிறது : பரிவை படைப்புகள்

ரிவை-

எனக்கு எப்போதுமே எங்க ஊர்ப்பாசம் ரொம்ப அதிகம். இன்று வாழ்வின் நிமித்தம் வெளிநாட்டு வாழ்க்கை என்றாலும் ஊருக்குப் போகும் அந்த ஒரு மாதத்தில் தினமும் காலை அல்லது மாலை எங்க ஊருக்குப் போய் வீட்டில் இருக்கும் மரம், செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சி விட்டு அங்கிருப்பவர்களுடன் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு வருவதுண்டு. அந்தக் காற்றைச் சுவாசித்தாலே மனசுக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைத்தது போல் அத்தனை மகிழ்வாய் இருக்கும். இன்று பல மாற்றங்களை - குறிப்பாக விவசாயம் இழந்து, நாங்க நீந்தி விளையாண்ட கண்மாய் குளிக்க முடியாத அளவுக்கு மாற்றம் - அடைந்திருந்தாலும் நாம் ஓடித்திரிந்த அந்த ஊர் இன்னமும் மனசுக்குள் அப்படியேதான் இருக்கிறது.

சினிமா : அம்மு ( தெலுங்கு - 2022)

ம்மு-

கணவனின் சைக்கோத்தனமான கொடுமைகளை எதிர்க்கொள்ளும் பெண் அந்த வலிகளை உள்ளுக்குள்ளேயே வைத்துத் தவித்து, அதை வலிமையாக எதிர்கொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்கும் போது அதை எப்படிப் பயன்படுத்தி அவனைப் பலி வாங்குகிறாள் என்பதே படத்தின் கதை.

திங்கள், 19 டிசம்பர், 2022

சினிமா : ரத்தசாட்சி ( தமிழ் - 2022)

த்தசாட்சி-

எழுத்தாளர் ஜெயமோகனின் கைதிகள் சிறுகதை அதன் தரத்தைக் குறைக்காமல் திரைப்படமாக்கியிருக்கிறார் புதிய இயக்குநர் ரஃபீக் இஸ்மாயில். அதற்காக அவரை வாழ்த்தலாம்.

ஞாயிறு, 4 டிசம்பர், 2022

மனசு பேசுகிறது : தமிழணங்கு வாசிப்பு அனுபவம்

ச்சுக்குப் போகும் முன் - பிழைதிருத்தம் செய்யும் முன் - நிறையக் கதைகளை, நாவல்களை, கவிதைகளை, கட்டுரைகளை வாசிக்கும் வாய்ப்பு எனக்கு அடிக்கடி கிடைப்பதுண்டு. கரன் கார்க்கி அண்ணனின் 'சட்டைக்காரி'யைப் புத்தகமாவதற்குள் - கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்பே - அவர் எழுதிய சூட்டோடு வாசிக்கும் வாய்ப்புஎனக்குக் கிடைத்த பெரும்பேறு என்று சொல்லலாம். அது குறித்து அண்ணனுடன் நீண்ட நேரம் உரையாடியதும் அதற்குப் பின் இன்று வரை அவரின் தம்பி என்ற அழைப்பு எனக்குக் கிடைப்பதும் பெரும் மகிழ்ச்சி என்றாலும் இன்றுவரை இருவரும் சந்திக்காதது வருத்தமே.

புதன், 23 நவம்பர், 2022

சினிமா : அப்பன் (மலையாளம் - 2022)

 அப்பன்-

செவ்வாய், 22 நவம்பர், 2022

பாலைவன பரமபதம் வெளியீட்டு விழா

 பாலைவன பரமபதம் வெளியீட்டு விழா நிகழ்வுப் பகிர்வு -

சென்ற சனிக்கிழமை (19/11/2022) இரவு துபை பின் ஷபீப் மாலில் இருக்கும் ஃபரா உணவகக் கூட்ட அரங்கில் சகோதரி சிவசங்கரி வசந்த்தின் முதல் நாவலான 'பாலைவன பரமபதம்' வெளியீட்டு  நிகழ்வு நடைபெற்றது. அமீரக எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் குழுமம் நடத்திய இந்நிகழ்வு எப்பவும் போல் மகிழ்வாகவும் சிறப்பாகவும் நடந்தது.

சனி, 12 நவம்பர், 2022

சினிமா : ஒரு தெக்கன் தள்ளு கேஸ்( மலையாளம் - 2022)

ஒரு தெக்கன் தள்ளு கேஸ்-

இருவருக்குள் இருக்கும் ஈகோவின் காரணமாக நிகழும் பிரச்சினையை மையப்படுத்தி, நகைச்சுவை கலந்து கொடுத்து வெற்றி பெற்றிருக்கும் படம் இது.

வியாழன், 10 நவம்பர், 2022

சினிமா : நா தான் கேசு கொடு ( மலையாளம் - 2022)

நா தான் கேசு கொடு-

ஒரு சாமானியன் தொடுக்கும் வழக்கில் அமைச்சரைக் கோர்ட்டுக்கு இழுக்கும் நகைச்சுவைப் படம் இது.

புதன், 9 நவம்பர், 2022

புத்தக விமர்சனம் : கரிஷ்மா சுதாகரின் 'எங்க கருப்பசாமி'

ங்க கருப்பசாமி -

எழுத்தாளர் கதிரவன் ரத்னவேலு அவர்கள் அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளதைப் போல நமது தேசத்தில் அனைத்தும் கதைகளாலேயே கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. கிராமங்களில் ஒவ்வொன்றுக்கும் ஒரு கதை இருக்கும், அந்தக் கதைகள் ஒவ்வொருவராலும் ஒவ்வொருவிதமாகச் சொல்லப்படும். அதில் எத்தனை சதவிகிதம் உண்மை இருக்கும் என்றெல்லாம் தெரியாது என்றாலும் வழிவழியாக அதன் மீதான நம்பிக்கை மட்டும் ஒரு துளி கூட குறையாமல் இருக்கும்.

சனி, 22 அக்டோபர், 2022

புத்தக விமர்சனம் : தமிழணங்கு (இடவியல் வரலாறு)

மிழணங்கு-

நண்பர்களின் எழுத்துக்களை அச்சுக்குப் போகும் முன் வாசிக்கும் பாக்கியம் பெற்றவன் நான். அதில் மகுடமாய் எழுத்தாளர் கரன் கார்க்கி அண்ணனின் 'சட்டைக்காரி' புத்தகமாவதற்கு ஒரு வருடம் முன்னரே எனக்கு வாசிக்கக் கிடைத்ததுடன் அது குறித்தும், அதன் பின் என் எழுத்து குறித்தும் அவருடன் நீண்ட உரையாடல்கள் எல்லாம் நிகழ்ந்தேறியதுடன் இன்றுவரை மரப்பாலம் கொடுத்த நட்பு உறவாய்த் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

புதன், 16 மார்ச், 2022

புத்தக விமர்சனம் : சு.தமிழ்ச்செல்வியின் 'கீதாரி'

கீதாரி-
ஒரு மழை இரவில் பைத்தியக்காரி ஒருத்தி பெத்துப் போட்டுட்டுப் போன ரெட்டைப் பிள்ளைகளின் வாழ்க்கைதான் கதை என்றாலும் அதைச் சுமக்கும் ராமு என்னும் கீதாரிதான் கதையையும் இறுதிவரை சுமக்கிறார்.

திங்கள், 14 மார்ச், 2022

புத்தக விமர்சனம் : தொ.பரமசிவனின் 'அழகர் கோவில்'

ழகர் கோவில்-

எழுத்தாளர் தொ.பரமசிவன் அவர்கள் குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் மேற்கொண்ட ஆய்வு நூலாகும். நமக்கெல்லாம் அழகர் கோவில் மதுரையில் இருக்கிறது என்பதும் வைகை ஆற்றில் இறங்கும் மிகப்பெரும் திருவிழாவும் மட்டுமே தெரியும், சிலருக்கு இன்னும் கூடுதலாகச் சில விஷயங்கள் தெரிந்திருக்கலாம்.

திங்கள், 7 மார்ச், 2022

துபையில் 'ராஜா'ங்க இசை

 'எங்கே இசை இருக்கிறதோ
அங்கே வார்த்தைகளுக்கு அவசியமில்லை...
எங்கே இசை இருக்கிறதோ
அங்கே கோவிட் இருக்காது...'

என்பதைச் சொல்லித்தான் ஆரம்பித்தார் இசைஞானி துபை எக்ஸ்போ இசை நிகழ்ச்சியில்...
இதைக் கூட்டம் கடைபிடித்ததா என்றால் தமிழனுக்கு தனித்த குணம் உண்டு என்பதை உணர்த்தும் விதமாக ஒரு சாரார் முன்னால் எழுந்து நின்று பின்னால் இருப்பவர்களுக்குச் சுத்தமாக மேடையை மறைத்துக் கொண்டார்கள்... கொன்றார்கள். இதனாலேயே நிகழ்வின் இறுதிவரை இசைஞானியை பார்க்க விடாமல் நின்றதால் பின்னாலிருந்து 'உக்காரு.. உக்காரு' என்ற குரல்கள் எழுந்த வண்ணம் இருந்தன. சிலர் காலி தண்ணீர் பாட்டில்களையும் வீசினார்கள் என்றாலும் இசைஞானி அலைகடலெனத் திரண்டிருந்த கூட்டத்தை மனதில் கொண்டு ரொம்பச் சாந்தமாகவே, சிரித்தபடியே நிகழ்ச்சியை நடத்திச் சென்றது சிறப்பு. நம்மாளுக திருந்துவானுகங்கிறீங்க... அதுக்கெல்லாம் சான்ஸே இல்லை.

வியாழன், 3 மார்ச், 2022

கோவையின் முகம் வேலாயுதம் ஐயாவின் கரங்களில் 'திருவிழா'

திரு. வேலாயுதம் ஐயா...

விஜயா பதிப்பக உரிமையாளர்...

கோவையின் சிறப்பு முகங்களில் ஐயாவும், அவரின் பதிப்பகமும்...

வாசிப்பால் உயர்ந்தவர், கோவை மக்களை மட்டுமல்ல தமிழக, இந்திய அளவில் வாசகர்களை வாசிப்பை நேசிக்க வைத்தவர்.

திங்கள், 21 பிப்ரவரி, 2022

சினிமா விமர்சனம் : கடைசி விவசாயி ( தமிழ் - 2022)

டைசி விவசாயி...

கிராமங்களில் சில நடக்கக் கூடாத விஷயங்கள் நடக்கும் போது கிராமத்துத் தெய்வங்களைக் கும்பிடாமல் போட்டு வைத்திருப்பதாலேயே இதெல்லாம் நடக்கிறது. முதலில் சாமியைக் கும்பிடணுமப்பா என்று சொல்வார்கள். அப்படித்தான் இதிலும் ஊருக்குள் இருக்கும் பெரிய மரம் பட்டுப் போனதன் பின்பு ஊருக்கு ஏதோ கெட்டது நடக்கப்போகிறது எனபதாய் கிராமத்துக் குலதெய்வத்தைக் கும்பிடணும் என்ற முடிவுக்கு வருகிறார்கள்.

வெள்ளி, 18 பிப்ரவரி, 2022

சினிமா விமர்சனம் : ஹிருதயம் (மலையாளம் - 2022)

திவுக்குள் செல்லும் முன்...

தென்னரசு சிறுகதைப் போட்டியில் எனது கதையும் இருக்கு. கதை அவ்வளவு நல்லாவெல்லாம் இருக்காது... சாதாரணக் கதைதான், அதனால் படிச்சாலும் படிக்காட்டியும், பிடிச்சாலும் பிடிக்காட்டியும் கீழிருக்கும் லிங்கைத் தட்டி, நாளைக்குள் ஒரு லைக்கையும் தட்டி விடுங்க... நன்றி.

எங்கே அவள்..? 

******

ஹிருதயம் ...

வியாழன், 17 பிப்ரவரி, 2022

மனசு பேசுகிறது : இயக்குநர் மனோபாலா வெளியிட்ட 'திருவிழா'

னக்கான ஏதோ ஒன்று ஏதோ ஒரு விதத்தில் நடந்து கொண்டேதான் இருக்கிறது, அதுவும் எழுத்து தொடர்பாக எனக்கு நான் எதிர்பார்க்காததெல்லாம் கடந்த மூன்றாண்டுகளில் நடந்து கொண்டிருப்பது மகிழ்வே. அப்படித்தான் இன்றைய நிகழ்வும்.

திங்கள், 14 பிப்ரவரி, 2022

மனசு பேசுகிறது : மகிழ்வான சந்திப்பு

ன்னைப் பொறுத்தவரை பெரும்பாலான சந்திப்புக்கள் மனநிறைவையும் மகிழ்வையும் தரும், அப்படியானதொரு சந்திப்பு இன்றைய பொழுதைச் சிறப்பாக்கியது.

வியாழன், 10 பிப்ரவரி, 2022

சினிமா விமர்சனம் : நரை எழுதும் சுயசரிதம்

ரை எழுதும் சுயசரிதம்...

சனி, 29 ஜனவரி, 2022

திருவிழா - குடும்பத்தில் ஒருவராய் வாழ்ந்த அனுபவம் - சிவசங்கரி வசந்த்

விமர்சனங்கள்தான் நம்முடைய எழுத்தை இன்னும் சிறப்பாக்கும், என்னென்ன தவறு செய்திருக்கிறோம் இனி அதை எப்படித் திருத்திக் கொள்ள வேண்டும் என்பதை எல்லாம் நமக்கு உணர்த்தும். நான் எங்கு எழுதினாலும் எனது கதைக்கான கருத்துக்களை வாசிக்கத் தவறமாட்டேன். அதில் இருக்கும் குறை, நிறைகளையெல்லாம் அடுத்து எழுதும்போது முடிந்தளவுக்குச் சரி செய்து கொள்வேன்.

வியாழன், 27 ஜனவரி, 2022

சினிமா விமர்சனம் : மதுரம் (மலையாளம்)

துரம்

மலையாளத்தில் மதுரம் என்றால் இனிப்பு... படம் முழுவதும் அப்படி ஒரு சுவைதான் நிரவிக் கிடக்கிறது.

புதன், 26 ஜனவரி, 2022

புத்தக விமர்சனம் : மின்தூக்கி

மின்தூக்கி

எழுத்தாளர் அபுல் கலாம் ஆசாத் அவர்களின் எழுத்தில் வெளிநாட்டு வாழ்க்கையையும் அதனுடே படிப்பின் முக்கியத்துவத்தையும் பற்றிப் பேசியிருக்கும் நாவல் இது.

திங்கள், 10 ஜனவரி, 2022

பிக்பாஸ் சீசன் - 5 : தாமரைச்செல்வி

தாமரைச்செல்வி-

பிக்பாஸ் சீசன்-5-ல் கலந்து கொண்டவர்களில் கிராமத்து முகமாகச் சிலர் இருந்தாலும் எதார்த்தமான மண்வாசனையுடன் இருவர் மட்டுமே - தாமரைச்செல்வி, சின்னப்பொண்ணு - இருந்தாலும் சின்னப்பொண்ணு மீடியா வெளிச்சம் பெற்றவர் என்பதால் தாமரைச்செல்வியே வெகுளித்தனமாய் தனித்து நின்றார்.

ஞாயிறு, 9 ஜனவரி, 2022

மனசின் பக்கம் : இரை தேடும் பறவைகள்

சென்ற வார இறுதியில் அறையில் அண்ணன் ஒருவருக்கு கொரோனா வந்ததால் அவருடன் இருந்த காரணத்தால் ஒரு வாரமாக சுய தனிமைப்படுத்துதலில்  இருந்து வருகிறோம்.

சனி, 8 ஜனவரி, 2022

சினிமா விமர்சனம் : குருப் (மலையாளம்)

 குருப்-

'என்னை விட எனக்கு இங்கு யாருமே முக்கியமல்ல'- இது படத்தில் வரும் வசனம், இந்த வசனமே கதையைச் சொல்லிவிடும்.

செவ்வாய், 4 ஜனவரி, 2022

மனசின் பக்கம் : திருவிழா - நாவல் குறித்து

 திருவிழா-

இது எனது மூன்றாவது புத்தகம் - இரண்டாவது நாவல்.