மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 4 செப்டம்பர், 2019

பிக்பாஸ் : மீண்டும் சாக்சி கூடவே அபியும் மோகனும்

Image result for biggboss 03 september 2019 images hd
வின் வெளிநாட்டில் இருந்து வந்திருக்கிறார்கள்... அவர்கள் வலி தெரியுமா..? அவங்க ஜெயிக்கணும்...? என்று சொன்னதன் காரணமாய் நிகழ்ந்த 70ம் நாளின் பிரச்சினையின் தொடர்ச்சிதான் ஆரம்பமாய்...

தனக்கான வெற்றிக்காக மற்றவர்களின் வலியை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் கவின் குறித்து ஏராளமாகப் பேசியாச்சு.. அவன் இதற்காகத்தான் பண்ணுகிறான் என திரும்பத் திரும்ப எழுதுவது எழுத்துக்கு அயற்சியைக் கொடுக்கும். மேலும் கவின் தேடும் அனுதாபம் அவனுக்கானதே... நட்புக்காக சசிக்குமார் மாதிரி கவின்னு மக்கள் மனசுல பதிய வச்சிட்டாப் போதும். இறுதியில் வெற்றி நமக்கே என்பதான காய் நகர்த்தல் ஆரம்பத்திலிருந்தே இருக்கு... பத்தாததுக்கு அவன் நட்புக்காக உயிரையே கொடுப்பான்னு லாஸ்லியா பின்பாட்டு வேற... இதையே எழுதுவது எனக்கு வெறுப்பாகவும் இருக்கு. அதனால இதை இத்தோட தொலைச்சிருவோம்.

பிரச்சினையின் காரணமாக ஐவர் அணி வெளியிலும் மூவர் அணி உள்ளேயுமாக இருந்தனர். ஷெரினுக்கு தன்னை கவின் நாமினேட் பண்ணியதில் மிகப்பெரிய கோபம்... இது யாருக்கான விளையாட்டு... யார் விளையாடணும்... அடுத்தவன் வெற்றிக்காக இவன் ஏன் இங்கிருக்கணும்... எனப் புலம்பிக் கொண்டிருந்தார்.

'நீ இங்க ஏன் திரும்ப வந்தேங்கிறது பிக்பாஸ்க்கும் உனக்குமான ஒப்பந்தம்... அதைப் பற்றிப் பேச இவங்க யாரு..? இதைப் பற்றிய விளக்கத்தை அவங்களுக்கு பிக்பாஸைச் சொல்லச் சொல்லு' எனச் சேரன் போட்ட தூபம் நல்லாவே வேலை செய்ய, இந்த பிக்பாஸ் வீடுதான் எனக்கு முக்கியம்ன்னு எல்லாம் இல்லை... எனக்கு ரொம்ப முக்கியமானவங்க வெளியில இருக்காங்க... அதுதான் எனக்கு வாழ்க்கை... இந்தப் பயலுவ பேசினதுக்கு முடிவு தெரியாம நான் விளையாட மாட்டேன்னு மைக்கைக் கழட்டி கேமராவுக்கு மாலையாப் போட்டுட்டு உக்கார்ந்து விட்டார் வனிதாக்கா...

வெளியில் இவதான் ரொம்ப நல்லவ... எனக்கு என்னோட நண்பர்கள் ஜெயிக்கணும் அதனால சேரனையும் ஷெரினையும் சொன்னேன்... இவளுக்கு என்னன்னு கவின் தன் வாதத்திறமையை சாண்டி, தர்ஷன் முன் காட்டிக் கொண்டிருந்தார். அஜீத் சொன்ன மெல்லிய கோடு போல இருவருக்கும் இடையே ஒரு கண்ணாடிக் கதவு மட்டுமே... 

அனுதாபம் தேடுபவன் அடித்து ஆட நினைத்திருந்தால் நேரடியாக மோதியிருக்கலாம்... கைப்புள்ளையாட்டம் வெளிய நின்னு வீரவசனம் பேசிக்கிட்டிருந்தான். நேருக்கு நேருன்னா நமக்கும் நிகழ்ச்சி சுவராஸ்யமாக இருந்திருக்கும்.

கவினிடம் 'என்னை ஏன் நாமினேட் பண்ணுனே..? உன்னோட பிரச்சினைகளுக்கு எல்லாம் நான்தான் உன் கூட நின்னிருக்கேன்...' என ஷெரின் நேரடியாகக் கேட்டார். 

'அவங்க என்னோட பிரண்ட்... அது போக வேற நாட்டுல இருந்து வந்த மூணு பேர்ல ஒருத்தவங்க ஜெயிச்சா நம்ம நாட்டுக்கு பெருமை... மக்களுக்குப் பெருமை... எடப்பாடிக்குப் பெருமை... பன்னீருக்குப் பெருமை... ஸ்டாலினுக்குப் பெருமை... மோடிக்குப் பெருமை... அப்படியே ராகுல் காந்திக்குப் பெருமை... கமலுக்குப் பெருமை... நடிகர் விமலுக்கும் பெருமை... உனக்குப் பெருமை... எனக்குப் பெருமை... மக்களுக்குப் பெருமை... தமிழுக்குப் பெருமை... நம்ம தமிழிசைக்கும் பெருமை... நட்புக்கும் பெருமை... நடிகர் சசிகுமாருக்கும் பெருமை.... பிக்பாஸ்க்குப் பெருமை... பால் குடிக்கும் பிள்ளைக்கும் பெருமை'ன்னு அனுதாப நாயகன் அனல் பறக்க வசனம் பேசினான்.

எல்லாத்தையும் கேட்ட ஷெரின் 'போடா எருமை... என்னை ஏன் நாமினேட் பண்ணுனே... நான்தான் சிறந்த போட்டியாளர்ன்னு சொல்லுறே... பின்ன ஏன் நாமினேட் பண்ணுறே... அதை சொல்லுவியா... பெருமை... எருமை... போடுறே என சற்றே கோபமாய்க் கேட்டார்.

உடனே 'நீ வெற்றி பெறக்கூடிய போட்டியாளர்தான்... ஆனா அவங்க என் நண்பர்கள்... அவங்களுக்காக உன்னை முதுகில் குத்தினேன்... ஏன்னா அவங்க வெளிநாட்டுல இருந்து வந்திருக்காங்க'ன்னு இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராவில் ரோபோ சங்கர் 'பளபளன்னு விடிஞ்சிச்சா... கோழி கொக்கரக்கோன்னு கூவுச்சு'ன்னு பசுபதிகிட்ட கதை சொல்ற மாதிரித் திரும்ப ஆரம்பிக்க, ஷெரின் ஷெர்க் ஆகி எந்திரிச்சிப் போயாச்சு.

வனிதா மைக்கை மாட்டிக்கிட்டு ரகசியம் மட்டுமே பேசும் தனியறைக்கு வாங்கன்னு சொன்னார் பிக்பாஸ். அக்கா உடனே மைக்கை மாட்டிக்கிட்டு அவரை உண்டு இல்லைன்னு பண்றேனா இல்லையா பாருன்னு போக, என்னதான் உன்னோட பிரச்சினை எனக்கேட்டு 'இங்க பாரு தாயி... நீ சொன்ன மாதிரித்தான் இவங்க யாரையும் போங்கன்னு சொல்லி முடிவெடுக்க முடியாது... மக்கள்தான் முடிவு செய்யணும்... அதனால் நீங்க தைரியமா இருங்க'ன்னு வரலாற்று சிறப்பு மிக்க முடிவைச் சொன்னார் பிக்பாஸ். 

அட அரை லூசு பிக்காலிபாஸ்... வாரவாரம் அவனுக டார்கெட் இந்த மூணு பேருன்னா... ஒவ்வொரு ஆளா வெளிய போக மாட்டாங்களா... லாஸ்லியா, கவினுக்கு எல்லாம் கள்ள ஓட்டுப் போட நீங்களே இருக்கும் போது இவங்கதானே வெளியாகணும் என நமக்கே கடுப்பாகும் போது அக்கா கடுப்பை அடுப்பில் வைத்துக் காய்ச்சிய முகத்துடன் வெளியில் வராம என்ன பண்ணும். கடுப்போட வெளியில வந்துருச்சு கண்ணம்மாக்கா.. ச்சை...வனிதாக்கா.

பிள்ளையார் சதுர்த்திக்கு முறுக்குச் சுட்டு தின்னுங்கடான்னு பார்ச்சூன் எண்ணெய்காரன் எண்ணெய்யும் முறுக்குமாவும் கொடுக்க, பிரச்சினையெல்லாம் பின்னால மூட்டை கட்டிப் போட்டுட்டு ஒண்ணாக்கூடி முறுக்குச் சுட்டுச் சாப்பிட்டாங்க... திங்கிறதுக்கு மட்டும் சண்டையாவது... பிரச்சினையாவது... வனிதாக்கா எல்லாருக்கும் ஒருவரி ஆசியுடன் குங்குமம் வைத்து விட்டார். ஆப்பிள் பிள்ளையார் அழகாக இருந்தார். முகனின் கை வண்ணம் போல.

71-ம் நாள் காலையில ரங்கு ரங்கம்மா பாட்டுத்தான் திருப்பள்ளி எழுச்சியாய்... ஷெரினும் சாண்டியும் ஆடினாங்க... மற்றவர்கள் கண்டுக்கலை.

சாண்டி தோசை ஊற்றிக் கொண்டு, தோசைக்கல்லை அப்படியிப்படி எல்லாம் மாற்றி ரஜினி ஸ்டைல் பண்ணிக் கொண்டிருந்தார்... 'மாஸ்டர் மாஸ்டர்ன்னு சொன்னாங்க.... டான்ஸ் மாஸ்டர்ன்னு நினைச்சா தோசை மாஸ்டர்தானா'ன்னு சேரன் ஜோக்கடித்தார். லாஸ்லியா கீரைக்கு வலிக்காமல் உருவிக் கொண்டிருந்தார்.

கவின் சொன்ன காரணம் ஷெரினுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை... 'என்னோட விளையாட்டை யார் விளையாடுவது..? அவன் ஜெயிக்கணும் அவன் ஜெயிக்கணும்ன்னா இவன் ஏன் இங்க இருக்கான்.. இவன் சூப்பராக் கேம் விளையாடுறான்' என வனிதாக்காவிடம் புலம்பி அழுதார். 

உடனே வனிதாக்கா 'அதுதான் நான் ஆரம்பத்துலயே சொன்னேன்.. இது கேம்... தர்ஷனை நம்பாதே'ன்னு சொல்லி மெல்ல மிஷன் தர்ஷனைக் கையிலெடுக்கலாம்ன்னு நினைக்க, 'ஏய் லூசு.. தர்ஷனா இப்ப பிரச்சினை... கவின்தான்.. இங்க யாரையும் நான் பகைச்சிக்க விரும்பலை... அது எனக்கு வேண்டாம்... புரிஞ்சிக்க... சின்னக் கேப்புல கெடா வெட்ட நினைக்காதே'ன்னு கத்த, ஆஹா... நம்ம எதுக்கு தர்ஷனுக்குப் போறோம்ன்னு புரிஞ்சிக்கிட்டாலேன்னு அக்கா ஆறுதலாய் அணைத்துக் கொண்டு அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

சரி... சண்டையெல்லாம் முடிச்சிட்டீங்களா..? இப்ப நான்தான் பட்ஜெட் டாஸ்க்.... மறுபடியும் அடிச்சிக்கங்கன்னு சொல்லி தலகாணி செய்யுங்க.... ரெண்டு  அணியாப் பிரிச்சிருக்கேன் பாருங்கன்னு சொன்னார் பிக்பாஸ். 

புருஷன் பொண்டாட்டியோட கொழுந்தனும் வலி மிகுந்த மலேசியாவும் ஒரு அணி, அடுத்து அக்காவும் அப்பாவும் அவங்ககூட வலி மிகுந்த இலங்கை அண்ணனும் லாஸ்லியாவோட அண்ணியும் ஒரு அணி, தற்காலிகமாக போடப்பட்டிருக்கும் கன்வேயர் பெல்ட் மூலமாக தலகாணி உறை, பஞ்சு, நூல், ஊசியெல்லாம் தருவேன்... மணி அடிச்சதும் ஓடிப்போய் எடுத்துச் செய்ய ஆரம்பிக்கணும். தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகளா அக்காவும், காதல் மைனாவும் இருப்பாங்கன்னு சொல்லிட்டுப் பொயிட்டார் பிக்பாஸ்.

போட்டின்னு வந்துட்டா தர்ஷனை எதிர்ப்பது கஷ்டம்... தர்ஷன் எல்லாத்தையும் எடுக்க, முகன் முயற்சித்துக் கொஞ்சம் எடுத்தார். தைக்க ஊசியில்லை என்றதும் தர்ஷன் ஒரு டப்பாவைத் தூக்கிக் கொடுத்தார். சாண்டி வனிதாக்கா அணிக்குத் தெரியாமல் அவங்க எடுத்து வைத்திருந்த பஞ்சை மூன்று முறை ஆட்டையைப் போட்டார். ஷெரின் பார்த்துட்டு சண்டைக்கு போக காதல் கவின் அதுக்கும் கதை சொன்னான். பஞ்செடுக்கல்லாம் போகாம பிஞ்சு போன செருப்பு மாதிரி நின்றான் காதல் கவின்.

லாஸ்லியாக்கிட்ட எதையும் தேர்வு பண்ணாதே... சரியில்லைன்னு சொல்லி அள்ளி போட்டுடுன்னு சொல்லிக் கொடுத்தது காதல் கவின்தான்.. கூடவே சாண்டியும். தர ஆய்வில் வனிதாக்கா ஒன்பதில் ஏழை தேர்வு செய்து வைத்து உண்மையிலேயே சரியான விளையாட்டை விளையாட, கணவரே கண் கண்ட தெய்வம் என்பதால் அவர் சொன்னபடி இருபத்தி ஒன்றில் பதினாலை சரியில்லை என ஒதுக்கி, ஏழு மட்டுமே சரி என்றார்.

லாஸ்லியாவுடன் தர்ஷனும் ஷெரினும் நேரடியாக மோதினார். சேரன் இதெல்லாம் சரியில்லை என்பதாய் தலை ஆட்டினார். வனிதா நானும் தரக்கட்டுப்பாட்டு அதிகாரியே எனக்கு கேட்க உரிமை இருக்கு என்று மோத, லாஸ்லியா உன்னோட வேலையைப் பாரு போன்னு சொல்லிட்டு எழுந்து போய்விட்டார். வனிதாக்கா விடுவாரா... ஒன்பதில் மூணே சிறந்தது என தன் தரக்கட்டுப்பாட்டை மறு ஆய்வு செய்தார்.

இதற்கிடையே தர்ஷனுக்கும் கவினுக்கும் காரசார விவாதம்... வலி நிறைந்தவன் ஜெயிக்கட்டும்ன்னு விட்டுக்கொடுங்க சேரன்... விட்டுக்கொடுங்க ஷெரின்... எனச் சொன்ன காதல் கவின், இப்ப விட்டுக் கொடுத்திருக்கலாமே... ஆனால் தன் துணைவி செய்தது சரியே என பலமாக வாதாட, தர்ஷனிடம் 'நீ அவனுக்கிட்ட பேசாதே... அவன்தான் துணை தரக்கட்டுப்பாட்டு அதிகாரி போல அதான் இணைக்காக இவ்வளவு பேசுறான்'னு வனிதாக்கா சொல்ல, மறுபடியும் மீன் மார்க்கெட்... 

கிச்சனில் தின்னபடியே 'உனக்கு நான் ஆதரவுக் குரல் கொடுத்ததாலேயே தூக்கிக்கிட்டு வந்துட்டாங்க... நீ எதையும் செலெக்ட் பண்ணாதே...' என காதல் கவின் கத்திக் கொண்டிருக்க, 'நான் உண்மையாத்தானே இருந்தேன்' என கண்ணைக் கசக்கினார் லாஸ்லியா. ஆமாம் உண்மையாத்தான் இருந்தீங்க... ஆனா யாருக்கு உண்மையான்னு யோசிச்சீங்களா மிஸஸ் கவின்?

வெளிய ஷெரினிடம் 'நான் அவனிடம் பேசயில நீ ஏன் குறுக்க வர்றே..?' என வனிதாக்கா கேட்டதும், 'எடப்பாடி பேரைக் கேட்ட தினகரன் மாதிரி அவனைப் பற்றி எங்கிட்ட எதுக்குப் பேசுறே... அவன் அடுத்தவங்களுக்காக வாழ்றவன்... அதுக்காக நல்லா விளையாடுறேன்னு என்னை நாமினேட் பண்ணியவன்'னு ஷெரின் திரும்பிக் கத்த, 'அடேய் அப்பா பிக்பாஸூ மணி அடிச்சி விடுப்பா போய் சாப்பிட'ன்னு சொன்ன சேரன், 'வனிதா ஏன் அதையே குத்திக்குத்தி விளையாடுறே... விடுவே'ன்னு வேற சொல்ல, 'அண்ணே உங்களுக்குத் தெரியாது'ன்னு கிரீஷ் டப்பாவை சேரன் முகத்துலயே உதைக்க, கருத்துப் போன முகத்தோட கம்முன்னு உக்காந்துட்டார்.

போட்டியின் போது மூன்று பொம்மைகளைக் கொடுத்து மந்திரப் பொம்மை பத்திரமா வச்சிக்கங்கன்னு சொன்ன பிக்பாஸ், அதை ரகசியம் பேசும் அறையில் வைக்கச் சொல்லி, கொஞ்ச நேரத்துல உங்க மந்திரங்கள் பலித்ததுன்னு சொல்லி பாட்டுப்போட்டு சாக்சி, அபி, மோகனை உள்ளே அனுப்பினார்.

கவினுக்கு கண்ணுக்குள்ள மரண பயம்...

லாஸ்லியாவுக்கு ஆத்தாடி.. வந்துட்டாளேன்னு நெஞ்சுல வலி...

எல்லாரிடமும் சகஜமாய்ப் பேசி மகிழ்ந்த சாக்சி, கவினையும் லாஸ்லியாவையும் மதிக்கவேயில்லை... ஆஹா சூப்பரு... 

மோகனை அள்ளிக் கொண்டு போனது ஐவர் குழு.

'ஷெரினிடம் நீதான் ஜெயிக்கணும்... உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும்'ன்னு பாசம், நேசம்ன்னு கவிதை சொன்னார் சாக்சி. அதை ரசித்தார் ஷெரின்

தன்னோட ஜட்டியையும் டவுசரையும் தாங்கடான்னு கேட்டார் மோகன்.

'எனக்கும் சாக்சிக்கும் கிடைக்காத வாய்ப்பு உனக்கு கிடைக்கணும்.... நான் பார்த்த லாஸ்லியா இப்ப இல்லை... மீண்டும் நீ பழைய பன்னீர்ச்செல்வமா வரணும்'ன்னு அபி சொன்னார்.

'கவின் என் காதலன்... அவன் சொல்லே எனக்கு மந்திரம்'ன்னு பதில் சொன்னார் லாஸ்லியா.

'உன்னிடம் சாக்சி பேசலையில்ல' என கவினிடம் கேட்டான் தர்ஷன்.

'நல்ல நேரத்துல நீ வந்திருக்கே' என எண்ணெய் ஊற்றினார் வனிதாக்கா.

இன்னைக்கு அடிச்சாடுவாங்கன்னு எதிர்பார்க்கலாம்.. ஒருவேளை எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்ற வாக்கியத்தின்படி மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டில் 63 பந்துகளில் 6 ரன் எடுத்த ராகுலைப் போல நின்னு விளையாடினாலும் ஆச்சர்யமில்லை.

பிக்பாஸ் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

2 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

போங்காட்டம் என்பதை // வரலாற்று சிறப்பு மிக்க // வார்த்தைகளின் மூலம், இன்று தான் கண்டேன்...!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
தொடர் கருத்துக்கு நன்றி.

ஹாஹா... ஏமாற்று வேலைக்குத்தான் இந்த சிறப்பு மிக்க தீர்ப்பு அண்ணா...

அடிச்சி ஆடுறானுங்க... இனி இருக்கும் ஒரு மாதமும் அடிதடிதான்.