மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 21 செப்டம்பர், 2019

பிக்பாஸ் : 'நட்பை விட காதலே பெரிது'-கவின்

நேற்று ஷார்ஜாவில் உலக புகைப்படக் கண்காட்சி இருந்ததாலும் அதில் மதுரையைச் சேர்ந்த போட்டோகிராபர் நண்பர் செந்தில்குமார் அவர்கள் ஆசியாவில் ஒருவராய், இந்தியாவிலிருந்து கலந்து கொண்டிருப்பதால் அவரைக் காணும் பொருட்டும் புகைப்படங்களை ரசிக்கும் பொருட்டும் வியாழன் இரவே ஷார்ஜா போய்விட்டேன். நேற்று நள்ளிரவில் அறைக்குத் திரும்பியதால் பிக்பாஸ் பார்க்கவில்லை... எழுதவில்லை... பார்த்ததுக்கு அப்புறம்தான் பார்க்காமல் இருந்தது நல்லதுன்னு தோணுச்சு... விதி யாரை விட்டது நண்பர்களே...

88,89ம் நாள் நிகழ்வை இப்பத்தான் பார்த்தேன்.... ஆமா இதில் என்னத்தை எழுதுவது...?

Image result for bigg boss day 89 images
(குடும்பமாய் பஞ்சாயத்துப் பண்ணும் கவின் - லாஸ்லியா)

கவின் - லாஸ்லியா காதலைத் தவிர ஒரு மண்ணும் இல்லை...

இறுதிப் போட்டிக்கான டாஸ்க் என்ற போதிலும் இருவரும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்துக் கொண்டும் யாரும் இவர்களை டார்க்கெட் பண்ணக் கூடாதென்றும் விளையாடுவதற்குப் பெயர் என்ன..?

ஷெரினை எப்படியும் அடிக்கலாம்... லாஸ்லியாவைச் சும்மா லேசாத் தொட்டாலே ஒரு பக்க நோட்டுல இங்க பாரு மச்சான்னு... நாவல் எழுதுவதை கவின் செய்து கொண்டிருப்பதை எதில் சேர்ப்பது...?

கவினுக்கு விட்டுக் கொடுக்கலை நீ என்ன நண்பன் என்பதும் கவினுக்காக மற்றவர்களுடன் மோதுவதுமாய் இருக்கும் லாஸ்லியா... போட்டியை மறந்து வேறு பாதையில் பயணிப்பதைப் பிக்பாஸ் இதுவரை சுட்டிக் காட்டாதது ஏன்...?

லாஸ்லியா தோற்றால் கவின் விளையாட்டில் இருந்து விலகுவதும் கவின் தோற்றால் லாஸ்லியா விளையாட்டில் இருந்து விலகுவதுமாய் நகரும் காதலைப் பார்த்துத் தொலைக்க வேண்டிய கட்டாயம் நமக்கில்லையே...

கவினுக்கு விட்டுக் கொடுக்கலைன்னு சாண்டி கூட மோதும் லாஸ்லியா, அவருக்கு ஆதரவாய் இருக்கும் கவின், கவினை நினைத்து பிக்பாஸிடம் அழும் சாண்டி... இதில் சாண்டியிடமே உண்மையான அன்பு இருக்கிறது... கவினிடம் லாஸ்லியா என்ற பொக்கிஷத்தைக் காக்க வேண்டும் என்ற மிகப்பெரிய பொறுப்பு மட்டுமே இருக்கிறது.

சேரன் சொல்வதைப் போல இருவரும் இருவருக்கான பாதுகாப்பை எடுத்துக் கொள்கிறார்கள். மற்றவர்கள் பற்றி இருவருக்கும் கவலை இல்லை.

கவினின் திருவிளையாடல்களில் அவனின் முகத்தைப் பார்க்கும் போது நமக்கு கடுப்புத்தான் வருகிறது... நீண்ட நேரம் காட்டும் போது சுகர், பிரஷர் எல்லாம் எகிற ஆரம்பிக்கிறது... நாம நல்லாயிருந்தாத்தான் நம்ம குடும்பத்துக்கு நல்லதுன்னு தோன்றதால பிக்பாஸ் பார்க்காம இருப்பதே நலம்ன்னு தோணுது.

இருவரும் பாய் போட்டு பக்கத்துப் பக்கத்தில் படுத்திருப்பதை பிக்பாஸ் கேமரா பார்க்க வேண்டியதுதான்... நாமளும் பார்க்கணும்ன்னு என்ன கெரகமா... அதுவும் பர்ஸ்ட் நைட் முடிஞ்ச புதுப்பெண்ணு மாதிரி எந்திரிச்சி உக்கார்ந்திருக்கிற கருமத்தையும் பார்த்துத் தொலைக்க வேண்டியிருக்கு.

இவுகளுக்கு ஒரு பிரச்சினையின்னா அவுக வருவாக... அவுகளுக்கு ஒரு பிரச்சினையின்னா இவுக வருவாக... ஆனா இவுக ரெண்டு பேரால எல்லாருக்கும் பிரச்சினையின்னாலும் பிக்பாஸ், கமல், விஜய் டிவி உள்பட யாரும் வரமாட்டாங்க.

கவின் - லாஸ்லியா விஷயத்தில் நான் பேசுவேன்... ஆனால் இருவரும் வெளியில் போய் ஒருவரைப் பற்றி ஒருவர் புரிந்து கொள்ள ஆறு மாதமாவது ஆகணும்ன்னு சேரன் சொன்னார்... ஆனா ஆறு மாசக்கணக்குல லாஸ்லியா அம்மா ஆயிருவார் போல... கண்றாவியெல்லாம் காட்டிக்கிட்டு உங்களின் பிரதிபலிப்புன்னு கமலஹாசன் வேற பில்டப் கொடுப்பாரு... முடியலை.

சேரன் தன்னோட மகளின் காதல் விஷயத்தில் அதிகம் பட்டிருக்கிறார்... லாஸ்லியா விஷயத்தில் ஒதுங்கியிருத்தலே நலம்... அது சாக்கடையின்னு தெரிஞ்சும் குளிக்க நினைக்கிறது பெரிய மனுசனுக்கு அழகல்ல.

ஷெரின் பந்து டாஸ்க்கில் கவினைப் பற்றிப் பேசியது முழுக்க முழுக்கச் சரியானதே என்றாலும் பிக்பாஸோ, கமலோ அதைப் பற்றிப் பேசப்போவதில்லை.

கவின் பேச ஆரம்பித்தாலே எல்லாருக்குமே கடுப்பாகுதுன்னு பிக்பாஸ் எழுதுறவங்க பதிவுல தெரியுது. ஆனா கமலுக்குத் தெரியலை... அவர் கவினுக்கும் லாஸ்லியாவுக்கும் சொம்படிப்பார்.... அதுவும் ரொம்ப பாதுகாத்துக் கொடுக்கும்படி சொம்படிப்பார்.

சேரன் முதுகுவலியால் துடித்த போது பசங்கதான் உதவியாய் இருந்தார்கள்... தங்கமுட்டை டாஸ்கில் முதுகுவலி காரணமாக விலகியதும், சைக்கிளை முடிந்தவரை ஓட்டியதும் சேரனின் போட்டி மனப்பான்மையை எடுத்துக் காட்டியது.

சாண்டிக்குச் சேரன் ஆறுதலாய் இருப்பது சிறப்பு. கவினுக்காக லாஸ்லியாவிடம் திட்டு வாங்குவது... திரைக்குப் பின்னே அழுவது என சாண்டி பாவமாய் தெரிந்தாலும் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதாய்த்தான் பார்க்கத் தோன்றுகிறது.

தர்ஷனைப் பொறுத்தவரை கவின்-லாஸ்லியா காதல் சுத்தமாகப் பிடிக்கவில்லை. முகன் இருவரின் காதலுக்கு ஆதரவு கொடுக்கிறான். அதனாலேயே போட்டியின் போது கவின் லாஸ்லியாவிடம் பேச, போட்டியை நிறுத்தி வைக்கச் சொல்கிறான்.

சாண்டிக்கு கவின் சுத்தமாக காதலில் விழுந்து கிடப்பது தெரிகிறது... நட்பை விட்டுக் கொடுக்க முடியாத நிலை... அதன் வெளிப்பாடே பிக்பாஸிடம் அழுகை. அவரோ சாண்டியை சிரிக்க வைத்து அனுப்பியது செம.

லாஸ்லியா எல்லா இடத்திலும் கவினை முன்னிறுத்தி, சாண்டி கூட உன்னை முன் நிறுத்தலைன்னு கவின் மனசுக்குள்ள குட்டையை குழப்பி விட்டு தன்னருகில் வைத்துக் கொள்கிறாள்.

கவின் - லாஸ்லியாவை ரொம்ப அழகாகப் பாதுகாக்கிறது விஜய் டிவி... இவர்களை வாழ இந்தவாரம் வெட்டப்பட இருப்பது ஷெரின் என்னும் ஆட்டுக்குட்டி..

ஷெரின் அழகாயிருக்கேன்னு பிக்பாஸ் சொன்னதில் வெற்றிக் கேடயத்தை வாங்கிய சந்தோஷம் ஷெரினுக்கு... வீடெங்கும் குதிக்கிறார்... ஷெரினைப் பார்க்கும் போது மனசுக்குள் பூக்கும் மத்தாப்பூ, லாஸ்லியாவைப் பார்க்கும் போது அணைந்து போய் விடுகிறது.

புருஷன்... புருஷன்... புருஷன்... என்றிருக்க புஷ்பாக்கள் வீட்டிலேயே இருந்திருக்கலாம்... அவர் ஜெயிச்சிட்டு வரணும்ன்னு விளக்கேத்தி சாமி கும்பிட்டுக்கிட்டு இருந்திருக்கலாம்... போட்டிக்குள்ள வந்து உக்காந்துக்கிட்டு அவருக்கு விட்டுக் கொடுங்கன்னு சொல்றதெல்லாம்... முடியலை... காதல் படுத்தும் பாடு.

எங்கப்பன் குதிச்சான்னா போடான்னு சொல்லிட்டு வந்திருவேன்னு சொல்லிட்டா போல, அவளைப் பாதுகாக்க நாந்தானே இருக்கேன்னு பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கண்ணபிரான் மாதிரி பாதுகாப்பு வளையத்தோடவே பயபுள்ள திரியிறான்.

நீ காதலி ராசா... கல்யாணம் பண்ணிக்க ராசா... இன்னைக்கே கமலுக்கிட்டச் சொல்லி கதவைத் திறந்து விடச் சொல்லி கூட்டிக்கிட்டு ஓடு ராசா... அந்த அழகியை இந்த அழகன் கட்டிக்கிறதுல யாருக்கும் கஷ்டமில்லை... நீங்க பண்ணுற ரவுசைத் தாங்குறதுதான் கஷ்டமாயிருக்கு... அதுவும் நேரத்துக்கு நேரம் டிசைன் டிசைனா முகத்தை மாத்துறே பாரு... அந்தக் கொடுமைதான் தாங்க முடியலை அவின்... ச்சை... கவின்.

என்னமோ போங்க... விரிவா எழுத மனசில்லை... ரெண்டு நாள் நிகழ்வும் கவின்-லாஸ்லியா-சாண்டி-ஷெரின் என இவர்களுக்குள்ளதான் சுத்தியது. கவின் லாஸ்லியாவைச் சுத்துறான்... லாஸ்லியா கவினுக்காக கத்துறாள்... இதுல என்னத்தை எழுதுறது...?

முடியலை... இதெல்லாம் ஒரு நிகழ்ச்சியான்னு தோண ஆரம்பிச்சிருச்சு...

கமல் வகையா முட்டுக் கொடுப்பாரேன்னு யோசிக்கும் போதே இன்னைக்கு நிகழ்ச்சி பார்க்கணுமான்னு தோணுது.

அடுத்த பதிவாக நண்பர் செந்தில்குமார் அவர்களுடன் பேசியதைப் பற்றி, உலக புகைப்படக் கண்காட்சியில் பார்த்த வலி நிறைந்த படங்களைப் பற்றி ஒரு நல்லதொரு பதிவெழுதலாம் என இருக்கிறேன்... மாலை எழுதுவேன்... 

இன்றைய பிக்பாஸ் பதிவு திருப்தி அளிக்காதுன்னு நினைக்கிறேன்... அடப் போங்கையா... பிக்பாஸே திருப்தி இல்லை... பதிவு எப்படியிருந்தா என்ன...

முடியல...

முடியல...

இதுக்கு மேல இதுல எழுத முடியல...

பிக்பாஸ் தொடருமா..??
-'பரிவை' சே.குமார்.

2 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

எதிர்பாராததை எதிர்ப்பார்த்து ஏமாற்றம்...!

'பரிவை' சே.குமார் சொன்னது…

ஆமாம் அண்ணா... கருத்துக்கு நன்றி.