மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

அப்பாவா இப்படி..!

ப்பா அம்மாவிடம் சொன்னதைக் கேட்டதும் வருணுக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஆனாலும் உடனே எழுந்து போனால் சரியா வராது என்று நினைத்தபடி டிவி பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் மனசுக்குள் மட்டும் எப்படி இப்படி என்ற எண்ணம் வினாக்களை எழுப்பிக் கொண்டே இருந்தது.

இது நடக்கக்கூடிய காரியமா...? இது எப்படி சாத்தியமானது..? அப்படியா... இப்படியா... என எப்படி யோசித்துப் பார்த்தாலும் அவனுக்கு எப்படி நடந்திருக்கும் என்ற விடை மட்டும் தெரியவில்லை. அதற்கான விடை தெரியவில்லை என்றால் மண்டைக்குள் எழும் அப்படி இப்படியான கேள்விகளால் மூளை சிதறிவிடும் போல் இருந்ததால் கொஞ்சம் ரிலாக்ஸிற்காக வடிவேலு காமெடி பார்க்க ஆரம்பித்தான். அதில் இவன் அதுக்கு சரிவரமாட்டான் என்ற காமெடி ஓடிக்கொண்டிருக்க எதுக்கு சரிவரமாட்டான்னு வடிவேலு தெரிஞ்சிக்க அலைஞ்சிக்கிட்டுருந்தாரு... அதைப் பார்த்ததும் இது எப்படி நடந்திருக்குமென மீண்டும் சிந்திக்க ஆரம்பித்தான்.

நம்ம அப்பா எப்ப சிம்புவோட அப்பாவா மாறுனாருன்னு யோசிச்சான்... நீங்க டிஆர்ன்னு நெனச்சா அது தப்பு... என்னா அவரு ரொம்பக் கூவுறாரு... இவரு கூவவே மாட்டாரு... எதையும் கமுக்கமாத்தான் செய்வாரு... ஆனா இவனைத் திட்டுறதை மட்டும் பக்கத்து வீட்டு நந்தினிக்கு கேக்குற மாதிரித்தான் திட்டுவாரு... அதுவும் கரெக்டா அவ காலேசுக்குப் போகும்போது வாசல்ல நின்னு அத்தனை மாட்டையும் கூப்பிடுவாரு. .. இவனுக்கு அவ மேல ஒரு இது... அவளுக்கும் இவன் மேல கொஞ்சம் இது இருக்குங்கிறதை பார்வையும்... சிரிப்பும் சொல்லும்... இருந்தாலும் சொல்லவோ கேக்கவோ பயம்... என்னைக்காச்சும் ஒரு நாள் சொல்லிப்பான்... சரி விடுங்க... இது காதல் கதையில்லையே... எதுக்கு நாம அவன் காதல் பின்னால போகணும்... இங்க சிம்பு அப்பான்னு இவன் சொன்னது வாலு படத்துல சிம்புவுக்கு வர்ற அப்பா... ரொம்ப எதார்த்தவாதி... பையனைத் திட்டாத ஒரு நல்ல அப்பா... அப்பா அந்தப் படத்தைப் பார்த்துட்டு மாறிட்டாரோன்னு நினைச்சிக்கிட்டான். இருந்தாலும் அதற்கான சாத்தியக்கூறுகள் ரொம்பக் கம்மியேன்னு அவன் மனசு சொல்லிச்சு... காரணம் அப்பாவுக்கு சினிமா பிடிக்காது.


டிவியிலும் மனசு ஓடலை... எல்லாரையும் சிரிக்க வைக்கிற வடிவேலுவே அவனுக்கு போரடிக்க ஆரம்பிக்க, ஒவ்வொரு சானலாக மாற்றினான். 'ஏன்டா இப்படி மாத்திக்கிட்டே இருக்கே... கொஞ்ச நேரம் ஜோக் வையிடா'ன்னு கத்திய தங்கையை எப்போதும் கொலை வெறியோடு பார்ப்பவன், இன்று கொள்ளை அன்போடு பார்த்தான்.... சிநேகமாய் சிரித்தான்... 'ம்க்கும்.. இது இப்ப சிரிக்கும் அப்புறம் அடிக்கும் பேசாம எந்திரிச்சிப் போயிடலாம்' என்று எழுந்தவளை கையைப் பிடித்து இழுத்தான். என்னடா ரொம்ப பாசம் வழியுது என்றாள் பார்வையால்... 'அப்பா சொல்றது நிஜமாடி' கண்கள் விரியக் கேட்டான். 'எங்கிட்டே கேக்குறே... அப்பா அங்கதான் நிக்கிறாரு அவருகிட்ட கேளு... நீ ஒரு தண்டம்... அவரு ஒரு...' அதுக்கு மேல பேசாமல்   படக்கென்று எழுந்து சென்றாள் .அவளுக்கு இன்று அப்பா மேல் தனிப்பட்ட முறையில் கோபம்... எது கேட்டாலும் படிக்கிற புள்ளைக்கு எதுக்குன்னு திட்டுவாரு... ஆனா இன்று அவர் செய்த காரியம்... படிக்காத எருமைக்கு.... அதான்  அப்பாவை '.......' என்று சொல்ல வைத்தது.

எப்படி என்று யோசிக்கவெல்லாம் நேரமில்லை... எது எப்படியோ நடந்தவை நடந்ததாகவே இருக்கட்டும். இனி... அதாவது இன்று முதல் நடப்பவை நல்லதாக அமையட்டும் என்று நினைத்தபடி அப்பா அம்மாவை விட்டு நகரும் வரை காத்திருந்து அவசரமாக எழுந்து அவளிடம் ஓடினான். ' எப்படிம்மா...?அவரு சொல்றது உண்மைதானா...?'என்று அவளின் தோள் சாய்ந்து கேட்டான். 'ரொம்பக்  கொஞ்சாதே அவரு சொன்னது கேட்டுச்சுல்ல... உனக்கு கேக்கணுமின்னுதானே சத்தமாச் சொன்னாரு.... எங்கிட்ட வந்து உண்மையா பொய்யான்னு விசாரிக்கிறே?' என்று அவனைச் சீண்டினாள்.

'அப்பா.... அதுவும் நம்ம அப்பாவா... ஹிட்லராவுல்ல இருந்தாரு... எப்படி இப்படி மாறினாரு... எனக்குப் புரியவேயில்லை... அவருக்கிட்ட எப்பம்மா நான் பேசியிருக்கேன்...  இல்ல அவருதான் எப்ப எங்கிட்ட நல்லாப் பேசியிருக்காரு... என்னைய பாத்தாலே அவருக்கு உள்ளுக்குள்ள எரிச்சல்  எடுக்குது... நானா படிக்க மாட்டேன்னு சொன்னேன்... அது எங்கிட்ட வரலையின்னு சொல்லிருச்சு... சரி போன்னு விட்டுட்டேன்...  வேலைக்குப் போ... வேலைக்குப் போன்னா... சிம் கார்டு மாதிரி வீதி வீதியா போட்டு ஒண்ணு வாங்குனா ஒண்ணு ப்ரின்னு வேலையை விக்கிறானுகளா என்ன... போயி புரூப் கொடுத்து வாங்கிக்கிட்டு வர, நானுந்தான் அலையிறேன்...  கிடைக்கலை...' விஜபி தனுஷ் மாதிரி முகபாவனையை வைத்துக் கொண்டு பேசினான்.

'அப்பா... தம்பி... ராசா... உங்கப்பாரு முகம் கால் கழுவிட்டு சோபாவுல வந்து உக்காந்து டிவி பாக்குறாரு... நான் அவருக்கு காபி கொடுக்கணும்... நீ வேணுமின்னா அவருக்கிட்டே போயி கேளு' என்று அம்மா ஜகா வாங்க, 'ஆமா நா போயிக் கேட்டா கழுவிக் கழுவி ஊத்துவாரு... எனக்குத் தேவை பாரு...' என்று அகன்றாலும் இது எப்படி... அப்பாவா இப்படி... என்ற கேள்வி மட்டும் தொண்டைக்குள் தொக்கி நின்றது.

அப்போது வாசலில் சத்தம் கேட்டதும் எல்லோரும் எழ, முதல் ஆளாய் ஓடினான். அங்கே அப்பா அவனுக்காக வாங்கிய பைக்கை ஷோரும் பையன் ஓட்டி வந்து நிறுத்தினான். மாலை போட்டு பொட்டு வைத்திருந்த வண்டியைப் பார்த்ததும் அவனுக்கு சந்தோஷம் தாங்கவில்லை... 'என்னடா கலரு பிடிச்சிருக்கா...?' என்று பின்னாலிருந்து கேட்ட அப்பாவின் வாயில் முதன் முதலாக 'தண்டச் சோறு... முண்டம்... தறுதலை... வெட்டிப்பய... ஊருசுத்தி... ' எல்லாம் வரவில்லை... அப்பாவிடம் நிறைய மாற்றம்... எப்படி இது நடந்தது...? என்ற கேள்வி எழ, இனி எதுக்கு அதெல்லாம் எப்படியோ நடந்திருச்சு... என்று கேள்வியை அடக்கி ஆச்சர்யக்குறியாக்கி அப்பாவை ஒரு பார்வை பார்த்து மீண்டும் வண்டிக்கு திரும்பினான். மனசு மட்டும் வண்டியில் கை வைக்கத் துடித்தது, ஆனால் அவரு பாட்டுக்கு அர்ச்சனையை ஆரம்பிச்சிட்டான்னு யோசிச்சு பேசாமல் நின்னான்.

 சாவி நீட்டிய பையனிடம் காசு கொடுத்தபடி' தம்பிக்கிட்ட கொடுப்பா' என்றவர், 'போயி சாமிய கும்பிட்டுட்டு வா' என்றார். ஓடிப்போய் தீபாவளி அன்று பலகாரம் சுட்டதும் சாமிக்கிட்ட வச்சி கும்பிடு என்று அம்மா சொல்லும் போது வேகமாகப் போயி சாமிக்கு முன்னாடி வச்சிம் வைக்காமலும் விபூதியை பூசிக்கிட்டு வாய்க்குள் வைக்கும் அதே வேலையை படபடவென செய்து விட்டு வண்டிக்கு ஓடியாந்தான். அவனது பரபரப்பு அவர்களுக்கு இதழோரத்தில் சிரிப்பை வரவைத்தது.

'வண்டியை எடுத்துக்கிட்டு சுத்தாமா...இனியாச்சும் ஒரு வேலை தேடிக்கச் சொல்லு... அவனுக்கு பின்னால பொட்டப்புள்ள ஒண்ணு இருக்குங்கிற நினைப்பு இருக்கட்டும்...' என்று அம்மாவிடம் அப்பா சொல்லிக் கொண்டிருக்க, அதை எல்லாம் கண்டுக்காமல் தங்கையை தேடினான்... முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தவளைப் பார்த்து குரூரமாய் சிரித்தபடி எல்லாம் மறந்து பறக்கலானான்... எதிரே அதே புன்னகையில் நந்தினி... அவளைப் பார்க்கும் வரை அவனது அப்பா ஹீரோவாகத் தெரிய, பார்த்த பின் வருண் ஹீரோவானான்.

-----------------

(இது முதலில் கவிதையாய்த்தான் உருவானது. கவிதையை அப்படியே கதையாக மாற்றுவோமே என்ற முயற்சியில் கவிதையில் விதை எடுத்து கதை ஆக்கியாச்சு... என்ன அங்கங்கே மானே தேனே பொன்மானே போடுற மாதிரி நந்தினி, அம்மா, தங்கை கதாபாத்திரங்கள் இணைத்தாச்சு... கவிதையில் அப்பா வாங்கி வந்ததைப் பற்றி உண்மையா என்று மகன் யோசிப்பதாய் எழுதி கடையில் வாசலில் ஸ்கூட்டர் என்று எழுதியிருந்தேன்...)

-'பரிவை' சே.குமார்.

28 எண்ணங்கள்:

Nagendra Bharathi சொன்னது…

அருமை

KILLERGEE Devakottai சொன்னது…

நல்லதொரு சஸ்பென்ஸ் இனியெனும் அப்பா - மகன் உறவு தழைக்கட்டும்.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை நண்பரே

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

தம 3

ஸ்ரீராம். சொன்னது…

பாசம்தான்!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

சூப்ப்ர் உங்கள் கதை நடை....சொல்லியவிதம்...

தங்கை கோபித்துக் கொண்டு அப்பாவை "...." திட்டியதாய் வரும் போதே ஏதோ அவளுக்கு வாங்கிக் கொடுக்காததை அவள் அண்ணனுக்கு அப்பா வாங்கிக் கொடுத்திருக்கிறார் என்பது புரிய பின்னர் அது பைக்காகத்தான் இருக்கும் என்று யூகித்துக் கொண்டு வாசிக்கையில் அட வாசலில் பைக்!

ஒரு நடுத்தரக் குடும்பத்து நிகழ்வை அழகான கதை வடிவில் சொல்லியிருப்பது அருமை!

துரை செல்வராஜூ சொன்னது…

நல்ல கதை.. அருமை..

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

கவிதை, கதையாக மாறியபோதும் கரு சிறப்பாக அமைந்ததால் ரசிக்கும்படி இருந்தது.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

கதை சூப்பர். யதார்த்தமான நடைஆயும் உரையாடலும் கதைக்கு பலம். அருமை

சசிகலா சொன்னது…

கவிதையை கதையாக்கிய விதம் மிகவும் ரசிக்கும்படியாகவே இருந்தது. அதிலும் தீபாவளி சீன் சூப்பர் சுட்டிப்பைய ஆச மனச அப்படியே படம்பிடிச்ச மாதிரி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க நண்பரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

நன்றி ஐயா...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க துளசி சார் / கீதா மேடம்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

புதிய முயற்சி நன்றாக உள்ளது...

இளமதி சொன்னது…

அருமையோ அருமை சகோ!
என்னவாக இருக்கும்ன்னு மணடையைக் குடைய வைச்சிட்டீங்க..:)
ரொம்பவே ரசிச்சேன் சகோ!

வாழ்த்துக்கள்!

த ம. +1

நிஷா சொன்னது…

கவிதையை கதையாக்கினாலும் சிறுகதைக்குரிய டாபிக் தான். அப்பா திட்டினால் வில்லனாவதும் அன்பாயிருந்தால் ஹீரோவாகுவதும் எல்லா வீட்டிலும் சகஜம் தான். கதை கற்பனையாயிருந்தாலும் நிகழ்வுகள் அனைத்து வீடுகளிலும் நடப்பதுதான். அப்பாக்கள் திட்டுவது பிள்ளைகள் தங்களைபோல் கஷ்டப்படாமல் நல்லா இருக்கணும் என உணர்ந்திட்டால் எப்பவுமே அப்பா ஹீரோதான்.- படித்து விட்டு வேலையில்லாமல் இருக்கும் பொறுப்பில்லாத பையனுக்கு இப்ப எதுக்கு பைக் என நான் கேட்கின்றேன்.

வருணுக்கு அம்மா என்ன பாட்டி ரேஞ்சுக்கு கூட நிஷாஅக்கா பெயரை பயன் படுத்திக்கங்க. இந்த ரோடு ரோமியோக் காதலுக்குள் எம் பேரை இழுக்கவே இழுக்காதிங்கப்பா. நானெல்லாம் நிஜத்திலும் அப்பாவுக்கு ரெம்ப பயந்த பிள்ளை. இத்தனை வயதாகியும் பசங்களே வளர்ந்த பின்னும் அப்பா திட்டினால் கேட்டுகொண்டிருக்கும் நிலை தான். இதில் அந்தந்த வயதில் காதலாவது ஒன்னாவது.

ஆமாம் அப்பாவின் அத்தனை திட்டும் நந்தினி காதில் விழுந்தும் கூடவா வருணுக்கு சொரணை வரலை. கடைசியில் ஹீரோவான அப்பாவின் நினைப்பை சீரோவாக்கி விட்டானே! பாவம் அந்த அப்பா!

வருணின் தங்கை போல் எங்க வீட்டிலும் ஒரு வாண்டு இருக்கு. அண்ணனுக்கு ஒரு யூஸ் பாட்டில் என்ன பிஸ்கட் பாக்கெட் வாங்கிட்டாலும் தனக்கு ஏன் வாங்கல்லைன்னு கோபிச்சிகிட்டு அவனோடதையே பறிச்சி தன் ரூமில் கொண்டு போய் வைச்சிக்கும். இதே வருணை போலதான் அவனும் நமுட்டு சிரிப்பு சிரிப்பான். ஹாஹா.

'பரிவை' சே.குமார் சொன்னது…

தங்கள் பின்னூட்டங்கள் ஒரு பகிர்வைப் போல ஆழமாக அலசி ஆராய்கின்றன அக்கா... தங்கள் பெயரை இந்த கதையின் நாயகிக்கு (நாயகி அல்ல - பேர் மட்டுமே இரண்டு முறை வருவதால் நாயகி என்று சொல்ல முடியாதே) வைத்ததாக யார் சொன்னது?

இப்பல்லாம் என்ன திட்டினாலும் எருமை மாட்டு மேல மழை விழுந்தது போல்தான்... :)

எங்க வீட்டில் பையனுக்கு எதாவது வாங்கினால் பொண்ணுக்கு கோபம் வரும்... அவனை அடித்து அழ வைத்தால்தான் அடங்கும். இதற்காகவே ஸ்ருதி இப்பல்லாம் என்னிடம் தினம் திட்டு வாங்குது...

பொறுப்பில்லாமல் இருக்கும் பையனுக்கு இப்பவாச்சும் பொறுப்பு வரட்டுமேன்னுதான்...

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்கா...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

நிஷா சொன்னது…

நீங்க தான் சொன்னீர்கள் குமார். நல்லா நினைவு படுத்திப்பாருங்க.. நிஷா அக்காதான் நந்தினி ஆனாங்கன்னு எங்கே சொன்னிங்கன்னு நினைவு படுத்துங்க.

பொதுவாக எல்லா வீட்டிலும் இதே கதை தான். அண்ணன் சொல்வான்.. அவளுக்கு கேட்பதெல்லாம் வாங்கிக்கொடுத்து அவளை கெடுக்கிறிங்க. நாளைக்கு ஏதேனும் ஆச்சுன்னால் என்னிடம் வந்து குறை சொல்லகூடாது என்பார். தங்கை இன்னும் ஒரு படி மேலே... வாங்கிக்கொடுத்தால் அண்ணாக்கு மட்டும் உடனே எல்லாம் வாங்கிக்கொடுங்க நான் கேட்டால் மட்டும் இல்லன்னுவிங்கன்னு... இது எதுக்குன்னு எதுவுமே இல்லைன்னால் இரண்டு பேருமே ஒற்றுமையா வரிந்து கட்டிகிட்டு ஏன் அண்ணாக்கு வாங்கி தரமாட்டேன்னு சொல்றிங்க.. எனக்கு வேண்டாம் அவனுக்கே கொடுங்க என்பாள். இந்த பசங்க கிட்ட நாம் மாட்டிகிட்டு திரு திரு என முழிக்கணும்பா..

அட! உங்கூரில் பொறுப்பில்லாத பையனுக்கு பைக் வாங்கிக்கொடுத்தால் பொறுப்புள்ள பையனாகிருவானா? எங்கூரில் அப்படி இல்லப்பா.. ஊர் தான் மேய்வான். மகன் பைக் கேட்டதுக்கு முதல்ல படிப்பை முடி என சொல்லி இருக்கேன்.

எருமை மாட்டின் மேல் மழை பொழிவது என்னமோ நிஜம் தான். நாமல்லாம் அப்ப இப்படி இல்லை அல்லவா?

Unknown சொன்னது…

அருமையாக இருந்தது பாராட்டுக்கள் சகோதரா!