மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 15 மார்ச், 2017

9. என்னைப் பற்றி நான் - ஏஞ்சலின்

ன்னைப் பற்றி நான் பகுதி வாராவாரம் ஆராவாரமாகச் சென்று கொண்டிருக்கிறது. கேட்டதும் எழுதி அனுப்புவதும் தாங்களே மின்னஞ்சல் பண்ணி நான் இந்த வாரம் அனுப்பி வைக்கிறேன் என்று சொல்லி அனுப்புவதும் மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

இந்த வாரம் ஆராவாரமாய்... அருமையாய்... தன்னைப் பற்றிச் சொல்லியிருக்கிறார் ஏஞ்சலின் அக்கா. இவரின் வலைப்பூவில் கருத்து இடுவது... அதுவும் நான் எப்படி கருத்திடுவேன் என்பது உங்களுக்கே தெரியும்... வாசித்தேன் என்பதை தெரியப்படுத்த ஒரு வார்த்தை / ஒரு வரி கருத்து மட்டும்தான் இடுவேன். அப்படியான ஒரு நட்புத்தான் இவரிடம்... நான் மலையாளப் படங்கள் குறித்து பகிரும் போது என் தளம் வந்து கேட்டு படங்களைப் பார்த்த சிலரில் அக்காவும் ஒருவர் அவ்வளவே. 

என்னைப் பற்றி நான் பகுதிக்கு எழுதி அனுப்ப முடியுமா என்று கேட்டு மின்னஞ்சல் அனுப்பியதும் விரைவில் அனுப்புறேன் என்ற பதில் மின்னஞ்சல் வந்தது. அதன் பின் இரண்டு மூன்று நாளில் எழுதியும் அனுப்பிவிட்டார். இனி இரண்டு வலைப்பூக்களில் எழுதும் அவர், அவரைப் பற்றி பகிர்ந்தது தங்கள் பார்வைக்கு கீழே... வாசித்து கருத்தைச் சொல்லுங்க...



ன்னைப்பற்றி  பதிவுக்கு என்னை எழுத அழைத்த சகோதரர் குமாருக்கு நன்றி.

என்னைப்பற்றி நான் என்ன சொல்ல :) முதலில் வலைப்பூ ஆரம்பித்த கதையுடன் துவங்குகிறேன். 

பிப்ரவரி 2011 முதல் வலைப்பூவில் எழுதிக்கொண்டிருக்கிறேன். முதலில் துவங்கியது எனது ஆங்கில craft  வலைப்பூ papercrafts.

அப்படியே எல்லார் வலைப்பூக்களுக்கும் சென்று பின்னூட்டமிடுவேன் .ஆங்கில பின்னூட்டங்கள் தான். பிறகு மெதுவா தமிழில் பின்னூட்டமிட்ட ஆரம்பித்தேன். பிறகு சில நண்பர்கள் பிடிச்சி தள்ளிவிட்டதில் தமிழிலும் காகித பூக்கள்  என்ற வலைப்பூவில்  எழுத துவங்கினேன். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது தெரியாமல் செய்து விட்டார்கள் .அதனால் அவங்களை ஒன்றும் சொல்ல வேண்டாம் :).

எனது முதல் பதிவில் ஒரு பிரமாணம் கூட எடுத்தேன் சமையல் குறிப்புகள் போட மாட்டேன்னு அதெல்லாம் காற்றில் போய்  அப்புறம் நான்  சமையல் குறிப்பிலும் கலக்க ஆரம்பிச்சுட்டேன் (நானே என்னை புகழ்ந்தால்தான்  உண்டு :)ஆரம்ப காலத்தில் இந்த கமெண்ட் மாடரேஷன் பற்றி எல்லாம் எனக்கு ஒன்னும் தெரியாதா...அப்போ கமெண்ட் போட்டு ஏன் வெளியாகல்லைனு மீண்டும் மீண்டும் போட்டு விடுவேன் எத்தனை பேர் நொந்து போனாங்களோ :)  ரொம்ப நாள் கழிச்சே கண்டுபுடிச்சேன் கமெண்ட் மாடெரேஷன் என்பது பற்றி...

சரி இப்போ கொஞ்சம் என்னைப்பற்றி சொல்லிக்கறேன்

நான் ஏஞ்சலின், பெங்களூரில் பிறந்து சென்னையில் வளர்ந்து பின்பு பல வருடங்கள் வெளி நாட்டு வாழ்க்கை... ரெண்டு பாட்டிகளோட  ஊரும் நாகர்கோயில்... ரெண்டு தாத்தாக்களோட  ஊரும் மதுரை... அப்பா ஊர் மதுரை...  அப்போ நான் எந்த ஊர்னு சொல்லுவது :??? யாதும் ஊரே யாவரும் கேளீர்னு சொல்லிக்கொள்கிறேன் :) 

ஒரு ரகசியம் சொல்லணும்... இப்போதெல்லாம் நான்  தமிழில் பேசினாலே வேற மொழியில் பேசுகிறாற்போலிருக்காம் சிலர் சொன்னாங்க :). ரொம்ப கஷ்டப்பட்டு சில நட்புக்களுக்கு வாழ்த்து அட்டையில் தமிழில் வாசகம் பேனாவால் எழுதினேன்.

கணவர்  மற்றும் மூன்று மகள்கள். மூத்த மகள் 11 ஆம் வகுப்பு படிக்கிறாள்... மற்ற இரண்டு மகள்களும் நாலுகால் மியாவ்  மகள்கள் :)

ஹோம் ஸ்கூலிங்தான்... இவங்க மட்டுமில்லாம அப்பப்போ வந்து என்னை சந்தித்து செல்லும் சில பறக்கும் மற்றும் நடக்கும் நாலு கால் செல்லங்களுமுண்டு... நான் வாயில்லா ஜீவன்களின் நண்பி மற்றும் அவற்றை நேசிக்கும் காதலி :)

நான் எங்கள் ஆலயம் மற்றும் எங்கள் பகுதி லைப்ரரியில் வாலண்டியரிங் செய்கிறேன்... படித்தது விலங்கியல்  மற்றும் ஆசிரியப்பயிற்சி... ஆனால் படித்த படிப்புக்கு துளியும் சம்பந்தமில்லாமல் வாழ்க்கை வேறு திசையில்  செல்கிறது...  பேப்பர் உருட்டுவதும் :) அதான் QUILLING  மற்றும் தோட்டம் போடுவதும்நடைப்பயிற்சிவாலண்டியரிங் மற்றும் எழுத்து என இவை அனைத்தையும் கால  அட்டவணை போட்டு செய்து கொண்டிருக்கிறேன். அதுவும் மீள்சுழற்சி கைவினைப்பொருட்கள் செய்வதில் எனக்கு மிகுந்த ஆர்வம்.

2012 முதல் பசுமை விடியல் மற்றும் நலம் ஆகிய இரு முகப்புத்தக பக்கங்களிலும் வீட்டு தோட்டக்குறிப்பு ஆரோக்கிய குறிப்பு விழிப்புணர்வு என எழுதி வருகிறேன். எழுத வேண்டும் என்கிற ஆர்வத்தில் சில நேரம் கட்டுப்பாடின்றி அரைப்பக்க செய்தியை மூன்று பக்கம் எழுதி விடுவேன் :) 

வெளிநாட்டு வாழ்க்கையில் பல்வேறு மனிதர்களை சந்தித்துள்ளேன் குறிப்பாக முதியோர் அப்புறம் குழந்தைகள்... இவர்களுடன் பேசுவது  பழகுவது மிகவும் பிடித்தமானது எனக்கு... நேருக்கு நேர் திட்டும் எதிரியை நேசிப்பேன் பின்னாலிருந்து குத்தும் நட்பை தூசியாய் தட்டி செல்வேன். 

இயற்கையை அதன் அழகை ரசிப்பதில் எனக்கு அதிக ஆர்வமுண்டு. சமீப காலங்களில் குமார் சகோவின் விமர்சனங்களை படித்து அதிகமாக மலையாள திரைப்படங்களை பார்க்க ஆரம்பித்துள்ளேன் :)

உடல் நலனை பேணிக்காப்பது அனைவருக்கும் அவசியம் ஆகவே ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுகிறேன்... உணவு கட்டுப்பாடு மற்றும் நடைப்பயிற்சி செய்கிறேன்... தொலைக்காட்சி நிகழ்சிகளைப் பார்ப்பதில்லை... குப்பை உணவுகளைத் தொடுவதில்லை... கோக் பெப்சிக்கு எங்கள் வீட்டில் அனுமதியில்லை... தோட்டத்து செடியின் பூச்சிகளுக்கு மட்டுமே அவை பயன்படுத்துகிறேன் :).
  
எழுத்து என்பது மிகவும் அற்புதமான விஷயம் நாம் பார்த்த தை அனுபவித்ததை உணர்ந்ததை எழுத்தாக்குவது உண்மையில் அழகான அனுபவம். எனக்கு வலைப்பதிவர்கள் பலரை பார்க்கும்போது எப்படி இவர்களால் மட்டும் இவ்வளவு அழகா எழுத முடியுது என வியப்பேன் !!! அவர்களில் சிலர் பற்றி சொல்கிறேன். 

வானதி மாதிரி திருமதி ஸ்ரீதர் எனும் ஆச்சி மாதிரி  எழுத ஆசை... அனுராதா பிரேம் போல் அழகாக பென்சில் ஓவியம் வரைய ஆசை... பிறகு சிரிக்க சொல்லிக்கொடுத்தது அதிரா... யோசிக்க சொல்லிக்கொடுத்தது கௌசல்யா தைரியமாய் கருத்துக்களை  சொல்ல வைத்தது கிரேஸ், நிஷாந்தி... அனுதினமும் அன்பு, அன்பே பிரதானம் என அனைத்தையும் நேசிக்க கற்றுக்கொண்டது  தில்லைஅகத்து கீதா மற்றும் துளசி அண்ணாவிடம்... ஆச்சர்யப்படுத்துவது சீனுகார்த்திக் சரவணன் எழுத்துக்கள். 

ஊக்கமூட்டுவது கோபு சார்கஸ்தூரிரங்கன்... உற்சாகப்படுத்துவது ஸ்ரீராம்கோமதி அக்காவல்லிம்மாமனோ அக்கா, மஹிதேனக்காநேசன், மனசு குமார்மதிப்பிற்குரிய துரை செல்வராஜூ ஐயா  மற்றும் சமீப காலமாக தொழில்நுட்ப பதிவர் மொஹம்மத்...    மலைக்க வைப்பது திருக்குறள் சொல்லும் சகோதரர் டிடி !!மற்றும் பின்னூட்டங்களால் நிறைய விஷயங்களை சுரேஜினிசித்ரா  மூலமாகவும் கற்றுக்கொண்டிருக்கிறேன். 

இப்படி எத்தனையோ பேர்...  அப்புறம் நம்பிக்கையும் தைரியமும் தருவது எங்க மதுரைத்தமிழனின், தம்பி சதீஷின் மற்றும் ஆனந்த் aka ஆவி யின்  நட்பு... சிலர் பெயரை விட்டுப்போயிருக்கலாம் ஆனால்  மறக்கவில்லை. ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விஷயங்களை கற்றுக்கொண்டுள்ளேன். இன்னும் கற்றுக்கொண்டிருக்கிறேன்.

என்னுடைய ஆசை எப்படியாவது வலைப்பூவை விட்டு ஒதுங்கியிருக்கும் அம்முலுவானதி, ஆச்சிஇளமதி   போன்றோரை மீண்டும் பதிவுகள் எழுத வைக்கணும்.

என்னைப்பற்றி வேறே சொல்ல ஏதாவது இருக்கிறதா விடுபட்டுள்ளதா என்று என்னுள்  தேடுகிறேன் :) அவ்வளவுதான் வேறொன்றுமில்லை.

குடும்பம்... வாயில்லா ஜீவன்கள்... அன்பான முகம்தெரிந்த / முகம் அறியாத, நேரில் சந்திக்காத நட்புக்கள்.... கைவினை... எனது வலைப்பூக்கள்... இதுதான் எனது அன்பு சூழ் சின்னஞ்சிறிய உலகம் .

மீண்டும் ஒருமுறை என்னைப்பற்றி பகுதி எழுத அழைத்த சகோதரர் குமாருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

நட்புடன்,
ஏஞ்சலின்


என்னைப் பற்றி நான் பகுதிக்கு கேட்டதும் அனுப்பிக் கொடுத்தது மட்டுமில்லாமல் தாங்கள் விரும்பும் பதிவர்களாக நம் பதிவர் அனைவரையும் சொன்ன இடத்தில் எனக்கும் இடம் கொடுத்தமைக்கும் மிக்க நன்றி. தங்கள் வலைப்பக்கத்தில் தொடர்ந்து எழுதுங்கள் அக்கா...

மீண்டும் ஒரு முறை நன்றியைச் சொல்லிக்கிறேன்.

அடுத்த வாரம் மற்றுமொரு வலை ஆசிரியரின் பகிர்வோடு....
 -'பரிவை' சே.குமார்.

223 எண்ணங்கள்:

223 இல் 1 – 200   புதியவை›   புத்தம் புதியவை›
Avargal Unmaigal சொன்னது…

மியாவ் மியாவ்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

முதலில் நன்றி சகோதரி...

திட்டமிட்ட வாழக்கை... அனைத்து உயிர்களிடமும் அன்பு... வாழ்த்துகள்...

துரை செல்வராஜூ சொன்னது…

புதன் கிழமை தோறும் பூத்துக் குலுங்கும் வலைப் பூக்களுள் அருமை..

தங்கள் அன்பினுள் தஞ்சையம்பதியையும் குறித்ததற்கு மகிழ்ச்சி.. வாழ்க நலம்..

Avargal Unmaigal சொன்னது…

ஓ... நீங்கதான் அந்த ஆங்கில கிராப்ட் தளத்தில் எழுதுவதா நான் என்னமோ ஒரு ஆங்கிலோ இண்டியப் பெண்மணி நடத்திய தளம் என்று அல்லவா நினைத்து கொண்டிருந்தேன்

Avargal Unmaigal சொன்னது…

//அப்படியே எல்லா தளங்களுக்கும் பின்னுட்டமிடுவேன்//


ஆனால் மதுரைத்தமிழன் தளத்திற்கு மட்டும் பின்னுட்டமிடமாட்டேன்.காரணம் மதுரைத்தமிழன் மிக மோசம் என்று ஊரில் உள்ள பெரிசு யாராவது சொல்லி இருக்குமே ஹீஹீ

Avargal Unmaigal சொன்னது…

சமையல் குறிப்பில் நீங்க கலக்க ஆரம்பிச்சதற்கு அதிக அளவு சமையல் குறிப்பு படித்ததினால் தானாம் சமைச்சதினால் அல்ல என்று அதிரா கருத்து சொல்ல சொன்னார் ...

மீரா செல்வக்குமார் சொன்னது…

அழகு நடை....வாழ்த்துகள்

Angel சொன்னது…

மிக்க நன்றி தம்பி குமார் மற்றும் அனைவர்க்கும் ..ஒவ்வொருவருக்கும் சர்ச் போயிட்டு வந்து பின்னூட்டமளிக்கிறேன் ..

ஸ்ரீராம். சொன்னது…

அறியாத தகவல்களும் உண்டு சகோதரி ஏஞ்சல் பதிவில். தமிழே மறந்து விட்டது என்கிறார். தமிழகம் கடைசியாக எப்போது வந்தீர்கள் சகோதரி?! நாலு கால் செல்லங்களின் நேசர் என்பது தெரியும். பதிவில் என்னையும் குறிப்பிட்டுள்ளமைக்கு நன்றி. ஏஞ்சலை எங்கள் தளத்தில் முதலில் நான் அறிந்தது எனது "நாய்மனம்" பதிவில்.

நிஷா சொன்னது…

நேருக்கு நேர் திட்டும், விமர்சிக்கும் எதிரியை நேசிப்பேன், பின்னாலிருந்து நட்பெனும் பெயரில் குத்தும் தூரோகியை தூரமாக நிறுத்துவேன். நானும் சேம் தான் மேடம். அசத்தலாக என்னைப்பற்றி எப்படி எழுத வேண்டும் எனும் முன்மாதிரியாக எழுதி இருக்கின்றீர்கள். அருமைஏஞ்சல். இந்த வலை, இணையம் தந்த மிகப்பெரிய வரப்பிரசாதம் உங்களை போன்ற அன்பானவர்கள் நட்பூக்கள் அறிமுகமும் அன்பும் தான். நானும் கிரேஸ், மதுரைத்தமிழன் நீங்கள், நான் என கலந்து பேஸ்புக்கில் அரட்டை அடிக்கும் போது மனசு இலேசாகி மனம் விட்டு சிரித்திருக்கின்றேன். அதை விட எதிர்க்கருத்தானாலும் நமக்குள் தைரியமாக எழுதலாம் எனும் புரிதலையும் நம் நட்புக்குள் உணர்ந்திருக்கின்றேன். எழுத்தினை மட்டும் விமர்சித்து நட்பை அதனுள் நுழைக்காத இந்த மாதிரி புரிதல்கள் என்றும் தொடர வேண்டும்.

வலைப்பூவில் நீங்களும் எனக்கு இப்போது தான் அறிமுகம். ஆனால் உங்கள் எழுத்துக்களை இங்கே காணும் போது மகிழ்ச்சியாக இருக்கின்றது. இதையே தொடருங்கள்.

நல்லதொரு பதிவுத்தொடருக்கு குமாருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.

நிஷா சொன்னது…

எல்லாம் சரி. நம்ம கிரேஸ் நிரம்ப நாட்களாக காணோம், பையனுக்கு உடல் நிலை சரியில்லை என பதிவெல்லாம் இட்டபின் அவர் பதிவுகள் படித்த நினைவும் இல்லை என்னாச்சுப்பா?

நிஷா சொன்னது…

ஆஹா! ஆமாம், நீங்க அரசியலா மட்டும் தானே எழுதி குவிக்கின்றீர்கள் சில நேரம் உங்க பதிவுக்கு பின்னூட்டம் இட்டால் உருட்டுக்கட்டை பார்சல் வீட்டு வாசலுக்கு வருமோ என பயமாம் ஏஞ்சலுக்கு. அத்துடன் எல்லா வீட்டு பெண்களுக்கும் அரசியலும், மதமும் கருத்திடாமல் ஒதுக்கப்பட வேண்டும் எனும் நிர்ப்பந்தமுமுண்டாம். அரசியல் விட்டால் வீட்டுக்கார அம்மாவிட அடிவாங்கிய கதையை எழுதி எங்களை அழ வைப்பீர்கள் என்பதனாலும் எல்லோரும் அலறி அடிச்சி ஓடுவார்களாம். ஹாஹா.

நிஷா சொன்னது…

ஏஞ்ச்ல் என்னை நிஷாந்தி என சொன்னால் யாரோ என நினைப்பார்கள். நிஷா தான் இந்தப்பக்கம் எல்லோருக்கும் தெரியும்.

Nagendra Bharathi சொன்னது…

அருமை

G.M Balasubramaniam சொன்னது…

இந்த இளைஞனைப் பற்றி அறியாதவரும் இவனது எழுத்துகளைப் படிக்காதவரும் தமிழ் வலை உலகில் இருக்கின்றனர் என்னும் உண்மை சுடுகிறது வாழ்த்துகள்

முற்றும் அறிந்த அதிரா சொன்னது…

நோஓ நீங்க பவ் பவ் எனச் சொல்லியிருக்கோணும்ம்ம்ம்:)

முற்றும் அறிந்த அதிரா சொன்னது…

ஆஆஆஆஆஆஆஆஆவ்வ்வ்வ்வ் என்னாதூஊஊஊஉ இன்று என்னைப் பற்றிக் கூறியிருப்பவர் ஏஞ்சலினாஆஆஆ... நினைச்சேன் நினைச்சேன்ன் 2,3 நாளா அஞ்சுவின் நடை ஸ்டைலே மாறி இருந்திச்சா ... அப்பவே நினைச்சேன்ன்ன்ன் ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போகுதென:), கரெக்ட்டா நடந்திட்டுது:)

முற்றும் அறிந்த அதிரா சொன்னது…

என்னால இப்போ முழுமையா படிக்ககூட முடியல்ல:(, கிடைக்கும் நேரத் தில் ஓடி வாறேன் திரும்ப.... அதுவரை Dறுத் ஐ கொஞ்சம் றிலே ஓடச் சொல்லுங்கோ பிளீஸ்ச்ச்:)

முற்றும் அறிந்த அதிரா சொன்னது…

நம்மிருவரையும் கட்சி புறிச்சு தனிக்கட்சி ஆரம்பிக்க சதி நடக்குதூஊஉ.... அஞ்சு நான் 99 வீதம்தான் அப்பாவி என நீங்களே சொன்னீங்க எனக்கு... ச்ச்ச்ச்ச்ச்சோஒ என் கையை இறுக்கி பிடிங்கோ கட்சியை முதல்ல கலைஞ்சிடாமல் இழுத்து நிறுத்துவோம்ம்ம்ம்ம்ம்:)

KILLERGEE Devakottai சொன்னது…

யதார்த்தமான எழுத்து வாழ்க வளமுடன் - கில்லர்ஜி

Angel சொன்னது…

Garrrrr :) மாமி இவர் இன்னும் அந்த A I பெண்ணை மறக்கலை உங்களுக்கு ஒரு சப்பாத்தி datta ப்ரெஸ் அனுப்பியிருக்கேன் அதை வச்சி இவர் தலையில் கொட்டுங்க

Angel சொன்னது…

ஆவ் ஆவ்வ் :) மியாவ் பௌ பௌ கீச் கீச் :) quack quack

Angel சொன்னது…

நட்புக்கள் என்னை தொடர்ந்து ஊக்குவிப்போர் நீங்கலாம் இல்லைனா எப்பவோ பிளாக்கை மூட்டை கட்டி விட்டிருப்பேன் ..நன்றி சகோ

Angel சொன்னது…

ஆமாம் ஐயா ..இந்த என்னைப்பற்றி //மிக அருமையாக சென்றுகொண்டிருக்கு குமாருக்கு பாராட்டுக்கள் ..மிக்க நன்றி ஐயா

Angel சொன்னது…

@ Avargal Unmaigal கர்ர்ர்ர்ர் :) நான் ரொம்ப நாளா உங்க பிளாகை தொடர்கிறேன் ஆனா ஆரம்பத்தில் நீங்க யார்கிட்டயும் பேசாம ரொம்ப அமைதியா இருப்பிங்க :) கமெண்ட் கூட கொடுத்திருப்பேன் ..என் நினைவு சரின்னா உங்க வலையில் ஒவ்வோர் ஊரும் அதன் ஸ்பெஷாலிட்டியில் என்ன வரும்னு ஒரு பதிவில் என் பின்னூட்டம் இருக்கும் தருமபுரி தக்காளி மலபார் பீடி ..தேடி பாருங்க கிடைக்கும் ..
ஹா ஹா :) அப்படி யாரும் சொல்லலை .அப்படி சொன்னாலும் அந்த காதிலே வாங்கி அடுத்த காதுக்கு போகுமுன்னே அதே வழியா வெளியே அனுப்பிடுவேன் .

Angel சொன்னது…

@ Nisha ஹா ஹா :) இல்லைப்பா மதம் குறித்து என்னிக்கும் நான் விவாதத்தில் நுழைவதில்லை :) அது அப்பா சொல்லியிருக்காங்க அதை அப்படியே தொடர்கிறேன் ..சில நேரத்தில் பதில் கொடுக்க தோன்றினாலும் அப்படியே அமைதியா போயிடுவேன் .

நம்ம நாட்டு அரசியல் ஹையோ அதை பற்றி பேசக்கூட ஆசையில்லை ..

Angel சொன்னது…

ஹா ஆஹா :) அது இந்த உலகத்துக்கே தெரிஞ்ச விஷயமாச்சே :) எங்க தலைவிகள் சமையல் ராணிகள் ஜலீ ஆசியா பாயிஜா மேனகா மஹி இவங்கல்லாம் தானே எனக்கு ட்ரெயினிங் கொடுத்தவங்க

Angel சொன்னது…

ஹையோ நோ :) எனக்கு தெரியும் உங்களை ஆனா கொஞ்சம் பயம் எங்க பெரியப்பா ஒருத்தர் இருந்தார் உங்களை மாதிரியே அவருக்கும் பெரிய மீசை உங்களை பார்க்கும்போது அடிக்கடி அவர் நினைவு வரும் ..அது என்னனா நாங்க கொஞ்ச ஜாலியா அரட்டை அடிக்கும் கூட்டம் அங்கே வந்து அரட்டை அடிச்சா ஸ்டாண்ட் அப் ஓன் தி பென்ச் சொல்லி தலைல கொட்டுவீங்கன்னுதான் பயந்திட்டு வரலை .இனிமே பாருஙக உங்க இடமே அதிரப்போகுது :)

Angel சொன்னது…

வருகைக்கும் அழகிய பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ ..

Angel சொன்னது…

ஆமாம் நிஷா நானும் நிறையதடவைகள் கவனிச்சிருக்கேன் நாம ரெண்டு பேரும் ஒரே நேரம் கமெண்ட் ஒரே விஷயம்பற்றி எழுதியிருப்போம் அதில் நான் பேச்சு தமிழில் என் கருத்துக்களை கூறியிருப்பேன்நீங்க அழகா தெளிவான தமிழில் அதே கருத்தை சொல்லியிருப்ப்பீங்க :) high 5 அதுதான்ப்பா எனக்கும் நேருக்குநேர் சொல்லிடறது பெட்டர் அப்படிப்பட்ட நட்புக்கள் கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும்

Angel சொன்னது…

அப்படியா நான் அங்கில்லாததால் மெசேஞ்சர் ல கூட தொடர்பில்லை ..பிஸியாகவும் இருக்கலாம் .ப்லாகில் பின்னூட்டம் தந்து பார்க்கிறேன்

Angel சொன்னது…

நான் முகப்புத்தக பேர் அப்படியே எழுதிட்டேன் ..அழைக்கும்போது நிஷான்னு தான் சொல்வேன் பரவாயில்லை :)
எல்லாரும் கேட்டுக்கோங்க இவங்க பேர் நிஷா நிஷாந்தின்னு சுருக்கமா கூப்பிட்டேன் .பிஸியான நேரத்திலும் ஓடோடி வந்து பின்னூட்டமிட்டதற்கு தாங்க்ஸ்பா

Angel சொன்னது…

மிக்க நன்றிங்க நாகேந்திர பாரதி

Angel சொன்னது…

வருகைக்கும் பாராட்டுக்களும் மிக்க நன்றி சகோ

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ஓ! ஏஞ்சல் சகோ/ஏஞ்சல்!! உங்களைப் பற்றி அறிந்தவை அனைத்தும் பதிவில் உள்ளது!! அதே அதே!! நேரில் பேசுவது போன்று அழகான நடையில் சூப்பர் போங்க!! எங்களிடமும் கற்றுக் கொண்டீர்களா?!!! வியப்பு! மிக்க நன்றி ஏஞ்சல் சகோ/ஏஞ்சல்! இருவரிடமிருந்து கருத்து வரவேண்டுமில்லையா அதான் தாமதம்!! அருமையாகச் சொல்லிச் சென்றமைக்கு வாழ்த்துகள்!!

Avargal Unmaigal சொன்னது…


ஹலோ நிஷா அர்சியல் பதிவுகளுக்கு பெண்கள் மட்டுமல்ல பல ஆண்களும் கருத்திடமாட்டார்கள் என்று தெரியும் சும்மா ஏஞ்சலிடம் வம்பு இழுக்கணும் என்றுதான் எழுதினேன்.... மேலும் நாம் இப்படி கருத்துகள் மூலம் ஒருவரை ஒருவர் கிண்டல் பண்ணுவதை நாம் மட்டுமல்ல பலரும் ரசித்து படிக்கிறார்கள் என்று தெரிகிறது அழுவது உடலுக்கு நல்லது என்பதால் என் சோகதையை சொல்லி உங்களை எல்லாம் அழ வைக்கிறேன் ஹீஹீ

Angel சொன்னது…

வருகைக்கும் பாராட்டுக்களும் மிக்க நன்றி சகோ ஸ்ரீராம் :) ஆமாம் இன்னும்நிறைய இருக்கு அப்புறம் பதீவு ரொம்ப பெரிசாகிடும்னு கண்ட்ரோல் செஞ்சு குட்டியூண்டா எழுதிட்டேன் :)
கடைசியா வந்தது 2012 .தமிழ் எழுதறதில்லையே இவ்வளவு ஏன் எழுதும் பழக்கமே போயிடுச்சே அதை சொன்னேன் .இப்ப தமிழில் iப்ப //அப்படின்னு அவசரத்தில் எழுதுவேன் பேப்பரில்.பல வருடம்( 19) வெளிநாட்டில் ஆகவே எங்க சென்னை தமிழ் என்னை விட்டு போச்சு :) நட்பு ஒருவர் வீட்டுக்கு போன் செய்திருந்தேன் துக்கம் விசாரிக்க அந்த பொண்ணு துக்கத்தை மறந்து நான் கலவையா பேசினதை கேட்டு சிரிச்சிட்டாங்க :) அப்போதானே தெரிஞ்சது தமிழை எவ்ளோ கலந்து பேசி வச்சிருக்கேன்னு
நான் அதுக்கு முன்னாடியே உங்க பிளாக்ல பின்னூட்டம் தந்திருக்கேன் என் பொண்ணு குவில்லிங் மயில் கூட நாம ஏரியாவில் வந்திருக்கு .

Angel சொன்னது…

high 5 :) @miyaav athira

Angel சொன்னது…

நானும் நீங்களும் என்னிக்கு ப்ரெண்ட்ஸானோமோ அன்னிலேருந்தே அசம்பாவிதம் தான் :) ஹா ஹா
இதில மூணு நாள் முன்னாடி தெரிஞ்சிச்சாம் பூனைக்கு

Angel சொன்னது…

இல்லை அவர்கள் ட்ரூத் அசைய முடியாது தற்சமயம் தோப்புக்கரணம் போட்டிட்டிருக்கார் :) மாமிக்கு datta press அனுப்பியிருக்கேன்
அதனால் நீங்களே சீக்கிரம் வாங்க

Avargal Unmaigal சொன்னது…

ஹலோ இப்ப கூட நான் யார் கூடவும் பேசுவதில்லையே,,,,,,, இதனால் சகல பதிவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் ஏஞ்சல் அவர்கள் என் தளத்தில் ஏதோ ஒரு பின்னுட்டம் இட்டு இருக்கிறாரம் அதை கண்டுபிடித்து தருபவர்களுக்கு என் வீட்டில் நல்ல விருந்து தரப்படும் ( விசா மற்றும் விமான டிக்கெட் செலவும் மட்டும் உங்களுடையது..

Angel சொன்னது…

இங்கயும் அங்கேயும் குதிச்சி கமெண்ட் போட்டதால் யார்யாருக்கு பின்னூட்டம் போடலைனு மாடரேஷன் முடிஞ்சி தான் தெரியும் மீண்டும் வந்து பின்னூட்டமிடறேன்

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ஏஞ்சல்!! அப்படியே என்னைக் கண்டது போல்!! நான் அடிக்கடி நினைப்பது.. ஒரு வேளை ஏஞ்சல் முற்பிறவி ஒன்று இருந்தால் அதில் நான் ஏஞ்சலின் சகோதரியாகவோ இல்லை மகளாகவோ இல்லை தாயாகவோ இல்லை கீதா ஏஞ்சலாகவோ வைஸ்வெர்சாவாகவோ இருந்திருப்போமோ என்று நினைப்பதுண்டு. ஒவ்வொரு பதிவைப் பார்க்கும் போதும் உங்களின் கருத்துகள் என்னைப் பிரதிபலிக்கும். எல்லாவற்றிலும் ஆர்வம், அதிலும் மீள் சுழற்சி...அதாவது வெல்த் ஃப்ரம் வேஸ்ட் யெஸ் நானும் ஒரு காலத்தில் செய்துவந்தேன் ஏஞ்சல். கார்டுகள் கொடுப்பது, வரைவது, பெயின்ட் பண்ணுவது, க்வில்லிங்க், வைக்கோலில் ஆர்ட் பண்ணுவது, எம்ப்ராய்டரி பல வகைத் தையல்கள்..சமையல்....என்று பல செய்து வந்தேன். ஒவ்வொன்றாக விட்டு விட்டு கழிந்த 4 வருடங்களாக எதுவுமே செய்வதில்லை. சமையல்... மற்றும் எனது சல்வார் செட்டை நானே தைத்துக் கொளல் இந்த இரண்டு மட்டுமே இப்போதும் தொடர்கிறேன்...

கீதா

Avargal Unmaigal சொன்னது…

@அதிரா அடபாவிமக்கா கூட பேசும் போது இப்படி சொல்லிவிட்டு இப்ப பன்னீர் செல்வம் போல தனி ட்ராக்கில் போறீங்களே நியாமா?

Avargal Unmaigal சொன்னது…

ஹா
ஹா @ஏஞ்சல் நீங்க டெய்லி வாக் போவதை செல்வா எப்படியோ மறைந்து இருந்து பார்த்து இருக்கிறார் போல

Avargal Unmaigal சொன்னது…

சர்ச் இங்கேயே கூகுலில் பண்ணலாமே?

Avargal Unmaigal சொன்னது…

ஏஞ்சலுக்கு வயசாகிவிட்டதாலும் தமிழை அடிக்கடி பேச வாய்ப்பு இல்லாததாலும் படிக்கும் போது கான்வெண்ட் பள்ளியில் படித்தாலும் அவர் தமிழை மறந்துவிட்டார் வயசானங்களுக்கு இப்படி நேர்வது சகஜம் அல்லது நம்மை மாதிரி என்றும் 16 ஆக இருக்கனும் ஆனால் பெண்களால் என்றும் 16 ஆக இருக்க முடியாது என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன

Avargal Unmaigal சொன்னது…

நானும்தான் நேருக்கு நேர் திட்டும் எதிரியை நேசிப்பேன் என்னை நேருக்கு நேர் திட்டுவது என் மனைவி மட்டும்தான் ஹீஹீ

யார் என்பின்னால் குத்தவே முடியாது காரணம் நான் எப்பவுமே எல்லோரையும் முன்னால் போக வழிவிட்டுவிடுவேன்

Avargal Unmaigal சொன்னது…

கிரேஸ் சமீபத்தில் ஒரு கவிதை புக்கை வெளியிட்ட பின் மறைந்து வாழ்கிறார்கள் போல இருக்குதே தைரியாமாக இருக்க சொல்லுங்க மதுரைத்தமிழன் அந்த கவிதையெல்லாம் இன்னும் படிக்கலைன்னு சொல்லுங்க

Avargal Unmaigal சொன்னது…

@ஏஞ்சல் நிஷாந்தி என்று கூப்பிட்டால் கொஞ்சம் வயசானது போல தெரிகிறதாம் அதனால் நிஷா நிஷா என்று கூப்பிடவும் என்று சொல்லுகிறார் உங்களுக்கு புரிந்து இருக்காது என்பதால்தான் இந்த விளக்கம்

Avargal Unmaigal சொன்னது…

சார் உங்கள் எழுத்துகளை பலரும் படிக்கிறார்கள் இப்படி பதிவில் சொல்ல மறக்க காரணம் இப்படி அடக்கடி யாரிடமும் கிண்டல் கேலி பண்ணாமல் இருப்பதால்பதிவு எழுதும் போது சட்டென்று பெயர் ஞாபகம் வருவதில்லை என்பதுதான் உண்மை உங்கள் எழுத்தும் பதிவும் சிந்தனைக்குரியது பாராட்டுக்கள்

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

நான் பல சமயங்களின் நினைத்ததுண்டு..நீங்கள் நாகர்கோவில் தொடர்பு உள்ளவரா என்று...எனக்கு ஏதோ தோன்றியது உங்களைக் கேட்க வேண்டும் என்று நினைத்து மறந்து போனேன்..இதில் தெரிந்து கொண்டேன் உங்கள் இரு பாட்டிகள் நாகர்கோவில்...என் அப்பா, அம்மா திருநெல்வேலி என்றாலும் நான் பிறந்தது நாகர்கோவில், படித்து வளர்ந்தது எல்லாமே நாகர்கோவில் ஆனால் கேரளா, திருநெல்வேலி, மதுரை சொந்தங்கள் அதிகம் என்பதால் இவற்றுடன் இன்று வரை தொடர்பு அதிகம்.நான் அடிக்கடிச் செல்லும் ஊர்களில் இவை அடங்கும்.
அன்பு, இரக்க குணம்...என்று பலதும் ஏதோ ஒரு வடிவில் உங்களுடன் எனக்கு ஒரு பிணைப்பு வருகிறதோ...என்றும் நினைப்பதுண்டு....

உங்களைப் போன்று எனது கருத்துகளும் நீண்டுவிடும் பல சமயங்களில்...5 மார்க் கேள்விக்கு 20 மார்க்குக்கான பதில் இருக்கும்ஹிஹிஹிஹி..பின்னூட்டம் கூட விரிவாக இருக்கும் பல சமயங்களில்..உங்களைப் போல.....உளவியலும் நீங்கள் எழுதுவீர்கள்...சிறப்பு நட்சத்திரக் குழந்தைகள் பற்றி...முதியோர் ..யெஸ் எனக்கும் முதியோர், குழந்தைகள் நட்பு மிகவும் பிடிக்கும்...

ஏதேனும் யாரேனும் கேட்டுவிட்டால் நானும் தேடிக் கண்டுபிடித்து அனுப்புவது வழக்கம்.. நீங்க அனுப்பிய லிங்க் வந்ததும் அட! இதிலும் நம்மைப் போல என்று நினைத்துக் கொண்டேன்....

எங்கள் தளத்திலும் சமையல் குறிப்புகள் கூடாது என்று நாங்கள் இருவரும் முடிவெடுத்து அதை இன்று வரை தொடர்ந்து வருகிறோம்...காரணம்..துளசி சமைப்பார் ஆனால் அவர் சமையல் ஜஸ்ட் சாப்பிட அவ்வளவுதான்...நான் பல வகை சமைத்தாலும் எனக்கு எழுத வராது அதான் ஹிஹிஹி... ஆனால் நான் எங்கள் ப்ளாகில் திங்க வரும்போது அங்கு குறிப்பிடுவது வழக்கம்...

நானும் பல பதிவர்களிடமிருந்தும் பல கற்றுக் கொள்கிறேன். உங்களைப் போல...உங்களிடமிருந்தும் தான்..ஒன்றல்ல...பல!
இன்னும் பல சொல்லலாம்..ஏஞ்சல்! மனதுக்கு நெருக்கமாக இருக்கிறது...மிக்க மகிழ்ச்சி! வாழ்த்துகள்! தாங்கள் என்றென்றும் மகிழ்வுடன் இருக்க பிரார்த்தனைகள்! நல்லதோர் நட்பு கிடைத்தமைக்கு மிக்க மகிழ்ச்சியுடன்...(ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டுட்டேனோ..!!!ஹிஹி)

கீதா

Avargal Unmaigal சொன்னது…

என்னடா இது எல்லோரும் ஏஞ்சலின் நடையை பற்றியே பேசுகிறார்கள் நமக்குதான் அவரின் நடை பற்றி தெரியவே இல்லை... ஏஞ்சல் ப்ளீஸ் நீங்க நடந்து போவதை ஒரு வீடியோ க்ளிப் எடுத்து போடுங்க நானும் உங்க நடையை பார்த்துடுறேன் அதன் பின் உங்க நடையை விமர்சிக்கிறேன்

Avargal Unmaigal சொன்னது…

மாலை நேரம் என்றால் அதிராவால் பார்க்கவோ படிக்கவோ முடியாது அதனால் அக்கா அப்பாலக்க வருவாங்க

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

கிரேசுக்கு கழுத்துவலி எழுதுவதற்குக் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது என்று அதனால் வாட்சப் குழுவிலிருந்தும் விலகினார்...ஆம் மகனுக்கும் உடல் நிலை சரியில்லை என்று எழுதியிருந்தார்...

கீதா

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

எல்லாம் சரி மதுரைத் தமிழன் முட்டைப் பொரியல் பார்சல் அனுப்பினீர்களா இல்லையா அதிராவிற்கு??!!!
அதிரா கேச் ஹிம்...

கீதா

நிஷா சொன்னது…

எங்கள் வீட்டில் இலங்கை அரசியல் எழுதாதே. மீதி என்னவும் எழுதிக்கோ எனும் தடா உண்டு. மதத்தினுள் நுழையாதது நானே இட்டுக்கொண்ட தடா- ஆனால் அரசியல் எனக்கு நிரம்ப பிடித்த டாபிக். அது தான் அப்பப்ப மதுரைதமிழன் பதிவில் பின்னூட்டம் இடுவேன். பெண்கள் அரசியலுக்குள் நுழைந்தால் வீட்டை போல் நாடும் உருப்படும் என்பது என் கருத்து. உண்மையில் ஆண்களை விட பெண்கள் நிர்வாகம் சீரியசிறப்புடன் இருக்கும்,அவர்களை சுயமாக இயங்க விட்டால் தான், பின்னாலிருந்து அதை செய் , இதை வை என மிரட்டினால் மொத்தமே உல்டா தான்.

Avargal Unmaigal சொன்னது…


என்னது உங்களுக்கு துணி தைக்க தெரியுமா? சரி சரி தப்பி தவ்றி என் வீட்டு பக்கம் வந்துடாதீங்க மாமி நிறைய துணி கொடுத்து ஆல்ட்டர் பண்ண சொல்லுவாங்க ஜாக்கிரதை

Avargal Unmaigal சொன்னது…

ஆமாம் ஐஸ்வர்யா டான்ஸை பார்ட்து அதுமாதிரி ஆடுவதினால்தானே இப்படி குதிக்கிறீங்க ஆடி முடிச்சதும் பின்னுட்டம் இடுங்க

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

நிஷா மதுரை வீட்டுக்கார அம்மாவிடம் அடி வாங்கினால் யாரும் அழுவதில்லை ஹிஹிஹிஹி அவர் பதிவைக் கண்டு எல்லோரும் சிரித்து சிரித்து இன்னும் அவரைக் கலாய்த்துத்தான் கருத்துகள் இருக்கும்....பூரிக்கட்டையும் அவர் அடி வாங்கி ஆஸ்பத்திரியில் படுத்துக் கொண்டே பதிவு எழுதுவதும் ரொம்ப ஃபேமஸ்!!! டாக்டர்கள் கூட ரொம்ப வியந்து போனாங்களாம்!!!
கீதா

Avargal Unmaigal சொன்னது…

இங்க பாருடா இவங்களும் உங்க நடையை பற்றி பேசுறாங்க ஆமாம் ஏஞ்சல் நீங்கள் என்ன மாடல் அழகியா அது பற்றி என்னிடம் சொல்லவே இல்லையே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அட! ஏஞ்சல் புதுசா ஒரு ஆயுதம் பார்சலா!! ஹஹ்ஹாஹ் இனி பூரிக்கட்டை போல சப்பாத்தி ப்ரெஸ்ஸர்ல மதுரைத் தமிழனின் தலை ப்ரெஸ் ஆவதும் வரும் போல!!ஹஹஹஹ்...மதுரைத் தமிழன் உங்கள் மூளைய இன்ஷுர் பண்ணிக்கங்க!ஹிஹிஹி...

கீதா

நிஷா சொன்னது…

ஹைய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ.. ஏஞ்சல் கிரேஸ் பெயருடன் நிஷாந்தி எனும் பெயரை எழுதி இருந்தார். நானே குழமீட்டேன். கிரேஷ் பிரதீபா என்பது தானே முழுப்பெயர். அதெப்படி கிரேஸ் நிஷாந்தி ஆச்சு என யோசிச்சிட்டே படித்தால் மேடம் அங்கே என்னையும் சொல்லி இருக்காங்க. என்பெயரே நிஷாந்தி என இப்படி நீங்க யாரேனும் சொன்னால் தான் நினைவுக்கு வருது. இங்கே பெரும்பாலும் நிஷாக்கா... நிஷாக்கா தான். நேரில் ஷாந்தி.. ஆனால் ஐலவ நிஷா எனும் சின்னதான ஸ்வீட்டான பெயர். அப்படி அழைக்கும் போது என்னை நானே என்றும் 16 தான் உணர்வேன்.

Angel சொன்னது…

ஹையோ சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது :) ஆமா டாக்டர்ஸ்க்கே ஆச்சர்யம்தான் எவ்ளோ வாங்கினாலும் இவர் ஜாலியா இருக்காரேன்னு

நிஷா சொன்னது…

உண்மையில் செம்ம பிசிப்பா. புதிதாக ஒரு கன்ராக்ட்.. நோர்த் இந்திய ரூரிஸ்ட் குருப் .. எங்க பக்கம் ரூரிஸ்ட் ஏரியா என்பதனால்.. இங்கே வரும் குருப் எங்க ஹோட்டலில் சாப்பிடுவது போ. தினம் இரண்டு மூன்று பஸ்.. ஒரு பஸ்ஸில் 50 பேர். ஆரம்பிச்சாச்சு. மேடம் செம்ம்ம்ம்ம பிசி. ஆனால் இதுவும் வேண்டும்.இங்கே தான் எத்தனை ஸ்ரெஸ்ஸுக்குமான ரிலாக்ஸ் எனேர்ஜி கிடைக்கும்.

Angel சொன்னது…

நிஷா அப்போ நாம ஆரம்பிப்போம் நீங்க தலைவி நான் அஜிஸ்டண்ட் :) உங்க கூடவே கார்ல வருவேன் போவேன் இதுக்கெல்ல்லாம் சரின்னா சொல்லுங்க கட்சிக்கு பேரவை துவங்கிடலாம் :)

Angel சொன்னது…

@கீதா ..அந்த பூரிக்கட்டையும் கின்னஸில் இடம்பெற போகுதாம் :)

நிஷா சொன்னது…

குமார் இந்த மாதிரி போஸ்டுகளுக்கு மட்டும் பின்னூட்டங்கள் உடனே பதிவாகுவது போல் செட் செய்தால்... கின்னஸ் சாதனையில் உலகத்தில் அதிக பின்னூட்டமிடப்பட்ட பதிவு என பெயரை தட்டிக்கொள்வீர்களாம். பட்சி சொல்லிச்சி. மதுரைத்தமிழரும், ஏஞ்சலும், ஆதிராவும் கூட்டு சேர்ந்தால் உலக்மே அதிரும்ல.

Angel சொன்னது…

ஹா ஹா :) கர்ர்ர்ர்

Angel சொன்னது…

AWWWW :) இன்னிக்கு சுற்றி சுழன்று அடிக்கிறீங்களே :) ரசித்தேன் பின்னூட்டங்களை

Angel சொன்னது…

பாதி வருஷம் ஜெர்மனி மீதி இங்கிலாந்துன்னு கொஞ்சம் டச் விட்டுபோச்சுதான் தமிழுடன் :)
என்ன வயசு ஒரு 80 ஆச்சு :) உங்களுக்கு 125 ஆச்சே :)

Angel சொன்னது…

ஐ லைக் யுவர் நேர்மை :) கர்ர்ர் எல்லாரையும் அனுப்பிட்டு பின்னாடி போனாத்தானே முன்னாடி குழி இருந்தா நீங்க அலெர்ட் ஆகலாம் :)
மக்களே இவரை இனிமே முதல்ல நடக்க விட்டு பின்னாடி போங்க

Angel சொன்னது…

தகவலுக்கு நன்றி கீதா ..

நிஷா சொன்னது…

அம்மாடியோவ் எம்பூட்டு பின்னூட்டம், குமார் மயங்கி விழப்போகின்றார். மக்களே நான் என்னை பற்றி எழுதினாலும் இப்படி பின்னூட்டம் போடணும், அதுக்கு நான் இரண்டு நாள் என்னை பிரியாக்கிக்கணும்ல.. அப்பத்தானே இங்கேயே உட்காந்திருக்கலாம். அதனால் ஆறுதலாகவே பதிவோம். ஆனால் மொய்க்கு மொய் வைக்கணும். மதுரைத்தமிழர் தான் இதில் தலைமை. இல்லை அவர் வீட்டுக்கு வெடிகுண்டு பார்சல் .. அடுத்து ஏஞ்சல். ஆதிரா...கீதா, துளசி அண்ணா. எங்கள் பிளாக் எல்லோர் வீட்டுக்குள் வரும் பத்திரம் மக்களே.

முற்றும் அறிந்த அதிரா சொன்னது…

என்னாதூஊஊஊஊ மதுரைத் தமிழன் மோசமானவராஆஆஆஆ??? ஹையோ அப்போ நயந்தாரா கான்சல்ட்:) , ஒரு அப்பாவிப் பெண்ணைக் காப்பாற்றியே தீருவேன்ன்ன்ன்ன் என்னை ஆரும் தடுக்காதீங்கோஒ:)...

முற்றும் அறிந்த அதிரா சொன்னது…

கீதா என்னாதூஊஊஊ கேச் கிம் ஆஆஆஆ.... நான் ஆரு 1500 மீட்டரில 2 ஆவதா வந்தேனாக்கும்.... நான் புடிச்சு தாறேன்ன் நீங்க தேMஸ்ல தள்ளிடுங்கோ கீதா... டீல்??? ஸ்ராட் மூசிக்க்க்க்:)

Angel சொன்னது…

ஹா ஹா :) இப்படியெல்லாம் உசுப்பேற்றினா அவ்ளோதான் சொல்லிட்டேன் ஏற்கனவே மல்ட்டியோட பேசற ஒரு வீடியோ இருக்கு .என் கணவர்தான் ..வேண்டாம் பிளாக்கர்ஸ் பிழைத்த போகட்டும் உங்க வாய்ஸ் கேட்டு கோமாவில் விழப்போராங்கன்னு சொல்லி எனது முயற்ச்சியை தடுத்துவிட்டார் :)

Angel சொன்னது…

வயசானாலும் இன்னும் கண்ணாடி போட பெரிய பிகு :) பூனை கண்ணாடி போட்டு வாங்க HAA HAA :)

Angel சொன்னது…

ஹாஹா ஹையோ :) மாமி ப்ளீஸ் இவரை பிடிங்க ..ஒருவேளை இவரை வீட்ல விட்டு வேலைக்கு போய்ட்டாங்களோ மாமி இன்னிக்கு :)

Angel சொன்னது…

இருக்கலாம் நான் அன்னிக்கு எதுவுமே தெரியாம இருந்தேன் உங்க போஸ்ட் பார்த்து தான் ஊர்பட்ட வீடியோஸ் பார்த்தேன் ..நீங்க தான் மெயின் காரணம்

முற்றும் அறிந்த அதிரா சொன்னது…

என்னாதூஊஊ அந்த பெண்ணை இன்னும் காவிக்கொண்டிருக்கிறாரோ? ஐ மீன் மனசில:) அப்போ நயைன் கதி என்னாகும்???

ஹையோ இன்னும் போஸ்ட் படிக்கல்ல நான்., அஞ்சூ ட்றுத் ஐ கொஞ்ச நேரம் அமைதியா இருக்க சொல்லுங்கோ போஸ்ட் படிக்கோணும் நான்ன்ன் :)

Angel சொன்னது…

மிக்க நன்றி கீதா .ஆமாம் நானும் நிறைய நேரம் பார்த்திருக்கேன் ரெண்டு பேருக்கும் ஒரே அலைவரிசை .நீங்க சொன்ன கிராப்ட் எல்லாமே செய்வேன் ஆனா அந்த தையல் மட்டும் கொஞ்சம் நடுக்கம் .வீட்ல மெஷின் இருக்கு பயந்துகிட்டே தட்டுவேன் ..எனக்கு கொஞ்சம் அந்த ஊசியை பார்த்தா பயம் எங்கே கையை குத்திருமோன்னு :)
HIGH FIVE கீதா :)
நானும் சல்வார் தைக்கிற கிளாசுக்கு போனேன் என்பதை அறியத்தருகிறேன்

முற்றும் அறிந்த அதிரா சொன்னது…

என்னாதூஊஉ ட்றுத் வீட்டில்ல்ல்ல் விருந்தாஆஆஆ..... என்னை விடுங்கோ ஹையோ பயர் எஞ்சினுக்கு அடிங்கோ .... மீ ஜம்பிங் ஒன் அவர் தேம்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

முற்றும் அறிந்த அதிரா சொன்னது…

/////Avargal Unmaigalபுத. மார். 15, 04:42:00 பிற்பகல்
சர்ச் இங்கேயே கூகுலில் பண்ணலாமே?////
ட்றுத் பிளீஈஈஈஈஈஸ் கொஞ்ச நாளைக்கு உங்க கிட்னியை இரவல் தர முடியுமோ????...

Angel சொன்னது…

ஹா ஆஹா :) நோ feelings :) நாமெல்லாம் ஒரே இனம் :) பக்கம் பக்கமா கமெண்ட் போடறது நமக்கு கைவந்த கலையாச்சே .அப்படி போட்டதான் மனதுக்கு திருப்தி :) அதுவும் ஒரு பதிவு பல விஷயங்களை நினைவூட்டிடும் உடனே அங்கேயே சொல்லிடனும் அதில் ஒரு சந்தோஷம் :) நான் முன்பே சொல்லியிருந்தேன் நான் பாதி நாகர்கோயில் மதுரைன்னு ..
இந்த க்வில்லிங் சிலரை சொல்லி அவங்களுக்கு லிங்கா செய்முறை அனுப்பி செய்ற வரைக்கும் விட மாட்டேன் :)
இந்த அதிரா கூட அப்படி என்கிட்டே மாட்டி நிறைய குவில்லிங் செஞ்சிருக்காங்க :)
நல்ல நட்புக்களை பெற்றிருக்கிறேன் நானும் மிக்க ஹாப்பி :)தாங்க்ஸ் கீதா அன்ட் துளசி அண்ணா

Angel சொன்னது…

இன்னும் கீதா நீங்க உங்க ரெண்டு பேரையும் சேர்த்துக்கணும் லிஸ்ட்ல :)

Angel சொன்னது…

ஆஹா அசத்திடுவோம் ..எப்போ உங்க பதிவு வரும்னு சொல்லிடுங்க நிஷா ..நான் ரெண்டு நாளுக்கு கிச்சன் பக்கம் போகாம இங்கேயே இருந்து பார்த்துக்கறேன் :)
எல்லாம் ஒரு ஸந்தோஷம்ப்பா ..எப்பவும் ஹாப்பியா இருக்கணும் .ஆனா குமார் தம்பிதான் பாவம் :)

Angel சொன்னது…

நோ :) நயன் இஸ் ஹிஸ் செல்ல சிஸ்டர் ..ரித்திகா சிங் தான் அந்த பாக்சிங் பொண்ணுதான் இவருக்கு :)

நிஷா சொன்னது…

என்னாது? யாரு தலைவி? எங்கேயோ பொசுங்குதே ஏஞ்சல்.திகார் ல இடம் காலியா இருக்காம் என கேள்வி. அதுக்கு இப்பவே ஆயத்தமாகுவோம். ஆனால் செம்ம சீரியஸா பெண்கள் அதிகமா அரசியலுக்கு வர வேண்டும் பா. இந்த மாமாக்களை தாத்தாக்களை நம்பி பிரயோசனமே இல்லை. நான் நீங்க கிரேஸ் கீதா.ஆதிரா என படையே இருக்கோம்ல.

நிஷா சொன்னது…

மேலதிக தகவல்களுக்கு நன்றிப்பா

Angel சொன்னது…

ஹா ஆஹா :) அதேதான் நானும் ஐந்து மார்க் கேள்விக்கு 20 மார்க் எஸ்ஸே பதில் மாதிரி எழுதிடுவேன் :)

Angel சொன்னது…

ஹா ஹா :) நிஷா நிஷா என்றே அழைக்கிறேன் :)

முற்றும் அறிந்த அதிரா சொன்னது…

தூதுவரை அனுப்புங்கோ நிஷா வந்து குமிச்சிடுறோம்ம் கொமென்ஸ்களை... அதுக்கு முன் இண்டைக்கு 200 ஐ தொடோணும் நாங்க, எப்பூடியாவது ஏஞ்சலினை முழுதுக்கும் பதில் போட வைக்கோணும் இல்லாட்டில் , தேம்ஸ்ல தள்ளிவிடும் பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்பதனை சுய நினைவோடு இந்த வெள்ளைப் பேப்பரில் கையொப்பமிடுறேன்ன்ன்:)

முற்றும் அறிந்த அதிரா சொன்னது…

நோஒ என்னை ஆரும் நேருக்கு நேர் திட்டிடாதீங்கோ.. என் சுவீட் 16 ஹார்ட் பொசுங்கிடும்... என்னோடு கோபம் வந்தால் ஓடிப்போய் தேம்ஸ்ல குதிங்கோ பிளீஸ்ஸ்ஸ்... நாம ஆரூஊஊஊஊஉ????:)

முற்றும் அறிந்த அதிரா சொன்னது…

ஸ்ச்ஸ்ச்ஸ்ச் மக்களே இன்றிலிருந்து நான் அஞ்சுவை டிவோஸ் பண்ணுறேன்ன்ன் இனி தனிக்கட்சி ஆரம்பிக்கப் போறேன்ன் பிக்க்க்க்கோஸ் அடிக்கடி கட்டி மாறிப் பேசுது இந்த பிஸ்ஸூஊஊஊஉ கர்ர்ர்ர்ர்:)

Angel சொன்னது…

@ Nisha ஆமா ஆமா ! வெரி யங் லேடிஸ் நம்மை போல வரணும் :) ஹையோ சாமீ இன்னிக்கு இந்த கமெண்டை மட்டும் அவர்கள் ட்ரூத் கண்ணுக்கு மறைச்சிடுங்க

Avargal Unmaigal சொன்னது…

நார்மலாவே கிட்சேன் பக்கம் போகமாட்டாங்க இனிமே ....: கடவுளே உனக்கு கண் இல்லையா

Avargal Unmaigal சொன்னது…

ஹலோ நிஷா ஏஞ்சல் பணம் தந்தாங்க அதுனாலதான் நிறைய பின்னூட்டம் அதுனால நீங்களும் பணத்த ரெடி பண்ணிட்டு பதிவு போடுங்க

'பரிவை' சே.குமார் சொன்னது…

இங்கு அயராது களப்பணியாற்றும் அக்காக்கள், அண்ணன்மார்களுக்காகவே இரண்டு நாளைக்கு கமெண்ட் மாடரேஷனை எடுத்துவிட்டுட்டேன்... அடிச்சி ஆடுங்க மக்களே...

Avargal Unmaigal சொன்னது…

100

முற்றும் அறிந்த அதிரா சொன்னது…

நோஓஓஓஓஓஓஓஒ மீதான் 100 ஊஊஊஊஊஊ ட்றுத்துக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

முற்றும் அறிந்த அதிரா சொன்னது…

ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா இப்போதான் வீட்டுக்கு வந்து கொம்பியூட்டர் ஊடாக அனைத்தையும் படிச்சேன்... மொபைல்ல எவ்ளோ கஸ்டப்பட்டு கிடைக்கும் நேரத்தில் கொமெண்ட்ஸ் போட்டேன் தெரியுமோ?:).... அஞ்சு அந்த பவுண்ட்ஸ் ஐ என் எக்கவுண்டில் போட்டதால்தான் இப்பூடி கஸ்டப்பட்டேன்ன்:)

என்னாதூஊஊ இங்கின பின்னூட்டத்தைக் கூட கொப்பி பண்ண முடியாதோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ரொம்ப மோசம் தள ஓனர் சொல்லிட்டேன்:)..

திறந்துவிட்டிட்டென் அடிச்சு ஆடுங்கோ என குமார் சொல்லிட்டார்ர், ஆனா அஞ்சு போட்டுவிட்டு பணத்துக்கு கொமெண்ட்ஸ் போட்டாச்சு:) இனி என் எக்கவுண்டுக்கு பணம் வந்தால் மட்டுமே:)

முற்றும் அறிந்த அதிரா சொன்னது…

என்னைப் பற்றி அழகழகா சொல்லியுள்ள அஞ்சு ஒன்றை மட்டும் தவற விட்டிட்டாஅ:) அதை சொல்லாட்டில் எனக்கு இண்டைக்கு நித்திரையே வராது:)..

அதாவது பிரித்தானியா பொலீஸ் ஸ்ரேசன் முழுக்க.. பென்னாம் பெரிய போஸ்டர் ஒட்டிக்கிடக்கு.. என்னவெனில்.. தேடப்படும் நபர்களின் பட்டியலில் முதலாமிடம் அஞ்சு:)...

ஏன் தெரியுமோ.. ஆரோடயோ பூஸாரை மெதுவா களவெடுத்து:) வந்து “மல்ட்டி” எனப் பெயரிட்டு வளர்க்கிறாவாம்ம்:)... ஆனா நான் அஞ்சுவைக் காட்டிக் கொடுக்க மாட்டென் என தேம்ஸ் கரையில் வச்சு வலது கையால அடிச்சு சத்தியம் பண்ணிப்போட்டன்:).

முற்றும் அறிந்த அதிரா சொன்னது…

போட்டுவிட்ட பணத்துக்கு என வரோணும்.. மிசுரேக்கூ:).

Angel சொன்னது…

நான் என்னைப்பற்றி தானே சொல்லியிருக்கேன் :) உங்களைப்பற்றி சொல்லலியே :)
கர்ர்ர் அது ஓனர் அபண்டன் செய்த பூஸ் இப்படி சொன்னா மல்ட்டி உங்கமேலே feline கோர்ட்ல கேஸ் போடுவா சொல்லிட்டேன் :)

Angel சொன்னது…

இல்லை இல்லா :) நீங்களே சொல்லிட்டிங்க பணத்தை போட்டு அப்புறம் கமெண்ட்டையும் போட்டது நீங்கதான்

Angel சொன்னது…

மிக்க நன்றி குமார் :) .... கொஞ்சம் ரெஸ்ட் எடுத்திட்டு வரோம் :)

Angel சொன்னது…

அவர்கள் உண்மைகள் பூரிக்கட்டையடிய கவுண்ட் செஞ்சிருப்பாரோ :) 100 கமெண்ட் சரியா கவுண்ட் பண்ணிட்டார்

Angel சொன்னது…

garrrrrr :)

Angel சொன்னது…

awwww :) why dear

priyasaki சொன்னது…

வாழ்த்துக்கள் அஞ்சு.
'எப்படி இவர்களால் இப்படி எழுத முடியுது என ' மற்றவர்களை பார்த்து நீங்க வியந்ததைப்போல நான் உங்களை பார்த்து வியந்து போகிறேன் அஞ்சு. நீங்க பதிவுகள் எழுதின ஆரம்ப காலம் எனக்கும் தெரியும். அதிராவின் பக்கம் அடித்த லூட்டிகள் எவ்வளவு. ஆனா இப்போ நீங்க ரெம்பவே அருமையா எழுதுறீங்க. Sense of humor அதிகமாக எழுத்துறீங்க. உங்க எண்ணம் போல் எல்லாமே அழகு. (ஐய்யோ அதிரா சண்டைக்கு வரப்போறா) வாழ்த்துக்கள் அஞ்சு.
உங்க அழைப்பிற்கு நன்றி சீக்கிரம் எழுதுகிறேன்.

Avargal Unmaigal சொன்னது…

@கீதா நானும் என் மூளையை இன்சூர் பண்ணலாம்தான் போனேனேன் .அவன் சார் உங்களுக்கு மூளை இருந்தால்தானே இன்சூர் பண்ணுறது என்று சொல்லி சிரிக்கிறான் ஹும்ம்ம்ம்

Avargal Unmaigal சொன்னது…

@அதிரா நீங்க போஸ்ட் படிச்சு முடிக்கிறதுக்குள்ள எனக்கு ஆயுசு முடிஞ்சிரும் போல இருக்கே....

Avargal Unmaigal சொன்னது…

நிஷா என்னது பெண்கள் அரசியலில் புகுந்தால் நாடு உருப்படுமா? ஜெயலலிதாவால் நாடு நல்ல உருப்பிட்டுச்சு சசி வந்தா இருந்தால் உருப்பிட்டு இருக்கும் ஆனால் என்ன பாவம் அவரை உள்ளே வைச்சிட்டாங்க இல்லனேன்ன உலக அரங்கில் தமிழகம் இன்னேரம் வந்து இருக்கும்

Avargal Unmaigal சொன்னது…


கீதா நான் அடிவாங்குவது கேள்விபட்டு நீங்களேல்லாம் அழ்துகிட்டு இருப்பீங்க என்று அல்லவா நினைத்து இருந்தேன் கடைசியில் நீங்கள் சிரித்து கொண்டா இருக்கிறீர்கள் ரொம்ப மோசமப்பா...... பெண்களுக்கு இரக்கமே இந்த காலத்தில் இல்லாமல் போயிடுத்து கலியுகம் காலம் அல்லவா

Avargal Unmaigal சொன்னது…

//வெரி யங்க் லேடிஸ் நம்மை போல வரனும்///

ஹா ஹா ஹா ஹீஹீஹீ ஊஊஊஊஊ ஏஏஏஏஏஏஏஏஏஏஏ ஆஆஆஆஆஅ கீகிக்க்கீக்கிக்கீ கேஏகே அய்யோ அம்மா வயிறு வலிக்குதே ஹா ஹா ஹா ஹீஹீஹீ ஊஊஊஊஊ ஏஏஏஏஏஏஏஏஏஏஏ ஆஆஆஆஆஅ கீகிக்க்கீக்கிக்கீ கேஏகே

Avargal Unmaigal சொன்னது…

நோ நோ நோ உங்களுக்கு தக்காளி சட்டினி கூட தரமாட்டேன்

Avargal Unmaigal சொன்னது…

உங்களுக்கு வயசு 80 ஆக இருக்கலாம் அதற்காக என் வயதை டைப் அடிக்கும் போது கவனமாக அடிக்க வேண்டாமா 12 என்று இருக்க வேண்டியதற்கு பதிலாக 5 யை சேர்த்து போட்டு டைப்ப்ண்ணியிருக்கிங்க நயந்தாராவிற்கு சகோதரன் என்று சொன்னீங்க பொறுத்துகிட்டேன் ஆனால் இப்ப நீங்க சொல்லுவதௌ பார்த்த நான் நயனுக்கு தாத்தா முறையல்லவா இருக்கிரது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

Avargal Unmaigal சொன்னது…

@ ஏஞ்சல் & நிஷா நீங்க ரெண்டு பேரும் ஒரே கமெண்ட் ஒரே விஷயம் எழுதி இருக்கிங்க என்று சொல்வதை உற்று நோக்கி பார்த்தால் இதில் யாரோ ஒருவர் காப்பி பேஸ்ட் பதிவராகத்தான் இருக்கனும் என்று தோன்றுகிறது ஆமாம் இதில் யாரு களவாணி???

Avargal Unmaigal சொன்னது…

எனக்கு என் மனைவிதான் எல்லாம் எல்லோரும் என்பது அதனால் அவள் பின்னால் போவதைத்தான் எல்லோர் பின்னால் போவது என்று எழுதி இருந்தேன் அப்படி அவளை முன்னால் போக செல்லவிட்டு நான் பின்னால் போவது மற்ற பெண்களை பார்த்து நான் ஜொள்ளு விடுவது அவளுக்கு தெரியக் கூடாது என்பதினால்தான் அதை புரிஞ்சுக்காம குற்றம் சொல்ல வேண்டாம் ஹாங்க்

Avargal Unmaigal சொன்னது…


அதிரா நாந்தான் இங்க சுவீட் 16. நீங்க என் சுவீட் 16 ஹார்ட் பொசிங்கிடும் என்று என் மேலே இந்த தள்ளாத வயசிலும் உங்களுக்கு அக்கறை இருப்பதை கண்டு ஆச்சிரியமாக இருக்கு ஹீஹீ

Avargal Unmaigal சொன்னது…


சகோதரன் பிரபா எங்கே இருந்தாலும் இங்கே வரவும் உங்க வீட்டம்மா நிஷாவை இனிமேல் நீங்க ஐ லவ் யூ நிஷான்னுதான் அழைக்கனுமாம் அப்பத்தான் அவங்க் 16 வயசு அசட்டு பொண்ணா இருப்பாதாக உணர்வார்களாம்

Avargal Unmaigal சொன்னது…

ஏஞ்சல் இவர் உங்க ஆட்டங்களை பார்த்து எருமை என்று டைப்பண்ணுவதற்கு பதிலாக அருமை என்று டைப்பண்ணிவிட்டார் போல

Avargal Unmaigal சொன்னது…

உங்க கணவருக்குதான் எவ்வளவு நல்ல மனசு

Avargal Unmaigal சொன்னது…

என்ன தனிக்கட்சி ஆரம்பிக்க போறீங்களா அப்ப கண்டிப்பாக ஜெயலலிதா சாமதிக்கு போய் தியானம் பண்ணிட்டுவாங்க இல்லைன்னா கட்சியை அங்கிகரிக்க முடியாது

Avargal Unmaigal சொன்னது…

கில்லர்ஜிமட்டும்தான் உங்கள் நடை அழகு என்று சொல்லவில்லை நல்ல மனுஷன் அடுத்த பெண் நடப்பதை ஏறெடுத்து பார்க்க மனுஷர்

Avargal Unmaigal சொன்னது…

அங்க என்னடா நிஷா சொல்லுறங்க ஏஞ்சல் உங்கள் எண்ணமும் என் எண்ணமும் ஒன்றாக இருக்கிறதுதென்று இங்கே கீதாவும் அப்படியே சொல்லுக்கிறார்கள் எனக்கென்னவோ இந்த ஏஞ்சல்தான் இப்படி Fake ஐடி வைச்சிக்கிட்டு இப்படி களம் ஆடுகிறார்களோ என்று தோன்ருகிறது

Avargal Unmaigal சொன்னது…

ஹாஹாஹஹா ஏஞ்சல் நீங்க தான் சல்வார் கிளாஸுக்கு போய் சல்வார் தைக்க கத்துகிட்டு கடைசியில் சலவார் தைக்கிறீங்க என்று தலையணை உறை தைத்தது ஹீஹீ

Angel சொன்னது…

ஸ்ஸ்ஸ்ஸ் :) ஹையோ அது எப்படி உங்களுக்கு தெரியும் இந்த அதிராத்தான் சொல்லிருக்கணும் ..கர்ர்ர்ர் :)
btw அந்த பில்லோ கவர பத்திரமா வச்சிருக்கேன் :)

Avargal Unmaigal சொன்னது…


@கீதா சொன்ன வாக்கு மாறக் கூடாது சரியா நான் நான் காதலித்த ஆங்கிலோ இண்டியன் பெண் உசிரோட இருந்தால் இன்னும் மதுரைலதான் இருக்கணும் கொஞ்சம் தேடி கண்டுபிடிச்சு தரீங்களா அப்படி நீங்க தேடி கண்டுபிடீச்ச அதன் பின் இன்னொறு காதலியையும் சொல்லுறேன் கண்டு பிடிச்சு சொல்லுங்க

Angel சொன்னது…

என்னது fake ஐடியா கர்ர்ர்ர்ர் :) நாங்கல்லாம் ஒரே மாதிரி ஜிந்திக்கறதாலே ஒரே பின்னூட்டம் வருது

Avargal Unmaigal சொன்னது…

ஹலோ தேம்ஸ் கரையோராம் யாரவது இருந்தால் இந்த அதிராவை அதன் உள்ளே தள்ளிவிடுங்கப்பா உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்

Angel சொன்னது…

ஹையோ ஹையோ ஒருத்தரையும் விடாம கலாய்க்கிறாரே .பாவம் நல்லவங்களை விட்ருங்க :)

Avargal Unmaigal சொன்னது…

என்ன இங்க ஒரு புதிய ஆடு வந்து எட்டி பார்த்துகிட்டு ஓடுது அதிரா ஏஞ்சல் ஆட்டை தப்ப விட்டுடாதீங்க அப்புறம் பிரியாணிக்கு ஆடு கிடையாது விரட்டி பிடிங்க

நிஷா சொன்னது…

அவர்கள் பொய்களே.... ஹாஹா.. உண்மைகளுக்கு எத்ர்ப்பதம் அப்படித்தான் வந்திச்சு. இந்த கிண்டல் சுண்டலுக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை.ஆண் முதலமைச்சர் செய்தவைகளை விட ஜெயலலிதா ஒன்றும் கம்மியாக செயல் படவில்லை. அவரும் ஆக்கபூர்வமான காரியங்களில் தான் ஈடுபட்டார். சொத்து சேர்த்தல் கூடா நட்பு என்பதை தாண்டியும் அவர் மக்களுக்காக நலல் திட்டங்களை தொடங்கியதும் பாதகமான திட்டங்களை மத்திய அரசானாலும் அனுமதி அழிக்காமல் அடம் செய்ததுமாக ஆண்களை விடவும் நல்லதாக தான் செயல் பட்டார். இந்த தோழி விடயத்தில் அவர் சறுக்கா விட்டால் அவர் மாடல் முதலமைச்சராகத்தான் இருந்திருப்பார். இந்தியாவில் இந்திரா காந்தி ஆட்சிக்காலம், இலங்கையில் சந்திரிகா குமாரண துங்க காலம். இன்னும் பிற நாடுகளில் பெண்கள் பதவி வகித்த காலங்களை நோக்கினால் அவை ஒன்றும் மோசமானதாக இருந்ததில்லையாக்கும். அரசியலிலும் பெண்களை அவர்கள் போக்கில் நிர்வாகம் செய்ய விட்டால் நிச்சயம் நாடு ஒளிரும் தான். ஜெ, சசி நட்பை வைத்து எதையும் முடிவெடுக்க முடியாதாம். எனக்கு இன்றும் ஜே இறந்த நேரம் சசிகலா கையாண்ட நிர்வாக முறை ஆச்சரியம் தான் தரும்.

நிஷா சொன்னது…

ஹைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ இது நிஜமாகவே மதுரைத்தமிழனா ஏஞ்சல். இந்த ஹாஹா.. ஹீஹீ ஊஊஊ ஏஎ ஆ கீ கே எல்ல்லாம் பார்க்கும் போது யாரோ பேக் ஐடி போல இருக்குப்பா. கேர்புள் ஏஞ்சல். ஒன்னும் நல்லதுக்கில்லை சொல்லிட்டேன்.எனக்கென்னமோ பூமி தலைகீழா சுத்திட்டிருக்காப்ல இருக்கே... ஐயகோ

Angel சொன்னது…

ஆவ் !! வாங்க ப்ரியா ..என் கையை கெட்டியா பிடிச்சுக்கோங்க :)அப்போதான் திரும்பி ஓடி ஒளிய மாட்டீங்க ..தொடர்ந்து பிளாக் எழுதணும் ..யூ மேட் மீ பிளஷ் :) ரொம்ப புகழ்ந்ததில் தேம்ஸ் கரைலருந்து யாரோ உருண்டு வர சத்தம் கேக்குது :)
வருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி பிரியா சீக்கிரம் அந்த டஸ்ட்டர் எடுத்து பிளாகை தட்டி புது போஸ்ட் போடுங்க :)

நிஷா சொன்னது…

ஆமாம் எங்க வீட்டில் நான் தான் தினம் காப்பி போடுவேன். ஏஞ்சல் வீட்டில் ஏஞ்சல் போடுவாங்க. ஷோ நாங்க இருவருமே காப்பி குடிக்குமுன் பேஸ்ட் வைச்சு பிறஸ் பண்ணிருவோம். அதனால் நாங்க எப்பவும் ஷேம் தான்.

Angel சொன்னது…

அந்த ஆங்கிலோ இந்தியன் பொண்னோட கணவர் ரைபிளோட ஓடி வாறாராம் :)

நிஷா சொன்னது…

வழக்குக்கு சம்பந்தமில்லாதவர்களை எல்லாம் கோர்ட்டுக்கு அழைப்பதை கண்டிக்குமாறு ஜட்ஜ் ஏஞ்சலம்மா அவர்களை வேண்டிகொண்டு தொடர்கின்றேன் 16 எனில் அசட்டுப்பெண் என யாருங்க சொன்னார்கள். ஆனால் அந்த வயசு அசட்டுத்தனமும் ஸ்விட் தான் தெரியுமோ? நினைத்தாலே இனிக்குதே! பார்க்கும் பார்வைகள், கேட்கும் பேச்சுக்கள் அனைத்துமே ருசிக்கும் காலம் அல்லவோ அது. அவ்வ்வ்வ்வ். அதை எப்பவும் இப்பவும் எப்பவும் உணர என்னை போல் இருக்கணும் சார். நிஷா எப்பவும் அப்படித்தானாக்கும்.

Angel சொன்னது…

ஹாஹா :) அவருக்கு எப்பவுமே தங்கமான மனசு

Angel சொன்னது…

எல்லாருக்கும் மிக்க நன்றி நட்புக்களே இன்று அசராமல் அடித்து விளையாடிய சகோதரர் அவர்கள் உண்மைகள் ஆட்ட நாயகன் பட்டத்தை பெறுகிறார் :) இத்தோடு உறங்க செல்கிறேன் பை நிஷா அன்ட் அவர்கள் ட்ரூத்

Avargal Unmaigal சொன்னது…

ஷேம்
ஷேம்
ஷேம்
ஷேம்

நிஷா சொன்னது…

உண்மையில் இந்த வேஸ்ட் பொருட்களைகொண்டு கைவண்ணம் கலைவண்ணமாக்குவதும், வாழ்த்து அட்டைகளை நானே சொந்தமாக தயாரித்து அனுப்புவதும், என் பசங்க பிறந்த போது அவர்களுக்கு தேவையான் அழகியசைட்டிங்க பிரில் வைத்த போர்வைகள் தலையணைஉறைகள், தொட்டிலுக்கான அலங்கார வடிவங்களை தைத்ததும், குட்டிகுட்டி சாக்ஸ் பின்ன்னு ஷால்கள் பின்னி வைத்ததும் பிள்ளைகள் பிறந்ததிலிருந்து அவர்களுக்கு என தனித்தனி ஆல்பம்,, வெட்டி ஒட்டி என நிரம்ப ஸ்டிக்கக்ர் எல்லாம் ஒட்டி கலரிங்க எல்லாம் செய்து சேமித்ததும். ஓய்வு நேரத்தில் கேக் செய்து பழகி அதுவே.. என் இன்றைய பிசினஸுக்கு ஆரம்பகால அஸ்திபாரமாகி அன்றைய நிலையிலேயே4 சுவிஸில் பல இடங்களுக்கு வெடிங்க கேக் ஒன்றுக்கு 1997. 98 களிலேயே 500 பிராங்க வரை ஆர்டர் எடுத்து செய்ததுமாக கண் கண்டதை கை செய்யும் கைப்பணிகளில் ஏஞ்சலைப்போல எனக்கும் ஆர்வம் உண்டு, ஏஞ்சல் பொழுது போக்காக செய்வதை நான் வியாபாரமாக்கிக்கொண்டேன். மகளின் பிறந்த நாளுக்கு வாழ்த்து அட்டைகள் திருக்குறள் வசனம் சேர்த்து நானே தயாரித்தேன். நான் என் பசங்க போட்டோவை இட்டு அவர்கள் வாழ்த்துவது போல் வாழ்த்து அட்டை தயாரித்து இலங்கைக்க் பிரபாவின் வீட்டுக்கு அனுப்பினேன். அதை அவர்கள் நான் காட் வாங்க காசு மிச்சம் பிடிக்க செய்கின்றேன் என சொன்னதும் நம்மவர்களுக்கு இதன் அருமை பெருமை புரியாது என விட்டு விட்டேன். ஹாஹா. திருமணத்துக்கு முன் தினம் ஒரு சமையல் என வித்தியாசமாக ஏதேனும் செய்திட்டே இருப்பேன். இப்பவும் டீவி முன் உட்கார்வதே கிடையாது, எங்க வீட்டு டிவியை ஆன் செய்யவும் தெரியாது. அந்த நேரத்தில் ஏதேனும் கைவேலை செய்யலாம் என நினைப்பேன். அதனால் தான் எங்கள் ஈவன்ஸ்களில் என்னால் வித்தியாசமாக மேசை அலங்காரங்கள் குறித்து சிந்திக்க் முடிகின்றதாக்கும். நானும் இதிலும் கீதா ஏஞ்சல் போல தானாக்கும். பேக் ஐடி என சொல்லுபவங்க தான் பேக்கு ஐடி , நாங்க மேக் பண்ணும் ஐடிங்க.

Avargal Unmaigal சொன்னது…

சரக்கு பாட்டிலோடதான் வருவார் ஹீஹீ

Angel சொன்னது…

சூப்பர்ப்பா நிஷா ..நம் மக்களை குறை சொல்ல முடியாததுப்பா .இங்கே வெளிநாட்டினர் ஹாண்ட் மேட் கிஃப்ட்ஸ் தான் ரொம்ப விரும்பறாங்க .எவ்வளவு விலையும் தருவாங்க ..நான் நட்புக்களுக்கு மட்டுமே செயறதோட நிறுத்திக்கறேன் .இன்னும் பிஸினஸா செயயலை ..ஆனா சிலநேரம் ஆர்டர் கொடுத்த ஒன்றிரண்டு கார்ட்ஸ் செய்வேன் :)

அப்புறம் நிஷா எனக்கு கவிதை எழுத சொல்லித்தர முடியுமா :) இங்கே ஒருத்தருக்கு கவிதை வேணு,மாம் கவிதா இல்லை கவிதை poem

நிஷா சொன்னது…

உண்மை கீதா அண்ட் ஏஞ்சல். ஒரு பதிவை படித்து அதை அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆராய்ந்து கருத்திடுவது அதை எழுதுபவருக்கான ஊக்கம் தரும் என நான் நினைப்பேன். எப்போதும் இந்த மதுரைத்தமிழர் மாதிரி அருமை, எருமை, பெருமை என ஒத்தை வரியில் பத்து பின்னூட்டம் இடுவதே இல்லை. மொத்தமாக 100 வரியில் அதாகப்பட்டது அவர் சொல்வது போல் நான்கு பதிவுக்குரிய வரிகள் ஒரே பின்னூட்டத்தில் இடணும் என வரமே கேட்டு பெற்றிருக்கின்றேன். சுமம ஸ்டைலீஸாக சுருங்க சொல்லி ஓடுவதெல்லாம் நமக்கு ஆகவே ஆகாது. போட்டால் ஒரே போடு. இல்லையா... அப்படியே ஓடு.. இதான் என் பாலிசி.

அப்புறமா.. இந்த பெண்கள் பக்கம் எனில் சமையல் குறிப்பும், அலஙாரமும், வீட்டுதேவைகளும் தான் அவசியம் என்பது போல்... பல லேடிஸ் தொடர்வதை பார்த்து சமையல் குறிப்பு என்றாலே எனக்கு அலர்ஜி.அதே துறையில் இருந்தாலும் நான் சமையல் குறிப்பு எழுதுவது முக்கியமாக் புகைப்படமெல்லாம் எடுத்து எழுதுவதே இல்லை. இனியும் இதெல்லாம் எழுதி என் நேரத்தினை வேஸ்ட் செய்யும் ஐடியாவும் இல்லை. ஆனால் நான் சூப்பராக சமைப்பேனாக்கும், என் சாப்பாட்டுக்கு ரசிகள் பட்டாளங்களே உண்டு. அதிலும்... எங்கள் ஈவன்ஸ் கம்பெனியில் ஆர்சர் தரும் பலர் நீ நேரடியாக் நின்று சமைப்பியா. . உன் சமையல் சுவை இருக்கணும் என கட்டாயமாக சொல்லி ஆர்டர் தரும் படி... 2000 விருந்தினர் வரை ஒரே சுவையில் மசாலாக்களை தயார் செய்து சமைத்து விடுவேன். அதாவது எல்லா கட்டிங்க வெட்டிங்க வேலையாட்கள் செய்ய எனக்கு உதவியாளராக ஒருவர் நிற்க.. நான் கமேண்ட் செய்ய செய்ய...ஆயில் விடு,, கடுகு சீரகம், போடு,, காய் போடு மசாலா தூவு என அளவுகள் எடுத்து கொடுக்க கொடுக்க... அவர்கள் செய்யும் அழகே அழகாக்கும், ஒருக்கா இந்தபக்கம் வந்து எட்டிப்பார்த்துட்டு போகணுமாக்கும். ஒரு தடவை வந்தால் வருடா வருட என் சாப்பாட்டை சாப்பிட ஓட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டோ டி வந்திருவிங்கப்பா.

நிஷா சொன்னது…

ஆஹா! நன்றி ஏஞ்சல். நான் ஹோட்டல் போகாமல் இருக்கணுமே.. நடக்கும் காரியமா என தெரியல்ல. பார்ப்போம்.

நிஷா சொன்னது…

மதுரைத்தமிழரே.. எங்க அன்பை விட, எங்க பாசத்தை விட, எங்க நட்பை விட, எங்களுக்கு பெரிய்ய்ய்ய அண்ணனா உங்களை ஏற்றுகொண்டதை விட.. உங்கூட்டு மாமி அடிக்கும் நேரம் அழுதுட்டு வருவியளே.. அப்பகண்ணீர் துடைச்சதை விட... உங்களுக்கு பணம் தான் பெரிச்ச்ச்ச்ச்ச்ச்ச்சா போச்சா.. போங்கப்பா போங்க. நாங்க உங்க பேரிலயே பத்து பேக் ஐடி தயார் செய்து நாங்களே பின்னூட்டிப்போம்.காசெல்லாம் கொடுக்காமல் பின்னூட்டம் போட்டு கின்னஸிலும் இடம் பிடிப்போம் பேக் ஐடி ஷோக்கா இருக்க்க கவலை ஏனாம்?

ஆனாலும் இன்னுக்கு செம்ம கலாட்டா தான் சார் நீங்க. இந்தப்பக்கம் நானிருந்து இது நிஜமாக மதுரைத்தமிழரென்பவர் தானோ என யோசிச்சிட்டிருக்கேன். ஒருக்கா ஐபி செக் செய்யணும் சாரே.. ஜேஜே...

நிஷா சொன்னது…

அனுப்பிச்சிரலாம் அதிரா..சாரிப்ப்பா அப்புறம் கலந்துக்க முடியல்ல. ஹோட்டல் கிளம்பிட்டேன்.

நிஷா சொன்னது…

அஸ்க்கு புஸ்க்கு அந்த ஷேம் வேற இது வேறயாக்கும்,

நிஷா சொன்னது…

ஹ்ஹா! ஓடிருவாரே ஏஞ்சல் பரவாலலயா?




நிஷா சொன்னது…

உண்மை தான் ஏஞ்சல்.கிறிஸ்மஸ் காலங்களில் இந்தமாதிரி கைகளால் செய்யும் வாழ்த்தட்டைகளுக்கான மதிப்பே தனி தான்.

போன வாரம் எனக்கு ஒரு பிறந்த நாள் அழைப்பிதல் வந்தது, அதை போட்டோ எடுத்து போடுகின்றேன் பாருங்கள். கைகளால் செய்தார்கள், அழைத்த அனைவருக்கும் தாங்களே சுயமாக செய்த வாழ்த்தட்டை தான் அழைப்பிதழ். அழகாக இருந்தது. இந்த மெனக்கெடல், அர்ப்பணிப்பு, ஆர்வம் எதற்கும் ஈடிணை இல்லாதது.

கீதமஞ்சரி சொன்னது…

அழகான அறிமுகம் ஏஞ்சலின்.. மகளுக்கு இணையாக மியாவ் செல்லங்களையும் குறிப்பிடும்போதே அவர்களிடம் நீங்கள் வைத்துள்ள அன்பு தெரிகிறது.. உங்க பதிவுகளில் பலவும் நான் ரசிப்பவை. முக்கியமாக க்வில்லிங் மற்றும் மறுசுழற்சிக்கான பொருட்களைக் கொண்டு செய்யும் கைவினைப் பொருட்கள்.. சூழல் பாதுகாப்பு குறித்த உங்கள் சிந்தனையும் செயல்பாடுகளும் பாராட்டுக்குரியவை.. வாழ்த்துகள் ஏஞ்சலின். இப்படியானதொரு தொடர் மூலம் நாம் அறிந்த பதிவர்களை இன்னும் கூடுதலாய் அறியத்தரும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள் குமார்.

G.M Balasubramaniam சொன்னது…

OH....My Angel... No ofence meant/ I was just introspecting

கோமதி அரசு சொன்னது…

அழகான அறிமுக உரை ஏஞ்சலின்.
கைவினைபொருட்கள் செய்வதில் என் அம்மாவை நினைவூட்டுவதால் ஏஞ்சலின் மீது பாசம் எனக்கு, உயிர்களிடத்தில் அன்பு, என் போன்றவரிடம் பாசத்தோடு பேசும் மாண்பு எல்லாம் ஏஞ்சலின் மீது அன்பை அதிகப்படுத்துகிறது. கொஞ்ச நாட்கள் வலைத்தளம் பக்கம் வரவில்லையென்றால் அக்கா என்னாச்சு ந்லமா? என்று கேட்கும் அன்புக்கு என்ன சொல்வது!
உண்மையில் தேவதைதான் .
ஏஞ்சல்க்கு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
குமாருக்கு நன்றி.


கோமதி அரசு சொன்னது…

நான் உற்சாகப் படுத்துகிறேன் என்று சொன்னத்ற்கு நன்றி ஏஞ்சலின்.
அதிரா, ஏஞ்சலின் பின்னூட்டங்க்கள் என்னை உற்சாகப்படுத்துகிறது.
இளமதியை எழுத வைத்தால் ந்ல்லது. கணவர் மறைவுக்கு பின் இளமதி எழுதவில்லை.

முற்றும் அறிந்த அதிரா சொன்னது…

ஆஆஆவ்வ்வ்வ் அம்முலு வாங்கோ வாங்கோ.... உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி. தொடர்ந்து வரோணும்.
ஸ்ஸ்ஸ் ட்றுத்... உங்க குரல் கேட்டு குழந்தை:) பயந்து ஓடிடப்போறா மிரட்டாதீங்க:)....

Angel சொன்னது…

அழகான பின்னூட்டத்திற்கும் உங்களன்பிற்கும் மிக்க நன்றி கோமதி அக்கா ..ஆமாம் இளமதியை அழைத்து வரணும் வலைப்பக்கம்

Angel சொன்னது…

மிக்க நன்றி அக்கா ..நிறைய அன்பான உள்ளங்களை எனக்கு வலைப்பூ தந்திருக்கு எனக்கும் மிக சந்தோஷம்

Angel சொன்னது…

அழகான பின்னூட்டத்திற்கும் உங்களன்பிற்கும் மிக்க நன்றி கீதா ..மிகவும் புதுமையான ஒரு முயற்சி இல்லையா கீதா ..நாம் நம் வலையில் சொல்வதைவிட வேறொருவர் வலையில் மிக வித்யாசமாக அமைந்துவிட்டது //என்னைப்பற்றி தொடர் //
குமார் சகோவிற்கு மீண்டும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்

priyasaki சொன்னது…

நான் பயந்ததே எக்ஸ்ட் அண்ணைக்குதான்.(true) இது பிரியாணிக்கு ஏற்ற ஆடு இல்லை, ல்லை, லை. ரெம்ப நன்றி அதிரா,அஞ்சு.

Anuprem சொன்னது…

அஞ்சு.....ரொம்ப அருமையா உங்களை பற்றி சொல்லி இருக்கீங்க...

இங்க இருக்க பின்னுட்டங்களை படிச்சதும்...நான் என்ன சொல்ல வந்தேன்னு மறந்துடுச்சு...ஆன வழக்கம் போல் எல்லா பின்னுடங்களும் சூப்பர்..

உங்களுக்கே தெரியும் நானும் தமிழ் blog ல எழுத காரணம் நீங்கதான்...உங்க blog படித்ததற்கு பிறகு தான் இந்த முயற்சுக்கே வந்தேன்...


உங்க எழுத்து பணி தொடர வாழ்த்துக்கள்...

Anuprem சொன்னது…

ஹாய் நிஷா...

ஏற்கனவே ஒருதடவை நீங்க இதே மாதரி சொல்லி இருக்கீங்க..அருமை , பெருமை, எருமை ன்னு நீங்க பதில் சொல்ல மாட்டிங்கன்னு...


ஆன அத படிச்ச பிறகு ஒவ்வொரு தடவை அருமைனு படிக்கும் போது உங்க நியாபகம் வரும்...

அதுனால நானும் முடுஞ்ச அளவு அருமை, பெருமையை தவிர்த்து...நல்லா இருக்கு...சிறப்பா இருக்குனு சொல்லறது..

எப்பூடி...


இன்று திரும்பவும் படிக்கவும் சொல்லனும் தோனுச்சு...

Anuprem சொன்னது…

ஹாய் அம்முலு..

நல்லா இருக்கீங்களா....சிக்கிரம் எழுத வாங்க...உங்க பின்னுட்டத்திற்கு எங்கள் தளம் காத்திருக்கிறது...

நிஷா சொன்னது…

எருமையை பார்த்தாலும் என் ஞாபகம் வருமா அனுராதா? ஏஞ்சல் பதிவின் மூலம் நமக்கு புது நட்பூக்கள் மலர்கின்றதேப்பா!

Anuprem சொன்னது…

என் பதிவுகளில் மொத்தமே 6-7 வரிகள் தான் எழுதுவேன்...ஆன நீங்கள் எல்லாம் பின்னுட்டத்திற்குகே எப்படி இவ்வளோ பெருசா டைப் செய்ரிங்கனு...ஒவ்வொரு தடவையும் இவற்றை எல்லாம் படிக்கும் போது மலைப்பா இருக்கும்...

எப்படி இவங்களால் மட்டும் முடியுதுன்னு...

Anuprem சொன்னது…

@ நிஷா... அச்சசோ....அருமையை பார்த்தா மட்டும் தான் உங்க நியாபகம்...

எருமை ன்னு நீங்க சொன்னது மட்டும் மனசுல டால் அடிக்கும்...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

பகிர்ந்த நடையும், மொழியும் அழகு. பாராட்டுகள். தங்களது பதிவுகளை படித்ததில்லை. இனி தொடர்ந்து படிப்பேன். அறிமுகப்படுத்திய பரிவை குமார் அவர்களுக்கு நன்றி.

அபயாஅருணா சொன்னது…

விவரங்கள் தெரிந்து கொண்டேன்
பல்வேறு வித்தியாசப் பட்ட விஷயங்களில் கலக்குகிறீர்கள் . தொடர வாழ்த்துக்கள்

கோமதி அரசு சொன்னது…

பிரியசகி அம்முவைதான் நீங்கள் அம்முலு என்று குறிப்பிட்டீர்களா?
அம்முவும் உங்களை போன்று மிகவும் பிரியமாய் பேசுவார்கள். வலைப்பக்கம் வரவில்லை என்றால் அக்கா ந்லமா என்று கேட்டுவிடுவார்கள்.
பதிவு எழுத அழைத்து வந்துவிடும்மா ஏஞ்சலின்.

Angel சொன்னது…

ஆமாம் அக்கா :) நான் ப்ரியா அம்முலு அவங்க பிளாக் பேரை சொன்னேன் ..இழுத்து வந்தாச்சு :)ப்ரியா சீக்கிரம் போஸ்ட் போடவும்

Angel சொன்னது…

வருகைக்கும் பாராட்டிய கருத்துக்கும் ,மிக்க நன்றி அபயா

Angel சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் ,மிக்க நன்றி ஐயா

Angel சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் ,மிக்க நன்றி அனு ..நானும் உங்க பென்சில் ஆர்ட் பாபாசாஹேப் படம் பார்த்ததில் இருந்து வரையணும்னு ஆசையா இருக்கு ஒவ்வொருவரும் கற்றுக்கொள்கிறோம் நட்புகளிடமிருந்து

Angel சொன்னது…

ஆஆ !!யாரது இங்கே சின்னபிள்ளைங்களை பயங்காட்டுறது :) @ avargal unmaigal garrr

priyasaki சொன்னது…

நல்லா அடி போடுங்க அஞ்சு ட்ருத் அண்ணைக்கு.!

ஹாய் அனு நன்றிபா. நல்லாருக்கேன். சீக்கிரம் வாறேன்.

priyasaki சொன்னது…

உங்க அன்புக்கு நன்றி அக்கா. சீக்கிரம் வாறேன் அஞ்சு.

கார்த்திக் சரவணன் சொன்னது…

ஐயா, உங்களது எழுத்துக்களை நான் அறிவேன். மேலும், நீங்கள் வேளச்சேரியில் இருக்கும் உங்கள் மகனுடைய வீட்டுக்கு வந்திருந்தபோது நான் உங்களை நேரில் சந்தித்திருக்கிறேன். உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா என்று தெரியவில்லை, நீங்கள் எழுதிய புத்தகத்தை எனக்குப் பரிசாகக் கொடுத்தீர்கள். நான் யாரையும் மறப்பதில்லை. பின்னூட்டம் இடுவதில்லை, அவ்வளவே.

கார்த்திக் சரவணன் சொன்னது…

அனுராதா சகோதரி,

நீங்கள் யார், என்னவென்று அதிகம் பரிச்சயமில்லை. முன்பெல்லாம் இப்படி ஒரு வலைப்பூ இருப்பதே எனக்குத் தெரியாது. நீங்களும் எனக்கு அதிகம் பின்னூட்டம் இட்டதில்லை (என்று நினைக்கிறேன்). ஆனால், எதையோ தேடப்போய், உங்கள் தளம் என் கண்ணில் பட்டது. யாரையும் தொந்தரவு செய்யாமல், நாலு வரி, நாலு போட்டோன்னு அமைதியா போயிட்டு இருக்கீங்க. நல்லது. இதை விட முக்கியமா, என்னுடைய பதிவை Favouritesனு வச்சிருக்கீங்க. அதில்தான் எனக்கு ரொம்பவே பிடிச்சுப் போனது. நன்றி, நன்றி.

கார்த்திக் சரவணன் சொன்னது…

நாகர்கோவிலா? தருமபுரியோ கிருஷ்ணகிரியோன்னு என்று எங்கோ படித்த ஞாபகம்.


உங்களது சின்னஞ்சிறு உலகத்தை நான் அறிவேன். மேலும், Loudspeaker பதிவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.

கார்த்திக் சரவணன் சொன்னது…

ஆச்சரியப்படுத்துபவர்களில் நானா? அவ்வளவு நன்றாகவா எழுதுகிறேன்? ஹையோ, ஹையோ!! என்னையும் குறிப்பிட்டமைக்கு நன்றி. நான்சி பதிவைப் படித்து அழுதீர்கள் என்று சொன்னது நன்றாக ஞாபகம் இருக்கிறது. காரணம், நீங்கள் வாயில்லா ஜீவன்களை விரும்புபவர். வேறு எந்தப் பதிவு உங்களை ஆச்சரியப் படுத்தியது என்று யோசிக்கிறேன். நீங்கள் என் பெயரைக் குறிப்பிட்டது என்னை மேலும் எழுதத் தூண்டும். மீண்டும் நன்றி.

கார்த்திக் சரவணன் சொன்னது…

ஆச்சி ஜிமெயில் பாஸ்வேர்ட் மறந்துவிட்டார் என்று எப்போதோ போனில் பேசும்போது சொன்னார். இந்தப் பதிவின் லின்கை அவருக்கு அனுப்பி படிக்க வைக்கிறேன்.

Angel சொன்னது…

நாகர்கோவில் முன்னோர்கள் அதாவது தாத்தா பாட்டி ஊர் ..
கிருஷ்ணகிரி மாதனூர் சேலம் அரூர் வாணியம்பாடி எல்லாம் எங்கப்பா புண்ணியத்தில் இருந்து பார்த்த ஊர்கள் தர்மபுரினாலும் ரொம்ப கிட்ட பெங்களூருக்கு அரை மணி ட்ராவலாம் பெங்களூர் மருத்துவமனையில் பிறந்தேன் பெங்களூர் அருகே தர்மபுரின்னு எழுதியிருக்கணும் .பதிவு அவசரமா டைப்பினதில் விட்டுப்போச்சு :)

Angel சொன்னது…

லவுட்ஸ்பீக்கர் பிடிக்குமா :) மிக்க நன்றி தம்பி

Angel சொன்னது…

எதை பற்றி எழுதினாலும் சுவையுடன் ரசிக்கும்தன்மையுடை எழுதும் உங்கள் பாணி மிகவும் பிடிக்கும் எல்லா பதிவுகளும் .
தொடர்ந்து பிளாக்கில் எழுதுங்கள்

Angel சொன்னது…

மிக்க நன்றி தம்பி .ஆச்சியை இங்கே பிளாக் பக்கம் வர சொன்னேன் பதிவு எழுத .வருவாங்க அவங்களும் விரைவில் என்று நம்புகிறேன்

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் உறவுகளே...
இதுவரை எழுதிய 1096 பதிவுகளில் கருத்துக்களில் முதல் சதம் அடித்த பதிவு...
சதம் அடிக்க வைத்த அக்காக்கள், அண்ணன்கள் மற்றும் நட்புக்களுக்கு என் நன்றி...
தனித்தனியா நன்றி எல்லாம் சொல்ல முடியாது...

நன்றி... நன்றி... நன்றி....

எல்லாரும் இதே மாதிரி ஒவ்வொரு பதிவருக்கும் கருத்துக் கொடுத்து அவர்களை உறசாகப்படுத்துங்கள்... ஆமா சொல்லிட்டேன்... :)

Angel சொன்னது…

சந்தோஷமும் நன்றிகளும் அனைவருக்கும் ..அடுத்த புதன்கிழமைக்கும் இங்கே எல்லாம் வந்துடனும் நட்புக்களே

Thanks Thambi Kumar :)

நிஷா சொன்னது…

அதுக்கு அவர்கள் உண்மைகள் ஐம்பது பின்னூட்டம் போடணும். அப்புறம் அவருக்கு நீங்க, ஆதிரா, நான் பின்னூட்டணும், கூடவே கீதாவும் சேரணும், அதெல்லாம் நடக்கும் காரியமா.கிழக்கில் உதிக்கும் சூரியன் மேற்கில் உதிக்கும் போது மட்டும் அப்பப்ப இப்படி நடக்கும், பேசாமல் இருக்கும் 11 பின்னூட்டமும் போட்டு 200 ஆக்கிருங்க சொல்லிட்டேன்.

நிஷா சொன்னது…

அதுக்கு அதை பதிந்த பதிவர் வருகைக்கும் தருகைக்கும் நன்றி என ரெகோட் வாய்ஸ் போல் ரைப்பிங்க் காப்பிங்க பேஸ்டிங்க செய்யாமல் ஒழுங்கா ஏஞ்சல் போல் பின்னூட்டணும், பின்னூட்டத்துக்கு எங்களை போல் பொன்னூட்டணும், அதை உட்டுப்போட்டு எல்லா பதிவருக்கு இதே போல் கருத்து கொடுன்னால் முடியாதுன்னால் முடியாது தான். பலர் கருத்துக்கு நன்றின்னு சொல்வதே தங்களுக்கு கௌரவக்குறைச்சல் போலல்ல நினைச்சிங்கறாங்க. இதில் இந்த மதுரையார் பத்தியும் ஒன்னும் சொல்றதுக்கில்லை.இந்த வாட்டி அவருக்கு என்னமோ ஆகிருச்சே. அடிச்சி துவைச்சிட்டு எஸ்கேப் ஆகிட்டாராக்கும். இப்ப ரெம்ப ஓவரா ஆக்டிங்க செய்திட்டோமோ என தலையில் துண்டை போட்டுகிட்டு அழுதிட்டிருபப்தா பட்சி சொல்லிச்சி குமார்.

நிஷா சொன்னது…

ஆமாம் என்னைப்பத்தி நான் எழுதினால் அது எழுவாச்சி காவிய்மா போயிருமே என பயந்துட்டு செவ்வாய்க்கு குடிபெயர இருக்கின்றேன். அதனால் யாரும் பயப்பட்டு இப்படில்லாம் நிஷககும் பின்னூட்டணும் என ஓடி ஒளிஞ்சிக்காதிங்க.

நிஷா சொன்னது…

எழுவாச்சியா!? இதான் வேலைக்கு நடுவில் வீட்டுக்கு வந்தினா வந்த வேலையை பார்த்துட்டு பிரெஷ் ஆகி ஹோட்டல் கிளம்பணும், அதை விட்டு விட்டு இடையில் இங்கே எட்டி தப்புத்தப்பா பின்னூட்டம் இட்டு... ஐயகோ.. அது அழுவாச்சி காவியமுங்க. அப்புறம் என் பேர் நிஷ இல்ல நிஷா. அதையும் திருத்தி வாசியுங்கள்.

Angel சொன்னது…

நாங்க களத்தில் கால் வச்சிட்டா திரும்பி பார்க்க மாட்டோம் :) என்ன பிஸினாலும் எப்படியாவது வந்துடுவோம் நிஷா

வெங்கட் நாகராஜ் சொன்னது…

சக பதிவர்கள் தங்களைப் பற்றி எழுதும் இந்தத் தொடரில் இந்தப் பதிவும் நன்று. ஏஞ்சலின் அவர்களுக்கு வாழ்த்துகள்....

தொடரட்டும் பகிர்வுகள்!

Angel சொன்னது…

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ வெங்கட்

Avargal Unmaigal சொன்னது…

அய்யோ அய்யோ இனிமேல் நிஷாவை பெயரை பார்தால் எருமைதான் லாஸ்ட் நேமாக ஞாபகட்துக்கு வருமே

Avargal Unmaigal சொன்னது…

நிஷா உங்களுக்கு எருமை என்று அருமையான பெயர் கிடைத்திருக்கிறது இதற்காக ஒரு விழா எடுத்து கொண்டாடலாமே

Avargal Unmaigal சொன்னது…

ஆஹா முதியோர்களும் சின்ன குழந்தைகள் போலத்தான் என்பது மறந்துவிட்டது

Avargal Unmaigal சொன்னது…

ஹய்யா முதல் பின்னுட்டம் அடுத்தாக 100 வதும் இப்போது 200 பின்னுட்டமும் நானே படிக்கும் போது கூட 100 200 எடுத்தது இல்லை ஆனால் இப்ப 200 தொட்டுவிட்டேன்

«மிகவும் பழையது ‹பழையது   223 இல் 1 – 200   புதியவை› புத்தம் புதியவை›