மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 28 டிசம்பர், 2016

நாய்க்கு வாழ்க்கைப்பட்டா... (பரிசு பெற்ற கதை)

சிற்றிதழ் உலகம் நடத்திய சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசை பகிர்ந்து கொண்ட கதை... போட்டியை சிறப்பாக நடத்திய திரு. கிருஷ் ராமதாஸ் அவர்களுக்கும் கதைகளை வாசித்து மதிப்பெண்கள் கொடுத்த நடுவர்களுக்கும் நன்றி.

முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பிடித்த எழுத்தாளர்களுக்கும் , கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

சரி அப்படியே பிரதிலிபி - ஒரே ஒரு ஊர்ல சிறுகதைப் போட்டியில் களத்தில் இருக்கும் 'நிழல் தேடும் உறவுகள்' கதையை வாசித்து உங்க மதிப்பெண்ணையும் மறக்காமல் கொடுங்கள்.. நன்றி.


****
நாய்க்கு வாழ்க்கைப்பட்டா...

"எங்க போகணும்?"

"கல்துறைக்கு..."

"கல்துறைக்கா...? எத்தனை மணிக்கு...?"
"
ஆறுமணிக்கு..."

"சரி... அங்க போயி..."

"நீ ஆட்டோவுல போ... ஆட்டோ ஏறும் போது நம்பரைக் குறிச்சி எங்கிட்ட சொல்லிடு... கல்குறிச்சி அஞ்சு லைட்டுக்கிட்ட போனியன்னா ஆட்டோ நம்பரை வச்சி அவங்க உன்னை பிக்கப் பண்ணிப்பாங்க..."

"அவங்கன்னா... எத்தனை பேர்...?"

"செய்யிற வேலையில எல்லாம் துருவித் துருவி கேட்பே... யாரா இருந்தா என்ன... போனமா... வந்தமான்னு இல்லாமா... சும்மா..."

"உனக்கு என்ன இம்புட்டு கோபம் வருது... அவங்கன்னா எத்தனை பேர்... போனமா வந்தமான்னு இருக்கணுமின்னாலும் நாளைக்கும் நான் தொழிலுக்குப் போகணும்... ரெண்டு பேருன்னா ஓகே... அதுக்கு மேலன்னா என்னால முடியாது... தேவிதான் அதுக்கு சரியா வருவா... நீ அவளைக் கூப்பிடு..."

"ஏய் இந்தா... அவளைக் கூப்பிடத் தெரியாமயா உன்னைக் கூப்பிடுறாக... அவங்க இப்படித்தான் வேணுமின்னு கேட்டாங்க... நீயும் ராதாவுந்தான் சரியா வருவீங்கன்னு தோணுச்சு... ராதா இப்போ மாரியாயி மில் ஓனர் கூட ஊட்டியில... அதான் உன்னைக் கூப்பிட்டேன்..."


Image result for lADY ART

"ஓ... இது இது இப்படி இருக்கணும்ன்னு கேக்க ஆரம்பிச்சிட்டானுங்களா... சரிதான்... ஆமா... மொத்தம் எத்தனை பேர்ன்னு சொல்லு..."

"நாலு பேர்..."

"நாலா... என்ன விளையாடுறியா...? என்னைய என்ன மிஷின்னு நினைச்சியா...?"

"ச்ச்சீய் கத்தாதே... சொளையா பன்னெண்டு ஆயிரம் கொடுத்திருக்கானுங்க... உனக்கு எவன் கொடுப்பான் இம்புட்டு... மிஞ்சி மிஞ்சிப் போனா ரெண்டாயிரம் கிடைக்கும்... இன்னைக்கு ஒரு ராத்திரிக்கு உனக்கு ஆறாயிரம்... சொளையா வருது வேணாங்கிறே... நாலு பேருதான்... சின்னப்பசங்கதான்... சரியா வரும்..."

"ஆறாயிரம் கிடைக்கிறது சரிதான்... ஒரு வாரத்துக்காசு ஒரு நாள்ல... ஆனா சின்னப் பசங்கன்னா... காலேசு பசங்களா...?"

"இங்க பாரு.. நீ அங்க போ... அவனுக கூப்பிடுற எடத்துக்குப் போ... என்ன விரும்புறானுகளோ அப்படி நடந்துக்க... விடியக்காலத்துல ஆட்டோவுக்கு போனது வர்றதுக்குன்னு காசு வாங்கிக்கிட்டு முடிஞ்சா காலைச் சாப்பாட்டுக்கும் வாங்கிக்கிட்டு வந்து சேரு... எல்லா விவரமும் தெரிஞ்சாத்தான் போவிங்களாக்கும்... ஏன் போன வாரம் எழுபது வயசுக் கெழவன் கூட மூணு நாள் இருந்துட்டு வரலை..."

"இங்க பாரு அது வேற... இது வேற... பசங்கன்னா காலேசு பசங்களா சொல்லு...."

"நீ என்ன நொய்யி நொய்யின்னுக்கிட்டு... ஸ்கூல் பசங்கடி... போதுமா..."

"ஸ்கூல் பசங்களா...? இவனுகதான் அளவு சொல்லிக் கேட்டானுங்களா...? எனக்கு அந்த ஆறாயிரம் வேண்டாம்... நான் போகலை... வேற யாராச்சும் பாரு..."

"ஏய்... எவனா இருந்த நமக்கென்ன... நமக்கு வேண்டியது பணம்... இப்ப வேற யாராச்சும் பாருன்னா... பார்ட்டிக்கிட்ட மொத்த பணமும் வாங்கிட்டேன்... இன்னும் மூணு மணி நேரத்துல நீ கல்துறையில இருக்கணும்... இன்னைக்கு நீ போகலைன்னா இனி உன்னைய எப்பவும் கூப்பிடமாட்டேன் தெரிஞ்சிக்க..."

"என்ன மிரட்டுறியா...? நான் உங்கிட்ட எத்தனை தடவை சொல்லியிருக்கேன்... ஸ்கூல் பசங்கன்னா என்னைக் கூப்பிடாதேன்னு... என்னோட மகன மாதிரி இருப்பானுங்க... புரிஞ்சிக்க... அவனுக கூட எப்படி... எனக்கும் மனசு இருக்கு... உடம்பை விக்கிறவள்ன்னா மரத்துப் போனவன்னு நினைச்சி வச்சிருக்கே நீ... காலேசு பசங்க கூட இருக்குறதுக்கே வெந்து சாவேன் தெரியுமா... ஸ்கூல் பசங்க... சை... போனதடவை இப்படித்தான் மிரட்டி அனுப்பினே... ப்ளீஸ் சின்னப்பசங்களோட வாழ்க்கை நல்ல பாதையில் பயணிக்கட்டும் இதில் வேண்டாம்... ஒரு தடவை விழுந்துட்டா அப்புறம் எழவே மாட்டானுங்க..."

"எனக்கு நீ கிளாசெடுக்குறியா தே... எவனா இருந்தா உனக்கென்ன... நாளைக்கு காலையில உன்னோட அக்கவுண்ட்ல காசு ஏறிடும்... அவனுக ஆசைய உங்கிட்ட தீத்துக்கப் போறானுங்க... படுக்குற தொழில்ல இவங்கிட்ட படுக்கமாட்டேன் அவனுக்கிட்ட படுக்கமாட்டேன்னு பத்தினி வேம் போடுறே... நாய் வேம் போட்டா குரைச்சித்தான்டி ஆகணும்... கிளம்பிப் போய்க்கிட்டே இரு.."

"பத்தினி வேமா... அதான் பாழுங்கிணத்துல விழ வச்சிருச்சே வாழ்க்கை... இனி எங்கிட்டு பத்தினி வேம் போடுறது... பசங்க வேண்டான்னுதான் சொல்றேன்... எனக்கு எம்மவனை ஒத்த வயசுல்ல பசங்க கூட இருக்க விருப்பமில்லை... ஆறாயிரம் இல்லை ஆறு லெட்சம் கொடுத்தாலும் எனக்கு வேண்டாம்... நாய் வேம் போட்டாலும் நானும் மனுசிதான்... நீ எனக்கு தொழில் கொடுக்கலைன்னா ஒண்ணும் குடி முழுகிடாது... எனக்குன்னு வர்ற கஸ்டமர் வரத்தான் செய்வாங்க... முதல்ல அந்த பயலுககிட்ட காசை திருப்பிக் கொடுத்துட்டு நாலு உதை கொடுத்துட்டு வா... காசு கிடைக்கிதுங்கிறதுக்காக நரகலைத் திங்காதே... உனக்கும் பசங்க இருக்கானுங்க..." பொரிந்து தள்ளிவிட்டு போனை வைத்தாள் அவள்.

                                                                                                                                                                 -'பரிவை' சே.குமார்

13 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வாழ்த்துகள் நண்பா...

KILLERGEE Devakottai சொன்னது…

வாழ்த்துகள் நண்பரே

மாதேவி சொன்னது…

வாழ்த்துகள்.

Kasthuri Rengan சொன்னது…

wonderful bro

Kasthuri Rengan சொன்னது…

do not publish
you should have avoided the last line
name not necessary , and the intro is also but altogether the story is very powerful

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

வாழ்த்துக்ள் நண்பரே
தம +1

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்லதொரு கதை. பாராட்டுகள் குமார்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

வாழ்த்துகள்! குமார்!

ஆனால், கதை மனதை என்னவோ செய்துவிட்டது. அதுவும் தொடங்கி வரும் போது வாசிக்க முடியவில்லை குமார்..அந்த அளவிற்கு மனதை நொறுக்கிவிட்டது.... பாதியிலேயே நிறுத்திவிடலாமோ என்று நினைக்கத் தோன்றியது....முடித்துவிட்டேன்...மனம் இன்னும் அடங்கவில்லை...

கீதா

துரை செல்வராஜூ சொன்னது…

உலகை இப்படி ஆக்கிவிட்டார்கள்.. யார் சொல்லி இனிமேல் திருந்தப் போகின்றது?..

பா.சக்திவேல் (P.SAKTHIVEL) சொன்னது…

வாழ்த்துகள்...

Yarlpavanan சொன்னது…

வாழ்த்துகள்
அருமையான கதை

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்

வாழ்த்துக்கள் தொடரட்டும் பணி

Kamala Hariharan சொன்னது…

வணக்கம் சகோதரரே

கதையை படித்து முடித்தவுடன் மனது கனத்து விட்டது. அருமை. எழுத்துலகில் சிறப்பாக பயணிக்க மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி.

நன்றியுடன்.
கமலா ஹரிஹரன்.