மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 2 நவம்பர், 2015

சந்தோஷமாய் இரு



நீ
நான்
கல்லூரி...

மறக்க இயலாத
இளமையான
இனிமையான
நாட்கள் அவை...

சரளை ரோடு
ஒற்றை வேம்பு...
மைதானத்து
மரங்கள்...

இன்னும்
கண்ணுக்குள்
நாம் அமர்ந்து
பேசிய
சிமெண்ட் பெஞ்சு...

என் வகுப்பறை
நீ கடந்தாலோ
உன் வகுப்பறை
நான் கடந்தாலோ
நம் பெயரை
உச்சரிக்கும்
நட்புக்குள்...

அதற்காகவே
காத்திருந்தது போல
மெல்லத் திரும்பி
நீ வைக்கும்
புன்னகை
தினமும்
பூப்பதுண்டு...

நாம் கொடுத்துக்
கொண்ட
நம் பிறந்தநாள்
பரிசுகள்
எல்லாம்
இன்னும்
பத்திரமாய்
என்னிடம்...

உன்னிடமும்
இருக்குமென
நினைக்கிறேன்...

நீ அழைக்கும்
அந்த செல்லப் பெயர்
இன்னும் ஒட்டிக்
கொண்டிருக்கிறது
உள்ளத்தில்...

உன் வீட்டில்
அழைக்கும் பெயரை
யார் அழைத்தாலும்
எதிர்க்காத நீ
ஏனோ என்னை
மட்டும் அதை
அழைக்க
விடுவதில்லை...

உன்னைச் சுருக்கி
அழைத்தால்
மிகவும் சந்தோஷிப்பாய்...

என்னுள்
தென்றலாய்...
சாரலாய்...
இயக்கமாய்
இருந்தவளே...

இன்றும்
எனக்குள்ளே
இருப்பவளே...
உன் புன்னகை
இன்னும் பூத்துக்
கொண்டிருக்குமென
நினைக்கிறேன்...

எங்கிருந்தாலும்
சந்தோஷமாய் இரு...
வாழ்க்கை உனக்கு
வானவில்லாய் இருக்கட்டும்...
-'பரிவை' சே.குமார்.

21 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தென்றலாய்...
சாரலாய்...

ரசித்தேன்....

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தமிழ்மணம் இணைத்து +1

நன்றி...

”தளிர் சுரேஷ்” சொன்னது…

சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

KILLERGEE Devakottai சொன்னது…

அருமை நண்பரே என்றுமே தோற்ற காதலே வாழ்ந்து கொண்டு இருக்கும் என்பார்கள் அது உண்மைதான்....

எதற்க்கும் வீட்டில் படித்து விடாமல் இருக்க, துண்டைப் போட்டு மூடி வையுங்கள்
தமிழ் மணம் 2

துரை செல்வராஜூ சொன்னது…

எங்கிருந்தாலும்
சந்தோஷமாய் இரு...
>>> வாழ்க்கை உனக்கு
வானவில்லாய் இருக்கட்டும்..<<<

க்விதை - அருமையாக இருக்கின்றது..

S.P.SENTHIL KUMAR சொன்னது…

கவிதையும் படமும் அழகு!
த ம 3

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை
ரசித்தேன் நண்பரே
தம +1

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ஆஹா! ரசிக்கவைத்தக் கவிதை! அருமை குமார்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தமிழ் மண இணைப்பிற்கு நன்றி அண்ணா...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
கருத்துக்கு நன்றி...
ஆமா... ஆமா... அது கடைசி வரைக்கும் இருக்குமாமே... சொல்லக் கேள்வி அண்ணா...

எங்க வீட்டு எஜமானிக்கு எல்லாம் தெரியும்... சோ மறைத்து வைக்க வேண்டியதில்லை...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
ஊருக்குப் போய் பதிவிற்கும் வந்தாச்சா...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க நண்பரே...
படம் தேடி எடுத்தது... அந்த அழகு வேண்டும் என்பதால்...
கருத்துக்கு நன்றி...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க துளசி சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

கல்லூரிப்பக்கம் அழைத்துச்செல்வீர்கள் என்று நினைத்து உள்ளே வந்தால் வேறு பக்கம் இழுத்துச்சென்றுவிட்டீர்களே, நல்ல ரசனை.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல கவிதை..... எங்கிருந்தாலும் வாழ்க!

சாரதா சமையல் சொன்னது…

அருமையான கவிதை குமார். ரசித்தேன்.

சென்னை பித்தன் சொன்னது…

இதயத்தில் கல்வெட்டாய்ப் பதிந்த நினைவுகள்
அருமை

அன்பே சிவம் சொன்னது…

உன்னைச் சுருக்கி
அழைத்தால்
மிகவும் சந்தோஷிப்பாய்...

மிக எளிய வார்த்தைகளில்
ஒரு விவரிப்பு
அதுதான் கவிதையின்
சிறப்பு..