மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 8 மார்ச், 2015

குடும்ப விளக்கு

(மார்ச் -08 மகளிர் தின வாழ்த்துக்கள்...)


காலை எழுந்தது முதல் பணம் கேட்டு நச்சரிக்கும் கணவனுடன் சண்டையிட்டாலும் சமையல் வேலையில் மும்மரமாக இருந்தாள் மரகதம்.

"ஏண்டி, இப்ப பணம் தருவியா... இல்லயா..?"

"உனக்கு எதுக்குய்யா காசு... குடிக்கவும் சீட்டாடவுமா... சல்லிக்காசு எங்கிட்ட இல்ல... போய்யா..."

"நான் குடிப்பேன்... கும்மாளம் அடிப்பேன். உனக்கென்னடி... அது என்ன உங்க அப்பமுட்டு காசா... எம்மக சம்பாரிக்கிறது..."

"மக சம்பாரிக்கிறது... தூ... வெக்கமாயில்ல... பொம்பளப்புள்ள சம்பாத்தியத்துல தண்ணியடிக்க... நீ எல்லாம் ஒரு ஆம்பள..."

"ஆமாண்டி... நா ஆம்பிள்ளதான். அதனாலதான் மூணு புள்ளைய பெத்தேன்..."

"புருசன் குடிகாரனா இருந்தாலும் நாங்களும் சபலப்படுறதாலதான் நீங்க அப்பன். நாங்க முடியாதுன்னு சொன்னா... "

"ஏய்... இங்க பாரு... உன்னோட பேசிக்கிட்டு இருக்க நேரமில்லை... 100 ரூவா கொடு."

"முடியாதுய்யா... எம்மக வெளி நாட்டுல கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற பணம். அதை குடிக்க நான் தரமாட்டேன். "

"என்னடி ரொம்ப பேசுற... தே... மகளே" என்றபடி அவளை அறைந்துவிட்டு "எவனவது கொடுப்பாண்டி... வந்து வச்சுக்கிறே..." என்றபடி கிளம்பினான்.

'நல்லவேளை சின்னவளுங்க ரெண்டு பேரும் காலேசுக்கு பொயிட்டாளுங்க. ம்... பெரியவ பாவம், படிக்காம வெளிநாட்டுல போயி வீட்டு வேலை செய்து பணம் அனுப்பி இவளுகளை படிக்க வைக்கிறதோட குடும்பத்துக்கும் அவதான் இப்ப எல்லாமே... அவளுக்கும் காலாகாலத்துல கல்யாணத்தை முடிக்கணும்.ம்... குடிச்சே அழிக்கிற இந்த ஆளை நம்பி மூணு புள்ளைங்களையும் எப்படி கரையேத்தப் போறேன்... எல்லாம் மாரி செயல்...' வழியும் கண்ணீரைத் துடைத்தபடி வேலையை தொடர்ந்தாள்.

"மரகத அத்தை உங்களுக்கு போன் வந்திருக்கு." என்று வாசலில் நின்று கத்தினான் பக்கத்து வீட்டு பையன்.

"இந்தா வாறேம்பா..." என்றபடி அடுப்பை அணைத்துவிட்டு முகத்தை துடைத்துக் கொண்டு, 'தேவியத்தான் இருக்கும். வேற யாரு நமக்கு பண்ணப்போறா...' என்று மனசுக்குள் நினைத்தபடி பக்கத்து வீட்டை அடைந்தாள்.

"வாங்க மதினி. தேவிதான். இப்ப கூப்பிடுவா... ஆமா... என்ன காலையிலயே சண்டையா...?"

"அது எப்பவும் நடக்கிறதுதானே...ம்... நான் வாங்கி வந்த வரம் அப்படி. அப்புறம் என்ன சொல்ல... அடிபடுறதும்... மிதிபடுறதும்... என்னோட காலம் பூராவும் தொடர்கதைதான்... "

போன் மணியடிக்க... "மதினி உங்களுக்காத்தான் இருக்கும் எடுங்க..."

"அலோ..."

"அம்மா... நான் தேவி பேசுறேன்... எப்படிம்மா இருக்கே."

"ம்... நல்லா இருக்கேம்மா... நீ எப்படி இருக்கே..."

"எனக்கென்னம்மா... நல்லாயிருக்கேன்... அப்பா, தங்கச்சிங்க..?"

"ம்... நல்லா இருக்காங்க... எப்பம்மா வருவ?"

"என்னம்மா... வந்து என்ன பண்றது..? இன்னும் ரெண்டு, மூணு வருசம் ஆகட்டும்... நாம நல்லா வரணும்மா... அதுதான் எனக்கு முக்கியம். ஆமா... என்னம்மா குரல் ஒரு மாதிரி இருக்கு எதாவது பிரச்சினையா?"

"இ.. இல்லம்மா... அதெல்லாம் ஓண்ணுமில்ல..."

"பொய் சொல்லதம்மா... உன் குரலே காட்டுதே... அப்ப சண்டை போட்டாரா... அடிச்சாரா..? உண்மைய சொல்லுங்க..."

"அது எப்பவும் நடக்கிறதுதானே... அதவிடு... உனக்கும் கல்யாணம் பண்ணனும்... வயசாகுதுல்ல..."

"கல்யாணமா?" வெறுமையாக சிரித்தவள், "அம்மா... முதல்ல தங்கச்சிங்க படிக்கட்டும். அவளுகளுக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டு நான் பண்ணிக்கிறேன். ''

"என்னம்மா... அவளுகளுக்கு இப்ப என்ன அவசரம்...?"

"அம்மா... எங்களுக்கு நல்ல தாயைக் கொடுத்த கடவுள் தகப்பனை தப்பா கொடுத்துட்டான். அதோட விட்டானா... மூணு பேரையும் பொம்பளைப்பிள்ளையா வேற படைச்சுட்டான். என்னைய விட்டா அவங்களுக்கு செய்ய யார் இருக்கா... ம்... சொல்லுங்க. அவளுகளுக்கு எல்லாம் நல்லபடியா முடியட்டும். என்னோட வாழ்க்கையைப் பற்றி அப்புறம் பார்க்கலாம்."

"ம்... நீ சொன்ன கேட்கவா போறே..."

"அம்மா... செலவுக்கு பணம் அனுப்பியிருக்கேன். அப்பா பணம் கேட்டா கொடு. என்னமோ பண்ணித் தொலையட்டும். நீயாவது அடி வாங்காம இருப்பேயில்ல."

"பணம் கொடுத்தா மட்டும் மாறப் போறாரா... அது சாதிப்புத்தி சவக்காரம் போட்டு கழுவினாலும் போகாது. அதை விட்டுத்தள்ளு"

"பணம் வந்ததும் முதல்ல ஒரு செல்போன் வாங்கிக்க."

"நானா... செல்போன்... சரிதான்... அதையும் உங்கப்பன் தூக்கி வித்துப்புட்டு தண்ணியடுச்சுட்டு சீட்டாடிட்டு வந்துருவான். வீட்டுப் போனுக்குத்தான் கணேச மாமா இந்த மாசம் பணம் கட்டி வாங்கித்தாரேன்னு சொல்லி இருக்கு."

"சரிம்மா... உடம்பை பார்த்துக்கம்மா... நான் அப்புறம் பேசுறேன்..."

"சரிம்மா".

கடல் கடந்த தேசத்தில் கண்ணீரோடு போனை வைத்த தேவி, 'என்னை மன்னிச்சுடுங்கம்மா... உம் பொண்ணு வீட்டு வேலை பாக்கலைம்மா. பல பேருக்கு வீட்டுக்காரியா இருக்காம்மா. ஏஜெண்டை நம்பி வந்து மோசம் பொயிட்டேம்மா. இங்க வந்து சேர்ந்ததும் டான்ஸ் கிளப்புல வேலையின்னு சொன்னான். இப்ப தினமும் ஓருத்தனுக்கு முந்தி விரிக்க சொல்லுறான். எனக்கு தினம் தினம் முதலிரவுதாம்மா. என்னய மாதிரி நிறையப்பேர் உண்டு. எல்லோருமே மனசுக்குள்ள வேதனையோட உங்ககிட்ட சிரிச்சுப் பேசுறோம். என்ன செய்ய எங்க நிலமை தெரிஞ்சா நீங்க தாங்கமாட்டிங்களே. அதான் இதுவரைக்கும் சொல்லலை. இனியும் சொல்ல மாட்டேன்... ' வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.

"என்னடி தேவி... என்னாச்சு... குடும்ப நினைப்பா...? நமக்கெல்லாம் துக்கமும் கூடாது.. தூக்கமும் கூடாது. இன்னைக்கு எவனோ அவனை சந்தோஷப் படுத்தினாத்தான் ஊர்ல உள்ளவங்க வயிறு நிறையும்... வா... மாமா வந்துட்டான் போல... கதவு திறக்கிற சப்தம் கேட்கிது." என்று தோழி ஒருத்தி சொல்லியபடி செல்ல, முகத்தை துடைத்துக் கொண்டு கிளம்பினாள்.

(எனது  சிறுகதைகள் தளத்தில் பிப்ரவரி - 2010 -ல் பகிர்ந்தது. மகளிர் தினத்தன்று மீள்பதிவாக... நன்றி.)
-'பரிவை' சே.குமார்.

30 எண்ணங்கள்:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

எத்தனை சோகம்..... அவர்களது வாழ்வில்.

த.ம. +1

துரை செல்வராஜூ சொன்னது…

மேகத்தால் மழை பொழியும்..
மேகத்துக்கு லாபம் என்ன?..

என்ன இது!.. மீண்டும் அரங்கேற்றமா!?..
தப்பிக்க வழியே இல்லையா?..

KILLERGEE Devakottai சொன்னது…

//நமக்கெல்லாம் துக்கமும் கூடாது.. தூக்கமும் கூடாது//
மனம் கணத்து விட்டது உண்மைதான் இந்த வகை வாழ்வில் பலரும் உண்டு அயல் தேசங்களில்....

Yarlpavanan சொன்னது…

சிறந்த பதிவு
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்

Menaga Sathia சொன்னது…

என்ன சொல்றதுன்னு தெரியல,இந்த நிலை மாறனும்னா ஆண்கள் மாறவேண்டும்..

yathavan64@gmail.com சொன்னது…


வணக்கம்
த ம வாக்கு 3
நட்புடன்,
புதுவை வேலு

yathavan64@gmail.com சொன்னது…

குடும்ப விளக்கின்
(ஸ்)திரி
பற்றி எரிகிறது
மனதில்.

நட்புடன்,
புதுவை வேலு

UmayalGayathri சொன்னது…

என்ன ஒரு நிலை...என்ன வென்று சொல்வது...தெரியவில்லை.

சகோ நேரம் இருப்பின் வாருங்கள் வலைப்பக்கம்.

koilpillai சொன்னது…

எரியும் விளக்குகளுக்கு எண்ணெய் வார்க்காமல், எரியும் நெருப்பில் எண்ணெய் வார்க்கும் சிலர் இருக்கத்தான் செய்கின்றனர்.

சிந்திக்க வேண்டிய சேதி, வாழ்த்துக்கள்

நட்புடன்

கோ

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

கதையாக மாறட்டும் - இனி...

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

சிந்தனைக்கு உரிய பதிவு நண்பரே
நன்றி
தம +1

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
காலம் உணர்ந்து பதிவிட்டமைக்கு நன்றி நன்றாக உள்ளது. பகிர்வுக்கு நன்றி த.ம 6
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Kamala Hariharan சொன்னது…

வணக்கம் சகோதரரே.!

கதையை படித்ததும், மனசு வேதனையில் கணத்தது. யாருக்கும் எழ வேண்டாம் இச் சோகங்கள். இது இனி கதையாகவே போக வேண்டுமென என உள்ளம் பிரார்த்திக்கிறது...

நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.

ஸ்ரீராம். சொன்னது…

வேதனை தரும் கதை.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.,

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
மாற்றங்கள் வரும் ஐயா...
இது இங்கு பார்த்த சிலவற்றை வைத்தே எழுதியது...
இந்நிலையும் மாறும்..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.,

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.,

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க பாவாணன் ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.,

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.,

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க யாதவன்..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.,

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க யாதவன்..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.,

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்கா..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.,

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க நண்பரே..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.,

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.,

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.,

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ரூபன்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.,

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.,

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.,

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

நீங்கள் சொல்லி வரும்போதே அந்தப் பெண்ணின் நிலைமை தெரிந்து விட்டது. முடிவு!

அம்மாவும் மகளும் பேசும் போதே அந்த முடிவு தெரிந்து விட்டதால் மனது அதைத் தொடர மனமில்லாமல் போனது. இறுதி பாரா மட்டும் கண்களில் பட்டு ......அத்தனை கனத்தது.

ஏஜெண்டுகள் மூலம் வெளிநாடு செல்லுவதைத் தவிர்ப்பது நல்லது. குறிப்பாகப் பெண்கள். விழிப்புடன் இருக்க வேண்டும். வெற்றிக் கொடி கட்டு படம் நினைவுக்கு வந்தது.

yathavan64@gmail.com சொன்னது…

அன்பின் அருந்தகையீர்!
வணக்கம்!

இன்றைய...
வலைச் சரத்திற்கு,

தங்களது
தகுதி வாய்ந்த பதிவு
சிறப்பு செய்துள்ளது!

வருக!
வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.fr/
கருத்தினை தருக!

நட்புடன்,
புதுவை வேலு