மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 24 அக்டோபர், 2014

வலைச்சர ஜந்தாம் நாள் : கதை சொல்லப் போறேன்

வலைச்சரத்தில் நான்காம் நாளான இன்று சிறுகதை ஆசிரியர்களின் பதிவுகளைப் பற்றி பகிர்ந்திருக்கிறேன். அதில்
"முடிவில் திருப்பம் உடைய சிறிய கதை வடிவமே சிறுகதை என்று சொல்வார்கள். உலக இலக்கியத்தில் அமெரிக்க எழுத்தாளர்களான எட்கார் ஆல்லன் போஓ ஹென்றி இருவரையும் சிறுகதையின் தொடக்கப்புள்ளிகளாகச் சொல்வது வழக்கம். ஆனால் சிறந்த வடிவம் கொண்ட சிறுகதைக்கு ஆண்டன் செக்காவ் தான் முன்னோடி என்பார்கள். தமிழில் சிறுகதை வடிவம் எவரால் முதலில் கொண்டுவரப்பட்டது என்பதுகுறித்து விவாதம் உள்ளது. பாரதியாரின் ரயில்வே ஸ்தானம்என்ற சிறுகதையே முக்கியமான முதல்சிறுகதை என்பார்கள், ஆனால் சிறுகதை வடிவம் சரியாக அமைந்தது வ.வெ.சு அய்யர் எழுதிய மங்கையற்கரசியின் காதல் என்ற தொகுதியில் உள்ளகுளத்தங்கரை அரசமரம் என்ற சிறுகதையாகும். தமிழ்ச்சிறுகதையில் மலர்ச்சிக்கு களம் அமைத்தது மணிக்கொடி சிற்றிதழாகும்." (நன்றி தமிழ் விக்கிப்பீடியா)
சிறுகதையில் சொல்ல வந்ததை சிறப்பாக சொல்லி முடித்தால் அந்தக் கதை வாசகனைக் கவரும் என எங்கள் ஐயா சொல்லுவார். அவரின் கதைகள் பெரும்பாலும் வாழ்வியலோடு பயணிக்கும். நான் கதை எழுத ஆரம்பித்தது ஒரு நாள் மாலை ஐயாவுடன் பேசியபடி நடந்து சென்றபோது அவர் நீங்களும் எழுதுங்க என்று சொன்ன பிறகுதான்... முதல் கதை காதல் கதை... அப்ப அப்புறம் என்ன கதை எழுத வரும். அதையும் படித்து... நல்லாயிருக்கு... இன்னும் நல்லா முயலுங்க... என்று சொன்னார். அதன் பின் எழுதிய கதைகளில் கொஞ்சம் மாற்றம் இருக்க... விட்டு விட்டுத் தொடர்ந்தாலும் தற்போதைய எழுத்தில் வாழ்வியலோடு பயணிக்க ஆரம்பித்திருப்பதாக நண்பர்கள் சொல்கிறார்கள்... இருந்தும் இன்னும் சிறப்பாக எழுத வேண்டும்... நிறைய எழுத வேண்டும் என்பதே எனது எண்ணம். இப்போ சில வாரங்களாக தோன்றும் கருவெல்லாம் சோர்வில் கலைகிறது.
ஆமாங்க... அதேதான்... எப்பவும் போல முதலில் நட்பு வட்டத்தில் இருக்கும் கதையாசிரியர்கள் சிலரின் படைப்புக்கள் உங்களின் பார்வைக்காக.

மேலும் தொடர்ந்து வாசிக்க... எப்பவும் போலத்தான் வலைச்சரம் வாங்க.

அதுக்கு முன்னால இந்த பாட்டையும் ரசிச்சிட்டுப் போங்க... 


மதுரை வலைப்பதிவர் மாநாடு-2014 நிகழ்ச்சி நிரல் இங்கே... மதுரையில் பதிவர் வெள்ளம் சூழ இன்னும் ஒரு நாளே உள்ளது.


மீண்டும் சந்திப்போம்.
-'பரிவை' சே.குமார்

3 எண்ணங்கள்:

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
அண்ணா.

ஒரு சிறுகதை எவ்வாறுஅமைய வேண்டும் என்பதைமிக அழகாக சொல்லியுள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றி.
த.ம 2

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அருமையாகச் சொல்லி உள்ளீர்கள்! நண்பரே!

நல்லதொரு பாடல் பகிர்வு!

Yarlpavanan சொன்னது…

சிறந்த பகிர்வு
தொடருங்கள்