மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 16 ஆகஸ்ட், 2014

காதல் டைரி


காதலித்த நாட்களில்
எழுதிய டைரியில்
சில பக்கங்களை நீ
தின்றிருக்கிறாய்...
சில பக்கங்களை நான்
கொன்றிருக்கிறேன்...
சில பக்கங்களில் நாம்
வாழ்ந்திருக்கிறோம்...
சில பக்கங்களோ
நீ,,, நான்...
நாமில்லாமல்
வெறுமையாய்
மரணித்திருக்கிறது
நம் காதலைப் போல...
இருந்தும் டைரி
மட்டும் என்னோடு
வாழ்கிறது நம்
கனவுகளைப் போல....
-'பரிவை' சே.குமார். 

6 எண்ணங்கள்:

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
காதல் நினைவை சுமக்கும் கவிதை..
நல்ல கற்பளை வளம் கண்டு மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி
த.ம 2வது வாக்கு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ஸ்ரீராம். சொன்னது…

டைரி சொல்லும் கதைகள்.





Unknown சொன்னது…

அருமை,காதல் டைரி.

J.Jeyaseelan சொன்னது…

டைரிகள் தான் பல நேரங்களில் நம் கடந்த காலங்களை நிகழ்காலமாக நம் கண்முன் கொண்டுவருகிறது. நல்ல கவிதை ஐயா !

தனிமரம் சொன்னது…

அருமை கவிதை .

மகிழ்நிறை சொன்னது…

காதல் டைரி அட்டகாசம் அண்ணா!