மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2024

சினிமா விமர்சனம் : கொட்டுக்காளி

கொட்டுக்காளி-

இந்தப் படம் நல்லாயில்லை என்றும், இது விருதுக்கென எடுக்கப்பட்ட படம் இதை எப்படி வெகுஜன சினிமாக்களுடன் களமிறக்கலாம் என்றும் ஆளாளுக்குப் பேசிக் கொண்டிருக்கும் போது விகடன் மிகச் சிறப்பானதொரு விமர்சனத்தை அளித்திருக்கிறது. இந்தக் கதை பெரும்பாலும் நகர மக்களிடம் எடுபடாமல்தான் போகும். அவர்களுக்கு மருந்து எடுத்தல், விபூதி போடுதல் போன்றவற்றில் நம்பிக்கை இருப்பதில்லை. இதைப் பற்றி யோசிப்பதும் இல்லை. இந்த வாழ்க்கையை வாழ்ந்த, அனுபவித்த மக்களிடம் மட்டும் இந்தப்படம் எடுபடும். இவ்வளவு தூரம் மருந்தெடுக்கவோ துணூறு போடவோ போவார்களா என்றெல்லாம் யோசிக்க வேண்டியதில்லை. எங்கள் ஊரில் இருந்து ராமநாதபுரத்துக்கு அருகில் வரை சென்று வந்தவர்களும் உண்டு. இப்படியான வாழ்க்கை இன்னமும் தென் தமிழகக் கிராமங்களில் உயிர்ப்போடு இருந்து கொண்டுதான் இருக்கிறது.

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2024

சினிமா விமர்சனம் : உள்ளொழுக்கு (மலையாளம்)

ள்ளொழுக்கு

படத்தின் முக்கிய கதாபாத்திரமே மழைதான். படத்தின் ஆரம்பம் முதல் மழை சாரலாய், தூறலாய், பேய் மழையாய் அடைமழை பெய்து கொண்டே இருக்கிறது. முழங்கால் தண்ணீருக்குள் கதாபாத்திரங்கள் நடந்து திரியும் போது அவர்களுடன் நாமும் மழையில் நனைந்து கொண்டே பயணிப்பது போல் இருக்கிறது.

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2024

புத்தக விமர்சனம் : சமவெளி

 மவெளி-

எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களின் சிறுகதைத் தொகுப்பு.

புதன், 14 ஆகஸ்ட், 2024

'காளையன்' ஒரு உணர்வுப் புயல் - சதீஷ் குமார்

'காளையன்' நாவல் குறித்து  சகோதரர் சதீஷ் குமார் அவர்கள் தனது விரிவான பார்வையை முகநூலில் பகிர்ந்திருந்தார். இந்த நாவலை அவரின் அமெரிக்கப் பயணத்தின் போது விமானத்தில் நான்கு மணி நேரத்தில் தொடர் வாசிப்பில் முடித்திருந்தார். அப்போதே எனக்குத் தனிப்பட்ட முறையில் செய்தி அனுப்பியிருந்தார். அமெரிக்காவில் இருந்து துபை வந்து, இங்கிருந்து இந்தியா செல்ல இருந்த இடைப்பட்ட நேரத்தில் சிறிய பதிவொன்றை எழுதிவிட்டு, செல்போனில் நீண்ட நேரம் சாக்காடு, காளையன் பற்றிப் பேசினார். 

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2024

சினிமா விமர்சனம் : ஜமா

மா-

தன் அப்பாவை ஏமாற்றிப் பறித்துக் கொண்ட ஜமாவை - தெரு நாடகக் குழு - தான் மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்று நினைக்கும் தெருக்கூத்து ஆட்டக் கலைஞனான கதை நாயகன் அதில் வெற்றி பெற்றானா என்பதைக் காதல், ஏமாற்றம், தெருக்கூத்து, அந்தக் கலைஞர்களின் வாழ்வியல் எனக் கலந்து கட்டிச் சொல்லியிருக்கிறார்கள்.

புத்தக விமர்சனம் : கமழ்ச்சி

மழ்ச்சி-

எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களின் கதைகளில் வரும் கதைநாயகர்கள் அல்லது நாயகிகளின் உள்ளுணர்வுகளையும், அவர்களைச் சுற்றி நிகழ்பவற்றையும் மிக அற்புதமாகக் காட்சிப்படுத்தியிருப்பார். அப்படி அவர் நடமாடவிட்டிருக்கும் கதாபாத்திரங்களை நாம் 'கமழ்ச்சி'யிலும் பார்க்கலாம், அவர்களுடன் பயணிக்கலாம்... வாழலாம்.

சனி, 3 ஆகஸ்ட், 2024

வாத்தியார் விமர்சனக் கூட்டம் - வீடியோ

சென்ற சனிக்கிழமை மாலை துபையில் 'வாத்தியார்' சிறுகதைத் தொகுப்புக்கு முதல் விமர்சனக் கூட்டம் நடைபெற்றது. எதிர்சேவை, பரிவை படைப்புக்கள் போன்ற சிறுகதைத் தொகுப்புக்களுடன் ஒப்பிடும் போது இது சற்றே வித்தியாசமான தொகுப்பு என்று சொல்லலாம்.