மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 11 ஆகஸ்ட், 2018

அசுரவதம்...ஆபாசம்

ந்தப் பதிவுமே எழுதாம இருக்கதுக்குப் பதிலா எதாவது ஒரு பதிவை... எப்போதேனும் எழுதி நாமளும் லைம் லைட்ல இருக்கோம்ன்னு காட்டிக்கலாமே என்பதால் இங்கு சிலதைப் பகிரலாம்.

அரசியல்வாதியாய் கலைஞரைப் பிடிக்காவிட்டாலும் ஒரு தமிழ் அறிஞராய் அவரைப் பிடிக்கும். அவரின் மரணம் தமிழுக்கு மிகப்பெரிய இழப்பு. மெரினாவில் துயில் கொள்ளும் அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

அதென்ன கலைஞர் என்ற வார்த்தையை கலைஞ்சர் அப்படின்னு எல்லாரும் சொல்றாங்க... ஒண்ணுமே புரியலை... சரி அதெதுக்கு நமக்கு. 

Image result for அசுரவதம்

சுரவதம்... சசிகுமார் நடிப்பில் வெளிவந்து ஓரளவுக்கு வெற்றி பெற்ற படம். தமிழில் இப்படியான படங்கள் வருவதில்லை. இந்த முயற்சிக்காகவே இயக்குநர் மற்றும் சசியைப் பாராட்டலாம். சசியை பொறுத்தவரை நண்பன்னா என்ன தெரியுமா... நட்புன்னா என்னன்னு தெரியுமா அப்படின்னுதான் படத்துக்குப் படம் பேசிக்கிட்டு இருப்பாரு. அதுவே நம்க்கு அலுப்பாயிரும். அதெல்லாம் இந்தப் படத்தில் இல்லை. 

முதல் காட்சியிலேயே வசுமித்ராவைக் கொல்லப் போறேன்னு சொல்லிடுறாரு... உயிர் போயிருமோ என்ற அவரின் பயமும்... அவரைக் கொல்லாமல் பயம் காட்டிக் கொண்டே திரியும் சசியின் கொலை வெறியுமாய்... படம் செமையாப் போகுது. இறுதிக் காட்சியில் நீ யார்டா என்னை ஏன்டா கொல்லப் பார்க்கிறே என்ற வசுவின் கேள்விக்கு, கழுத்தில் நிற்கும் அருவா உயிரை எடுக்கப் போகிறது என்ற நிலையில் சசி தனக்குள்ளே நினைப்பதாய் அந்தக் காரணி விரிகிறது.

சமீபத்திய நிகழ்வுகளின் சிறிய புள்ளிதான் அது என்றாலும் இப்படியும் செய்யலாம் என்பதை சினிமாவில் காட்டுவது நல்லதல்ல. எப்படிப் பிள்ளைகளை நம்பி கடைகளுக்கு அனுப்புவது என்றார் நண்பர் ஒருவர்.

உண்மைதான் சினிமாக்களும் மெகா தொடர்களுமே எல்லாவற்றையும் எல்லாருக்கும் கற்பித்துக் கொண்டிருக்கின்றன. அறியாத வயதில் காதலும் காமமும் குழந்தைகளுக்குள் செலுத்தப்படுவது இவைகளால்தான். வன்முறைகள் தவிர்த்து சினிமாக்கள் நல்ல விஷயங்களைச் சொல்லிக் கொடுக்கலாம்.

நல்ல விஷயத்தைச் சொல்லவில்லை என்றாலும் தவறு செய்பவன் தண்டிக்கப்பட வேண்டும். அதுவும் உடனே சாகக்கூடாது...  சாகப் போகிறோம் எனத் தெரிந்து நரக வாழ்க்கை வாழ்ந்து... அந்த வேதனையை அனுபவித்துச் சாக வேண்டும். அதுதான் அசுரவதம்... 

இது சற்றே வித்தியாசமான படம்தான். பார்க்கலாம்.

Image result for ஆபாசம் மலையாள சினிமா

சூடானி ப்ரம் நைஜீரியா பார்த்த பிறகு தூக்கமில்லாத ஒரு இரவில் எதேனும் படம் பார்க்கலாமென யோசித்தபோது மலையாளப் படமான 'ஆபாசம்' (ஆர்ஷ பாரத சம்ஸ்காரம் - Aarsha Bharatha Samskaram) பார்க்கலாமென முடிவெடுத்தேன். காரணம் பேரால் அல்ல... கதை முழுக்க பேருந்துக்குள் என்பதால்... நம்ம ஆட்கள் பேருந்தை மையமாக்கி கொடுத்த படங்கள் எல்லாம் வெற்றி என்பதால் நல்லாயிருக்கும் என்ற நப்பாசையில் பார்க்க ஆரம்பித்தேன்.

பலதரப்பட்டவர்களுடன் பயணிக்கும் பேருந்துக்குள் சமகால அரசியலையும் தைரியமாக கையிலெடுத்திருக்கிறார் இயக்குநர். பேருந்தின் கண்டக்டருக்கு எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் எப்படியும் அடைய வேண்டும். பேருந்தில் பயணிக்கும் இளைஞிக்கு பிராக்கெட் போட்டு மூக்குடைபடுகிறார். அந்தக் கோபத்தை பெண் என்பதால்  உதவுகிறேன் என நக்சலைட்டுக்கு துணை போய் உதைவாங்கித் திரும்பியதும் நடக்கும் நிகழ்வுகளில் பின்னணியில் பயன்படுத்திக் கொள்கிறார்.

நன்றாக நகரும் கதை நக்சலைட், நடுவழியில் பேருந்தை விட்டு இறங்கிச் செல்லும் கண்டக்டர், பேருந்தைத் தேடி வரும் லஞ்சம் வாங்கும் தமிழக போலீஸ், ஆபாச படம் பார்த்துக் கொண்டே பேருந்தை ஓட்டும் டிரைவர் போலீசில் மாட்டிக் கொள்ளக்கூடாதென பயணிகளுடன் பேருந்தை அம்போன்னு விட்டுட்டு ஓடுதல், ஒரு பெண் நக்சலைட்டுகள் என்று சொல்லப்படுபவர்களை கண்டக்டர் இந்தப் பக்கமாக கூட்டிச் சென்றார் என்று சொல்லியும் பேருந்துக்குள் இருக்கும் மற்றொரு இளைஞியையும் திருநங்கையையும் குற்றவாளி எனத் தூக்கிச் செல்லும் போலீஸ் என தேவையில்லாத குப்பையாய் மாறிவிடுகிறது.

நல்ல தைரியமாய் நகரும் கதையைச் சரியாச் சொல்லாமல் குழப்பி கிளைமேக்ஸ் சொதப்பலில் இரவு தூக்கம் போனதே மிச்சம்.

விருப்பம் இருப்பின் பார்க்கலாம்.
-'பரிவை' சே.குமார்.

4 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஆசிர்வாதம் - பார்க்க நினைத்த பாடம்... பார்ப்போம்...

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

நன்றி நண்பரே

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்லதொரு விமர்சனம். படங்கள் பார்க்கும் அளவிற்குப் பொறுமை இருப்பதில்லை குமார். உங்கள் பொறுமை வியப்பளிக்கிறது.

vimalanperali சொன்னது…

நல்ல விமர்சனங்கள் அண்ணா,பொதுவாகவே சினிமா விமர்சனம் செய்வது ஒரு பெரிய கலை என்பார்கள்,