மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 6 டிசம்பர், 2009

கல்லூரிக்காலம் - II

சில பல காரணங்களால் கல்லூரிக்காலம் இரண்டு எழுத நீண்ட நாட்களாகி விட்டது.

முதலாம் ஆண்டு கல்லூரி வாழ்க்கை மிகவும் நன்றாக சென்று கொண்டிருந்தது. கல்லூரி வாழ்க்கைக்குள் செல்லும் முன்...

எனது துறை பேராசிரிய பெருமக்களைப் பற்றி சில வரிகள் (குரு மரியாதை...) பேராசிரியர் நா.சீனிவாசன் (துறைத்தலைவர்) - நாங்கள் கல்லூரியில் சேரும் முன்னர் முதல்வராக இருந்து நாங்கள் சேர்ந்த பொழுது சில காரணங்களால் நீக்கப்பட்டு (எங்க ராசி நல்ல ராசி...) நாங்கள் கல்லூரியில் இருந்து வெளியேறும் போது எங்கள் மாற்றுச் சான்றிதழில் முதல்வராக கையெழுத்துப் போட்டவர் (நாங்க ரொம்ப நல்லவங்க).

பேராசிரியர் கே.வி. சுப்ரமணியன் (செல்லமாக கேவிஎஸ்) - நடந்தே தான் கல்லூரிக்கு வருவார். எல்லோருக்கும் உதவும் நல்லகுணம் கொண்டவர். யாரையும் கடிந்து பேச மாட்டார். ஆரம்பம் முதலே என் மீது அதிக பாசம் கொண்டவர்.

பேராசிரியர் ஏ.வெங்கடாசலம் - நல்ல மனிதர். ஆமாங்க நாம இந்தா வர்றேன் சார் என்று சொல்லிச் சென்றால் (திரும்ப வரவில்லை என்றாலும்) வருகை பதிவில் கைவைக்கவே மாட்டார்.

பேராசிரியர் அமலசேவியர் - மிகவும் நல்லவர். எட்டாம் நம்பர் மீது அதிக பற்றுக் கொண்டவர். (அவரோட ஸ்கூட்டர் நம்பர் 0440ன்னா பார்த்துக்கங்க)

பேராசிரியர் சேவியர் - எங்கள் துறையின் கடைக்குட்டி (மேல சொன்ன பேராசிரியர்களிடம் படித்து அதே துறையில் வேலை). பசங்களுக்கு உதவ தயங்காதவர். தம்பி... என்று பாசத்துடன் அழைப்பவர்.

இவர்கள் போக இன்னும் தமிழ் மற்றும் ஆங்கிலம் எடுத்த பேராசிரியர்கள் பற்றி பின்னர் பார்க்கலாம்.

முதல் பருவத்தேர்வுகள் முடிந்து எல்லா பாடத்துலயும் தேர்ச்சி. (ஆங்கிலத்துல எழுதி அரியர் இல்லாம வெற்றி... சத்தியமா நம்ப முடியலைங்க...) எங்கள் நட்பு வட்டத்தில் ஒரு சிலர் தவிர மற்றவர்களுக்கு அரியர் இல்லை (நல்ல நட்பு).

அடுத்த பருவம் தொடங்கிய போது எங்கள் வகுப்பிற்குள் கோஷ்டி முளைத்தது. ஆறுமுகம் தலைமையில் சிவபாலமூர்த்தி (நம்ம ஆளுதாங்க) உள்ளிட்ட 5 நண்பர்கள் ஒரு கோஷ்டியும் (அடிதடிக்கு முன் நிற்கும் கோஷ்டி) இளங்கோ தலைமையில் ஒரு கோஷ்டியும் (அடியும் வாங்கும் கோஷ்டி) உருவானது. எங்க கோஷ்டி (அதிகம் ஆளு இருந்த கோஷ்டி) தனி. இரண்டு பக்கமும் பேசுவோம் (மத்தளம் மாதிரி).

எங்களை பேராசிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும். சண்டை வரும் போது எங்களை வீட்டுக்குப் போகச்சொன்ன நாட்களும் உண்டு. (உண்மையை சொன்னா நாங்கள்ளாம் கைப்புள்ள மாதிரி...)

எங்க கூடப் படித்த தோழியருக்கும் எங்களை மட்டுமே பிடிக்கும். (உண்மையான நட்புங்க). நல்லா போச்சுங்க முதல் வருடம்.

முதல் வருடத்தில் எனக்கு மற்ற துறைகளிலும் முத்தான நட்பு கிடைத்தது. எனக்கும் தமிழ்த்துறை பேராசிரியர் பழனி ஐயாவுக்கும் இடையில் நண்பன் முருகன் மூலம் நட்பு ஏற்பட்டது. (இன்றுவரை அப்பா ஸ்தானத்தில் உரிமையுடன் தொடரும் நட்பு) ஐயா, முருகன், மற்ற நண்பர்கள், முதல் கதை, மனசு இதழ் பற்றி விரிவாக அடுத்த கட்டுரையில்... கல்லூரிக்காலம் இன்னும் பசுமையுடன் தொடரும்.

3 எண்ணங்கள்:

செ.சரவணக்குமார் சொன்னது…

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மறக்க முடியாத பசுமையான கடந்த கால நினைவுகள் என்றால் பள்ளி மற்றும் கல்லூரி காலத்தில் ஏற்படும் தூய்மையான நட்பே. தொடருங்கள் நண்பா.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வருகைக்கு நன்றி..!

DhInEsH v சொன்னது…

Rompove Nantraka irukkorathu