மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 11 ஏப்ரல், 2019

பூபகீதனின் எண்ணமும் ரெங்கநாயகியின் வாழ்க்கையும்

னது 50 கதைகளின் பிடிஎப் தொகுப்பை வாசித்துக் கொண்டிருக்கும் தம்பியும் கவிஞருமான கரூர் பூபகீதன் முகநூலில் இட்ட பகிர்வு...

க்கத்து வீட்டுக்காரனையே பார்க்காமல் வாழும் இந்த ஆண்ட்ராய்டு யுகத்தில்....
நம்முன் எதிர்ப்படும் ஒவ்வொருவரின் முகம்கணித்து நாடி பிடித்து நுண் உணர்வுகளை வரிகளாக்குவது எல்லோருக்கும் சாத்தியப்படாவிட்டாலும்
அன்பு அண்ணண் நித்யா குமார் அவர்களுக்கு கைவந்த கலையென அவரின் சிறுகதைகளை படித்தால் தெரிந்துவிடும்...
எந்த கதையிலும் வார்த்தைகளுக்காக அவர் மெனக்கெடுவதில்லை... மாறாக வார்த்தைகளை ஊஞ்சலாக மாற்றுகிறார்... படிப்பவரை தாலாட்ட வைக்கிறார்...
அவர் கதைகளின் கதாபாத்திரங்கள் மென்மையாக பேசுகிறார்கள், எந்த இடத்திலும் அதிர்ந்துகூட பேசுவதில்லை... அவர்கள் வன்முறை பக்கம் போவதேயில்லை...
சாமானியனின் அல்லது குரலற்றவனின் அல்லது வக்கற்றவனின் வார்த்தைகளை நீங்கள் செவிமடுத்து கேட்டிருந்தால் புரியும்....
அவர்களின் இயலாமைகளை அவர்களின் மனப் போராட்டங்களை அப்படியே நம் கண் முன் நிறுத்தி ....
உயிருக்கும் உணர்வுக்குமுள்ள மதிப்பை கோடிட்டு காட்டுகிறார்....
எளிய மனிதர்களின் எளிய வாழ்க்கையை இன்னும் இன்னும் அதிகமாக எழுத வேண்டும்.
இதுவரை எழுதியுள்ளதை புத்தகமாக்கி... எளியவர்கள் கரங்களில் வலம்வரசெய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டு....
சில கதைகள் எப்படா முடியும் என்றிருக்கும்...
சில கதைகள் அடடா அதற்குள் முடிந்துவிட்டதே என்றிருக்கும்...
அண்ணணின் கதைகள் இரண்டாம் வகையை சார்ந்தது....
ஆனால் உண்மையில் முடிந்த இடத்திலிருந்துதான் அண்ணணின் கதைகள் தொடங்குகிறது நம் மனதுக்குள்...
ஒருமுறை படித்தால் தெரியும் உங்களுக்கு...
"மனசு" சும்மாயிருப்பதேயில்லை....

நன்றி பூபகீதன்.


**********
பிரதிலிபி 'இறைவி' சிறுகதைப் போட்டியில் எனது 'ரெங்கநாயகி'யும் களத்தில் நிற்கிறாள். இங்கு நீங்கள் வாசித்த கதையே சின்ன சின்ன மாற்றத்துடன்... 

தெருப்பேச்சு கொஞ்சம் கொஞ்சமாக அவள் காதுக்கு வரவும் முதலில் ஆடிப் பொயிட்டா. 'ஒரு பொம்பள தனியா போராடிச் செயிச்சா ஏன் ஏத்துக்க மாட்டேங்கிறாங்க... நல்ல நண்பனா ஒரு ஆம்பள ஒதவக் கூடாதா..?. அது ஏன் ஒரு பொம்பளக்கி ஆம்பளயோ ஆம்பளக்கி பொம்பளயோ ஒதவியா இருந்தா தப்பாப் பாக்கச் சொல்லுது... இந்தச் சமுதாயத்துல பொரயோடிப்போன நெனப்புல இதுவும் ஒண்ணுதானே... இதுல நாமளும் மாட்டி ஒரு நல்லவனுக்கும் கெட்ட பேர வாங்கி கொடுத்துட்டோமே' என்று நினைத்த போது அவளுக்கு வருத்தமாகவும் வேதனையாகவும் இருந்தது.

'என்ன ரெங்கநாயகி எதோ யோசனயில இருக்கே போல...' என்றபடி எதிரில் வந்து அமர்ந்தான் நடராசு.

'வா ராசு... மனசு சரியில்ல... அதான்...' கலங்கிய கண் தெரியக் கூடாது என்பதற்காக குனிந்து கொண்டாள்.


'என்ன நம்மள எணச்சுப் பேசுறத கேட்டியாக்கும்' என்று அவன் கேட்டதும் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

தொடர்ந்து வாசிக்க....


-'பரிவை' சே.குமார்.

4 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மிகவும் மகிழ்ச்சி... வாழ்த்துகள்...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் குமார்.

விரைவில் உங்கள் புத்தகம் வெளிவரட்டும்.

துரை செல்வராஜூ சொன்னது…

அன்பின் நல்வாழ்த்துகள்...

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

மகிழ்ச்சி குமார். வாழ்த்துகள்! போட்டியில் வெற்றி பெறவும் வாழ்த்துகள்.

துளசிதரன், கீதா