மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 12 செப்டம்பர், 2017

மனசின் பக்கம் : மகிழ்வான தருணங்கள்

'என்னடா வாழ்க்கை இது?' என்ற வேதனை வரிகளுக்கு இடையே நகரும் வாழ்வில் எப்போதேனும் பாலையில் பெய்யும் மழை போல் சந்தோஷங்களும் நிகழ்வதுண்டு. அப்போதெல்லாம் 'மகிழ்ச்சி' என்னும் மகிழம்பூ மனசுக்குள் பூத்துச் சிரிக்கத்தானே செய்யும்... அப்படிப் பூத்த தருணங்கள் சிலவற்றின் பின்னே...

ந்த மாத கொலுசு மின்னிதழில் எனது 'வாழ்வின் அர்த்தம்' என்ற சிறுகதை வெளியாகியிருக்கிறது. கதையைத் தேர்ந்தெடுத்து வெளியிட்ட கொலுசு ஆசிரியர் குழுவுக்கு நன்றி.

(போட்டோவை கிளிக் செய்தும் வாசிக்கலாம்)

டந்த மூன்றாண்டுகளாக தொடர்ந்து (இடையில் ஒரு சில வாரங்கள் மட்டும் விதிவிலக்கு) பாக்யா மக்கள் மனசுப் பகுதியில் கருத்துப் பதியும் வாய்ப்புக் கிடைத்து வருகிறது. அதன் தொகுப்பாளர் திரு.எஸ்.எஸ்.பூங்கதிர் சாருக்கு நன்றி.



ங்கு வேலை செய்யும் அண்ணன் ஒருவர் Red Rose 2.0 'Dileep is back' என்ற குறும்படத்தை இயக்கி Youtube-ல் ஏற்றியிருப்பதை முன்னர் பகிர்ந்திருந்தேன். அதில் சில எடிட்டிங் குறைபாடுகள் நண்பர்களின் கருத்தாக முன் வைக்கப்பட, பட்டி பார்த்து மீண்டும் வெளியிடுகிறோம் என Youtube-ல் இருந்து எடுத்து விட்டார். அவரின் இரண்டாவது குறும்படம் கடத்தல் சம்பந்தமானது. அதன் ஒன்லைன் சொல்லி என்னிடம் தலைப்புக் கேட்க, நான் சொன்ன தலைப்பையே படத்தின் தலைப்பாக்கியிருக்கிறார் என்று சென்ற பதிவில் சொல்லியிருந்தேன் அல்லவா? சென்ற வெள்ளி குறும்படம் வெளியானது. படத்தின் ஆரம்பத்தில் போடப்படும் நன்றியில்... முதலாவதாய் என் பெயரும்... படம் எடுக்கிறோமோ இல்லையோ நம்ம பெயரும் சின்னத்திரையில் வந்துருச்சில்ல... வெளியில் சென்று படம் எடுப்பது என்பது இங்கு பிரச்சினையே என்பதால் அறைக்குள் நகரும் கதையான இந்தப் படத்திலும் சில குறைகள் இருக்கு... இதை நிவர்த்தி செய்து அவரது மூன்றாவது படைப்பான 'மீனவன்' முழுமையடையும் என்ற நம்பிக்கை இருக்கிறது.


படம் பார்க்க  'பண(ய)ம்'

பிரதிலிபி போட்டியில் எனது சிறுகதையான 'என்னுயிர் நீதானே..' கலந்து கொண்டிருப்பதை அறிவீர்கள்... பலர் வாசித்தும் இருப்பீர்கள்... ஆயிரக்களில் வாசிக்கப்பட்ட கதைகளின் நடுவே நூறைத் தாண்டிய வாசிப்பு பார்வை இதுவரை கிடைத்திருக்கிறது. கருத்து இடவோ மதிப்பெண் அளிக்கவோ முடியவில்லை என்று சில நண்பர்கள் சொன்னார்கள். நானும் சில கதைகளுக்கு முயற்சித்து முடியாமல் பிரதிலிபி குழுவுக்கு மின்னஞ்சல் செய்தேன். அவர்களும் சரி செய்து விட்டதாக பதில் அனுப்பியிருந்தார்கள். இருப்பினும் இன்னும் 'சிறிய தொழில்நுட்பக் கோளாறு' என்றுதான் சொல்கிறது. எனக்கென இருக்கும் பாணியில் இருந்து மாறுபட்டு எழுதிய கதை, சிலரிடம் கதை குறித்தான கருத்துக் கேட்டேன். சிலர் விவாதித்தார்கள்... சிலரிடம் உரிமையுடன் திட்டும் வாங்கினேன்....  அதில் குறிப்பாக மீரா செல்வக்குமார் அண்ணனுடன் நீண்ட நேரம் முகநூல் அரட்டையில் பேச முடிந்தது. அதேபோல் தம்பி கரூர் பூபகீதன் ரொம்ப நேரம் அரட்டையில் விவாதித்தார். ஏதோ ஒரு நிகழ்வைத் தன் கதைக்குள் புகுத்தி எழுதும் அண்ணன் கனவுப்பிரியன் அவர்கள், உங்களுக்கு எழுத நல்ல நல்ல களமெல்லாம் இருக்கு அவற்றில் இருந்து எடுத்து எழுதுங்க என்றார். நண்பன் தமிழ்க்காதலன் உடன் நீண்ட நேர தொலைபேசி விவாதம்... அவனுக்கு என் பாணியில் இருந்து மாறுவதில் விருப்பம் இல்லை. காயத்ரி அக்காவோ கனவுப் பிரியனின் கருத்தைப் பின்பற்றச் சொன்னார்.  நண்பன் மோ.கணேசன் நல்லாயிருக்கு நண்பா என்றான். வெற்றி தோல்வி முக்கியமல்ல... நம் கதைக்களம் மாற்றுப் பாதையில் செல்லும்போது அது சரியான பாதையா இல்லையா என்பதைக் குறித்து அறிதல் சிறப்புத்தானே... முடிந்தால் வாசிங்க. அப்படியே என்னிடம் விமர்சனக் கருத்தையும் சொல்லுங்க...

(போட்டோவை கிளிக் செய்தும் வாசிக்கலாம்)
கதைக்கான இணைப்பு : என்னுயிர் நீதானே... 

'எங்கள் பிளாக்' ஸ்ரீராம் அண்ணா, கேட்டு வாங்கிப் போடும் கதையில் 'சீதை ராமனை மன்னித்தாள்' என்ற வரிகளை முடிவாகக் கொண்ட கதைகளைப் பகிர்ந்து வருவதை எல்லாரும் அறிவோம். என்னிடம் கதை வாங்கி, மே மாதம் நான் ஊரில் இருக்கும் போது பகிர்ந்திருந்தார். ஊரில் இருக்கும் போது இணையம் வருவதென்பது இயலாத ஒன்று... கதைக்கு வந்த கருத்துக்களைக் கூட ஒழுங்காக வாசிக்கவில்லை. கருத்துச் சொன்னவர்களுக்கு பதில் கூட சொல்லவில்லை. பலர் அழகாக அடித்து ஆடும் கதைக் களத்தில் நான் defence ஆடியிருப்பதாகவே தோன்றுகிறது. என் கதை பிடித்ததா... பிடிக்கலையா... நான் எடுத்த களம் சரியா... தவறா... என்றெல்லாம் யாருடனும் விவாதிக்கவில்லை. முடிந்தால் அங்கு கருத்துச் சொன்னவர்களுக்கு இங்கு ஒரு பதிவில் பதில் சொல்லலாம். கே.வா.போ.க-வில் என் கதை வாசிக்காதவர்கள் வாசிக்க....

சில நாட்களுக்கு முன்னர் எங்கம்மா வீட்டிற்கு வந்திருந்தார்கள். போன் பேசும்போது பாப்பாவிடம் 'எங்கடா எங்கம்மா?' என்று கேட்டதும் 'இந்தப் பக்கம் எங்கம்மா... அந்தப் பக்கம் உங்கம்மா' என்று ரைமிங்காகச் சொன்னது. உடனே விஷால் ' இந்தப் பக்கம் எங்கம்மா... அந்தப் பக்கம் உங்கம்மா.. மேலயிருக்கு ஜெயலலிதாம்மா... ஜெயில்ல இருக்கு சின்னம்மா... நம்மூருல இருக்கு பெரியம்மா...' அப்படின்னு டி.ஆர் போல வசனமாகப் பேச, எங்கம்மா முதல் அனைவரும் சிரித்த சப்தம் இங்கு கேட்க, நானும் ஜோதியில் ஐக்கியமானேன். நக்கல், நையாண்டி என சின்னச் சின்ன ஜோக்குகளில் தூள் கிளப்புவதில் தலைவர் ஜொலிக்கிறார். நேற்றுப் பேசும்போது பிக்பாஸ் பார்த்துக் கொண்டிருந்தான். 'என்னடா... இன்னுமாடா இதைப் பாக்குறே... பிக்பாஸ் என்ன சொல்றார்..?' அப்படின்னு கேட்டேன். உடனே 'ம்... எல்லாரும் பொயிட்டாங்களாம்... ஆள் இல்லையாம்... கவிஞர் குமாரை உடனே வரச்சொல்லுங்கன்னு சொன்னார்' என்றபடி எழுந்தவனிடம் 'என்னைக் கவிஞன்னு ஒத்துக்கிட்ட முத ஆள் நீதாண்டா' என்றதும் 'கருமத்துல... ஏம்மா நா எப்ப அவரைக் கவிஞன்'னு சொன்னேன்னு திருப்பி அடிச்சிட்டான்.

-'பரிவை' சே.குமார்.

15 எண்ணங்கள்:

KILLERGEE Devakottai சொன்னது…

மகிழ்ச்சிகள் தொடர வாழ்த்துகள் நண்பரே...

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

வாழ்த்துகள்! மகிழ்ச்சிகளும் தொடரட்டும் குமார்!

மிகவும் ரசித்தது விஷாலின் கமென்ட்களை!!

ஸ்ரீராம். சொன்னது…

மகிழ்ச்சிகள் தொடரட்டும். எங்கள் தளத்தில் வந்த கே வா போ சிறந்த கதைகளில் உங்களுடைய கதையும் ஒன்று.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

வாழ்த்துக்கள் நண்பரே

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

தொடர்ந்து சாதிக்க வாழ்த்துகள்.

துரை செல்வராஜூ சொன்னது…

நல்வாழ்த்துகள்..

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
விஷாலின் சேட்டைகள் இன்னும் நிறைய இருக்கு அண்ணா...
அதிகம் பகிர்வதில்லை...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Unknown சொன்னது…

மகிழ்வான தருணங்கள் இன்னும் அதிகரிக்க வாழ்த்துக்கள் ஜி :)

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
என் கதையும் சிறந்த கதை என்பதில் மகிழ்ச்சி அண்ணா.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

G.M Balasubramaniam சொன்னது…

மகிழ்ச்சி என்பது ஒரு உணர்வு அது அப்பப்போ வரும்போது அதிகம் அனுபவிக்கிறோ ம் தொடரட்டும் மகிழ்ச்சிகள்

ராமலக்ஷ்மி சொன்னது…

மகிழ்ச்சிகள் தொடர எனது வாழ்த்துகளும்.