மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

50வது பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
50வது பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 16 ஆகஸ்ட், 2010

வலைச்சர ஆசிரியனாய்...




வணக்கம் நண்பர்களே...

இன்று முதல் (16/08/2010) வரும் ஞாயிறு (22/08/2010) வரை வலைச்சரத்தில் ஆசிரியர் பணி ஆற்றும்படி திரு.சீனா ஐயாவிடம் இருந்து அழைப்பு. வலைப்பூவிற்குள் இறங்கி ஒரு வயது குழந்தையான எனக்கு இந்த அழைப்பு சொல்லவொன்னா சந்தோஷத்தைக் கொடுத்தது. அழைப்புக்கு தலைவணங்கி நாளை முதல் வலைச்சரத்தில் வலம் வர இருக்கிறேன். என் நட்புக்கள் அனைவரும் வலைச்சரத்தை வாசிக்க வாருங்கள்.

இந்த வாய்ப்பை வழங்கிய சீனா ஐயா என்னிடம் மின்னஞ்சலில் மட்டுமே தொடர்பு கொண்டிருந்தாலும் என் குடும்பத்தில் ஒருவராக ஆகிவிட்டார். ஆம் இன்று காரைக்குடி சென்ற ஐயாவும் அம்மாவும் எனது இல்லத்தை சிரமப்பட்டு தேடி கண்டுபிடித்து என் மனைவி, மகள், மகன் ஆகியோரை பார்த்து வந்துள்ளார்கள். என் இல்லத்தாருக்கும் மிகுந்த சந்தோஷம். மதுரை வந்ததும் ஐயா எனக்கு உடனே மின்னஞ்சல் அனுப்பி சந்தோஷப்பட்டார். அதற்கும் ஐயாவுக்கு நன்றிகள்.

இது மனசில் எனக்கு 50வது பதிவு. எனது 50வது பதிவை வலைச்சர ஆசிரியனாய் இருக்கப் போகிறேன் என்ற பகிர்வாக இடுவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

இதுவரை கிறுக்கல்களில் 110 நெடுங்கவிதைகளில் 65 சிறுகதைகளில் 20 மற்றும் மனசில் 50 என மொத்தமாக பார்த்தால் எனக்கு இது 255வது பதிவு. இதற்கெல்லாம் காரணம் உங்கள் அன்பும் நட்பும்தான் என்று கூறிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன்.

நன்றி நண்பர்களே... உங்கள் அன்பும் ஆதரவும் என்றும் தொடரட்டும்.

வலை நட்பை வாழ் நாளெல்லாம் கொண்டு செல்வோம்.

வலைச்சரத்துக்கு செல்ல இங்கே கிளிக்கவும்.