மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 12 டிசம்பர், 2015

மனசின் பக்கம் : சகதியும் சந்தனமும்

க்களின் வாழ்க்கையை அடித்துத் துவம்சம் செய்த மழை வெள்ளம் அரசியல்வாதிகளின் முகத்திரையை கிழித்து மதம் கடந்த மனிதத்தை காண்பித்துச் சென்றிருக்கிறது. ஆயிரம் வருத்தங்கள் இருந்தாலும் அதற்காகவாவது மழைக்கு நன்றி சொல்ல வேண்டும்.

ழை வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணிப் பெண்ணை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்து உதவிய யூனூஸின் பெயரையே தங்கள் மகளுக்கு வைத்து தங்கள் நன்றியைக் காட்டினர் மோகன் தம்பதிகள் என்றால், தன் மீது அன்பு வைத்து தன் பெயரையே குழந்தைக்கு சூட்டியவர்களின் அன்பில் நனைந்து அந்தக் குழந்தையின் படிப்புச் செலவு முழுவதையும் தானே செய்கிறேன் என்று சொல்லியிருக்கிறார் அந்த நண்பர். மேலும் இவர்களுக்கு மட்டுமில்லாது இன்னும் வாழ்வை இழந்து நிக்கும் எல்லாரும் பயனடையும்படியாக காரியங்களைச் செய்ய முனைந்து வருவதாகவும் அவர் சொல்லியிருக்கிறார். நண்பர் யூனூஸ் அவர்களை நாமும் வாழ்த்துவோமே.


முகநூலில் கூட அதிகம் பகிரப்படாமல் சூப்பர் ஸ்டாருக்கு ஒரு பிறந்தநாள் கழிந்திருக்கிறது என்றால் அது இந்த முறைதான் என்று நினைக்கிறேன். அவர் வேண்டாம்... வேண்டாம் என்று சொன்னாலும் பாலாபிஷேகங்களும் ஊர்வலங்களும் தமிழகத்தையே அதிர வைக்கும். அவருக்கு அரியாசனம் கொடுத்தும் அதை துச்சமென மதித்தார் என அண்ணன் ஒருவர் எழுதியிருந்தார். எப்போது அரியாசனம் கொடுத்தார்கள் அவருக்கு என்றுதான் தெரியவில்லை. படத்தில் வசனம் பேசினாலும் விஜயகாந்த் போல் எழுச்சி கொண்டு கட்சி ஆரம்பிக்க உள்ளுக்குள் அவருக்கு பயமே அதிகமிருந்தது என்பதே உண்மை. சரி அரசியல் எதுக்கு நமக்கு. அவரே ஒதுங்கித்தான் இருக்கார்... அப்படியே இருக்கட்டும் அதுவே தமிழகத்துக்கு நல்லது... இல்லையென்றால் சினிமாவில் நுழையும் எல்லாருக்கும் முதல்வர் கனவும் சேர்ந்து வந்துவிடும். தமிழனின் தலைவிதி சினிமாக்காரர்கள்தான் ஆளணுமின்னு வழிவழியா தொடர ஆரம்பிச்சிடும். இந்த முறை மக்கள் அவர் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வேண்டாம் என்று சொன்னதற்காக எதுவும் செய்யவில்லை என்று சொன்னால் அது நகைப்புக்குரியதாகும். மக்கள் கொண்டாட விரும்பவில்லை என்பதே உண்மை. மக்களின் இந்த நிலைப்பாடு ரஜினிக்கு அல்ல மற்ற நடிகர்களுக்கும் சற்று வருத்தமாகத்தான் இருக்கும். இதை ரஜினிக்கு மட்டுமல்ல எந்த நடிகருக்கும் செய்யாமல் நாம் நம் வேலையைப் பார்த்தோம் என்றால் அவர்களும் சாதாரண மனிதர்களாக நம்மோடு உலாவருவார்கள்.  எனிவே ஹாப்பி பர்த்டே ரஜினி சார்.

வீணாப்போன சிம்புவும் அனிருத்தும் 'பீப்' பாடல் போட்டிருக்கானுங்களாம். ரெண்டு பேருமே அக்கா, தங்கச்சியோட பிறக்கலை போல. கதாநாயகியை தொடாமலே நடித்த, காதலித்த பெண்ணையே கரம்பிடித்து வெளியுலகிற்கு டண்டணக்கா ராஜேந்தராக இருந்தாலும் பன்முகத் திறமையில் ஜொலித்த மனிதரின் மகன் மாற்றி மாற்றிக் காதலித்து காதல் என்ற அழகிய வார்த்தைக்கு மோசமான இலக்கணம் எழுதியவன். இன்னொருவன் ரஜினியின் சொந்தக்காரன் என்று சொல்லிக் கொண்டு ஆண்ட்ரியாவின் உதடை கமல் உறிஞ்சுமுன்னே பலகோணத்தில் உறிஞ்சியவன் ரெண்டு சேர்ந்து பாட்டு போட்டிருக்காம் பாட்டு... கேவலப்பட்டவனுங்க... அவனவன் மழை வெள்ளத்துல வாழ்வை இழந்து கிடக்கிற மக்களுக்கு என்ன செய்யலாம்ன்னு யோசிச்சிக்கிட்டு திரியிறானுங்க... மக்கள் பிரச்சினையை இனி நடிகர் சங்கம் பேசாதுன்னு சொன்ன விஷால் கூட மக்களுக்காக இறங்கி வேலை செய்யிறான். இவன் என்னடான்னா... இலக்கிய, இலக்கண ரசனையோடு பாட்டெழுதுறான். இதுல உனக்குப் பிடிக்காட்டி கேக்காதேன்னு வேற ஆவேசமாச் சொல்றாராம் இந்த கேடுகெட்ட சிம்பு. இந்தப் பாடலை யூடிப்பில் தடை செய்ய வேண்டும் என ரிப்போர்ட் நிறைய பேர் பண்ணியிருக்கிறார்கள். நானும் அதில் ஒருவன்.  'பீப்' பாடலின் கழுத்து நெறிக்கப்படுதா என்று பார்ப்போம். ஆனந்த விகடனில் மாணவப் பத்திரிக்கையாளரான ஒரு பெண் அருமையாக கிழிகிழி என்று கிழித்திருக்கிறார்.


றுமீன்... பாபி சிம்ஹா ரொம்ப நல்லா நடிச்சிருந்தார். முன் ஜென்மத்துக் கதையோடு இந்த ஜென்மத்துக் கதையை இணைத்து ஒரு புத்தகமும் அதில் இருக்கும் கடிகாரமும் என மிக அழகாக சொல்லியிருக்கிறார்கள். 'மெட்ராஸ்'கலையரசன் அருமையாக நடித்திருக்கிறார். முன் பின் என இரண்டிலும் கலக்கல். அழகர்சாமி கூட நல்லாவே நடித்திருக்கிறார். விறுவிறுப்பான கதை... பரபரப்பாக கதை பயணிப்பதால் நாயகியை பாதியிலேயே பஸ்ஸில் ஏற்றி அனுப்பி விடுகிறார்கள். இறுதி காட்சியில் வரும் சண்டைதான் ஏற்புடையதாக இல்லை. நாயகனும் வில்லனும் அப்போது கூட மோதாமல் நாயகன் மாஞ்சாக் கயிற்றில் பட்டம் விட்டு மக்கள் கழுத்தை அறுத்துக் கொள்ளும் சென்னை வாழ் மாஞ்சாக்கயிறு பட்டவாசிகள் போல அண்டர்கிரவுண்ட் பாதைக்குள் வைத்து அத்தனை பேரையும் அறுத்து எடுக்கிறார். அது மட்டுமே நல்லாயில்லை... மற்றபடி உறுமீன் நன்றாகவே இருக்கிறது.

ஸ்டாலின் இன்னும் நமக்கு நாமே படத்தில்தான் நடித்துக் கொண்டிருக்கிறார். காலில் முழங்கால் வரை ஷூ போட்டு கெரண்டைக் கால் தண்ணீரில் நடந்து போட்டோ எடுத்து விளம்பரம் செய்து கொள்கிறார். அதற்கு விஜயகாந்த் சேற்றிலும் சகதியிலும் செருப்பில்லாமல் தான் நடக்கிறார். மக்களிடம் அன்போடு பேசுகிறார். என்ன கோபம் வந்த கைதான் படக்குன்னு எந்திரிக்குது... அதையும் கழுத்துப்பக்கமாக கொண்டு போயி சமாளிக்க கத்துக்கிட்டு இருக்கார். சீமான் இப்போத்தான் வெள்ளம் வந்தது போல மீண்டும் கத்த ஆரம்பித்திருக்கிறார். பார்த்தீபன் சப்தமில்லாமல் உதவிகள் செய்து வருகிறார். வெள்ளத்தில் மக்கள் தத்தளித்துக் கொண்டிருந்த போது ஸ்டாலினும் அவர் மனைவியும் கேரளாவில் தங்கி ஓய்வெடுத்திருக்கிறார்கள். அதை கேரளப் பத்திரிக்கைகள் செய்தியாக வெளியிட்டு கேலி செய்திருக்கின்றன. அலுவலக நண்பர் காலையில் சொல்லிச் சிரித்தார். மாலையில் பேப்பர் செய்தியும் பார்வைக்குக் கிடைத்தது. இவர்தான் மக்களுக்கான முதல்வராம். இவர் இது செய்தார்... அதைச் செய்தார்... நாங்கள்தான் மக்கள் நலம் விரும்பிகள் என்று முகநூலில் பலர் கத்திக் கொண்டிருப்பதுதான் வேடிக்கை.


ப்புக்கருவாடு.... கஞ்சிக்கு சுட்ட கருவாடு இருந்தால் இன்னும் இரண்டு தட்டு சாப்பிடத் தோணுமே அப்படியிருக்கு... சான்ஸே இல்லை... ஆரம்பத்தில் இருந்து கடைசி வரைக்கும் படம் பார்ப்பவர்கள் சிரித்து ரசிக்கலாம். ராதாமோகனின் கதை வசனத்தில் படம் ரொம்ப நல்லாயிருக்கு. இது உப்புக் கருவாட்டிலும் நெய்மீன் கருவாடு சும்மா கம.. கமன்னு... சரவணன் மீனாட்சி நாயகி இதில் நாயகியாக அறிமுகமாகியிருக்கிறார். அவருக்கு வாய்ப்பு கம்மி... அவரை சினிமா நாயகியாக வருபவருக்கே அதிக வாய்ப்பு. டைமிங்க் காமெடியில் கலக்கியிருக்கிறார்கள். ரசித்துப் பார்க்கலாம்.

டலூரில் களப்பணியில் இருக்கும் நண்பன் தமிழ்க்காதலனின் முகநூல் பக்கத்தில் பகிர்ந்த செய்தி இது.

"கடலூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மக்கள் பணிகளுக்கு இடையே நாம் செய்த மற்றொரு பணியும் இருக்கிறது. ஆங்காங்கே கைகட்டி, ஏரிக்கரை, குளக்கரை, கோயில் வாசல், ஆற்றுப் பாலம், என கிடைத்த இடத்தில் அமர்ந்து கதைப்பேசி கொண்டிருந்த உள்ளூர் இளைஞர்களை எல்லாம் ஒன்று திரட்டி, அவர்களின் பிரச்சனைகளையும், தேவைகளையும், அதற்கான தேடல்களையும், ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளையும் சொல்லி, அவர்கள் சும்மா இருக்க, வெளியூர்களில் இருந்து வரும் மற்றவர்கள் களப்பணியில் ஈடுபடுவதைப் பார்க்க உங்களுக்கு உறுத்தலாக இல்லையா என்று வினாத்தொடுத்து, நாம் சென்ற அனைத்துப் பகுதிகளிலும் நமது இளைஞர்களை களப்பணியில் இறக்கி அவர்களுக்கும் சமூக அக்கறையை ஊட்டி இருக்கிறோம். இந்த பணி ஓரளவு எமக்கு நிறைவைத் தந்திருக்கிறது."

தமிழ்க்குடில் தன் கடமையைச் செய்கிறது. வாழ்த்துக்கள் நண்பா.

தொடர்ந்து பாக்யாவில் மக்கள் மனசு பகுதியில் எனது கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருப்பதில் சந்தோஷம். நண்பர் தளிர் சுரேஷ் அவர்களின் கருத்துக்களும் தொடர்ந்து வருகின்றன. வாழ்த்துக்கள் நண்பரே.


கேரளா எப்.எம். சேனலில் சென்னை மக்கள் சூப்பர் கிங்க்ஸ் என்று புகழ்ந்திருப்பதாக முகநூலில் ஒரு வீடியோ பார்க்க நேர்ந்தது. வெள்ளத்தில் தவித்த சென்னை மக்களுக்கு உதவ தமிழகத்தின் கடைக்கோடியில் இருந்தும் தமிழன் ஓடிவந்தான். இங்கே சென்னை மக்கள் மட்டும் சூப்பர் கிங்க்ஸ் அல்ல... தமிழக மக்களே சூப்பர் கிங்க்ஸ்தான்.... உதவியின்னா முதல்ல நிக்கிறவன் தமிழன்தான். அது என்னவோ தெரியலை கடலூர்ல மழை, இப்போ தென் தமிழகம் எங்கும் மழை அப்படியிருக்க சென்னை மட்டுமே எல்லா இடங்களிலும் முன்னணியில் இருக்கு. ஒருவேளை நம்ம ஆட்சியாளர்கள் நினைப்பது போல் தமிழகம் என்றால் சென்னை மட்டும்தான் என்று நினைத்து விட்டார்கள் போல. எப்படியோ தமிழர்கள் வாழ்த்துக்காகவும் வீடியோக்களுக்காகவும் உதவவில்லை. மனிதாபிமானத்தோடுதான் உதவி வருகிறார்கள். வாழ்த்துவோம் நம் மக்களை.

இந்த மனசின் பக்கம் நேற்று (வெள்ளி) வரவேண்டியது... உடல் நலமும் மன நலமும் கொஞ்சம் யோசித்ததால் இன்று  இனி வழக்கம் போல் அடுத்த வெள்ளி மலரும்.

-'பரிவை' சே.குமார்.

வியாழன், 10 டிசம்பர், 2015

மனசு பேசுகிறது : அரசியல் 'வெள்ளக்' கைகள்


சென்னை மற்றும் கடலூரை புரட்டிப் போட்ட மழை வெள்ளம் மக்கள் மத்தியில் மதங்களைக் கடந்த மனிதத்தை மீண்டும் வெளிக்காட்டிச் சென்றிருக்கிறது. அதே நேரம் அரசியல் அசிங்களையும் உலகறியச் செய்து விட்டுத்தான் சென்றிருக்கிறது. மக்கள் கஷ்டப்படும் நேரத்திலும் அரசியல் செய்யும் அல்லக்கைகளைப் பார்த்து இவர்களும் மனிதர்களா என்று மனசு வெறுத்துப் போகிறது.

சென்னையை மட்டுமே பார்க்கிறார்கள் கடலூரைப் பார்க்கவில்லை என்ற குரல்கள் ஒலித்த வண்ணம் இருக்க, உதவி செய்ய மக்கள் கடலூரை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்த பின்னர்தான் எல்லாருடைய பார்வையும் அங்கு திரும்பியது. கடந்த ஒரு வார காலமாக தமிழ்க்குடில் அறக்கட்டளையின் சார்பாக எனது நண்பனும் மற்ற உறவுகளும் வெள்ளம் நிறைந்த கிராமங்களுக்குச் சென்று மக்களுக்கு உதவி வருகிறார்கள். இவர்களைப் போல் நிறையப் பேர் மக்களுக்குத் தேவையான பொருட்களுடன் சென்று உதவி வருகிறார்கள். அவர்களை எல்லாம் வாழ்த்துவோம்.

எவன் பெத்த பிள்ளைக்கோ நாந்தான் அப்பன் என்று சொல்வது போல கஷ்டப்பட்டு நிவாரணப் பொருட்களை கொண்டு வருபவர்களிடம் பறித்து அதில் ஸ்டிக்கர் ஓட்டுவது என்பது எவ்வளவு கேவலம் என்பதை ஏன் இவர்கள் அறியவில்லை. சில வருடங்களுக்கு முன்னர் இது போன்ற செயல்கள் எல்லாம் மக்களுக்கு அதிகம் தெரிய வாய்ப்பில்லாமல் இருந்தது. ஆனால் இப்போது என்ன செய்தாலும் உடனே முகநூலிலும் டுவிட்டரிலும் வந்துவிடும். உலகமே இவர்களின் செயல்களைப் பார்த்து சிரிக்கும் போது இவர்களுக்கு அது பற்றி எல்லாம் கவலையில்லை... கட்சியில் இன்னும் நல்ல பதவி வேணும். அம்மாவின் பார்வை தங்கள் மீது பட வேண்டும் என்ற குறிக்கோளோடுதான் இத்தனை கேவலங்களையும் அரங்கேற்றினார்கள்... அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள். 

பெங்களூரில் இருந்து சென்னைக்கு நிவாரணப் பொருட்களுடன் வந்து சமையல் செய்து கொண்டிருப்பவர்களிடம் ஆளுங்கட்சி அல்லக்கைகள் சென்று சாப்பாட்டுப் பொட்டலங்களை தங்களிடம் தரவேண்டும் என்று கேட்டு சண்டையிடுவதும்.... தகாத வார்த்தைகளால் திட்டுவதும் எந்த விதமான மனநோய் அரசியல் என்பதை உலகமே அறிந்து கொண்டிருக்கும். அதைவிட அந்த மனிதர்கள் ரொம்ப பொறுமையாய் பேசினாலும் நாங்க என்ன எங்களுக்கா கேக்கிறோம்... பசியால வாடுற மக்களுக்குத்தானே கேக்கிறோம் என்று குதிக்கிறார்கள் ரத்தத்தின் ரத்தமான வெள்ளை வேஷ்டிகள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு சாப்பாடு கொடுக்கணுங்கிற உங்க எண்ணம் நல்லதுதான். அதுக்கு உங்க காசுல நீங்க வாங்கிக் கொடுக்கணும். அதைவிட்டுட்டு அடுததவனோட பொருளை பறிச்சி அதில் ஸ்டிக்கர் ஒட்டிக் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன வந்திருக்கு.

இதேபோல் கடலூரில் ஒரு அம்மாவிடம் கொஞ்சம் பொருட்களைக் கொடுத்துவிட்டு எங்களுக்கு முதல்வர் அம்மாதான் உதவி செஞ்சாங்க... அவங்களுக்குத்தான் ஓட்டுப் போடுவோம்ன்னு சொல்லிக் கொடுத்து சொல்லச் சொல்கிறார்கள். உடமைகள் இழந்து மாற்றி உடுத்த ஒட்டுத்துணிகூட இல்லாமல் தவிக்கும் மக்களிடம் ஓட்டுக் கேட்கும் நேரமாய்யா இது. கடலூரில் களப்பணியில் இருக்கும் நண்பன் கிராமங்கள் வெள்ளத்தில் இருக்கு... மக்களைப் பார்க்கும் போது கண்ணீர் வருது... நான் பெத்து வைச்சிருக்கிறது ஒண்ணுதான்... அதோட பசியைப் போக்க ஏதாவது கொடுங்க தம்பின்னு கையேந்தி நிற்கும் அன்னை... வயிற்றுக்காக கையேந்தி நிற்கும் நிலை வந்திருச்சே என வெட்கித் தவிக்கும் மனிதர்கள்... என தினம் தினம் காணும் காட்சிகளால் என் இதயம் வெடிக்கிறது என்று சொல்கிறான். இவனுக என்னடான்னா இப்பத்தான் ஓட்டுக் கேட்கிறார்கள். என்ன மாதிரி நிலமையில் நம் தமிழகம் இருக்கு பார்த்தீர்களா..? உள்ளத்தால் அரசியல் செய்த உத்தமர்கள் இருந்த நாட்டில் வெள்ளத்திலும் அரசியல் செய்யும் ஆட்சியாளர்கள்தான் இப்போது இருக்கிறார்கள்.

வரிப்பணம் எங்கே போச்சுன்னு கேட்க முடிந்த கமலால் நான் கேட்டதில் என்ன தப்பு இருக்குன்னு திரும்பிக் கேட்க முடியலையேன்னு அவர் மீது கோபம் வந்தாலும் அவரோட வீட்டுக்கே ஒரு வாரம் கரண்ட் கட்டுன்னா ஒரு சாமானியன் கேட்டிருந்தால் இந்நேரம் வெள்ளத்தோடு போயிருக்க அல்லவா செய்திருப்பார்கள் என்று நினைக்கும் போது வந்த கோபமெல்லாம் போயிருச்சு. மக்கள் தவிக்கிறார்கள் என்று ஓடி ஓடி உதவிய சித்தார்த்தைக் கூட கடலூரில் பாதிப்பில்லை... அரசின் செயல்பாடுகள் ரொம்ப அருமையா இருக்குன்னு சொல்ல வைக்க முடிகிறது இந்த அரசாலும் அல்லக்கைகளாலும்... மேலிருந்து பார்த்தால் எங்க நிலமை உங்களுக்கு எப்படித் தெரியும் என்று கேள்வி எழுப்பிய தினமலரை மறுநாளே ராணுவ காமாண்டர் போல் செயல்பட்டார் முதல்வர் என்று மாற்றிப் பிரசுரிக்க வைக்க முடிகிறது. அரசின் துரித நடவடிக்கை காரணமாக இயல்பு வாழ்க்கை திரும்பியது என்று சிரிக்காமல் பொய் சொல்ல முடிகிறது... கமல் பேசவில்லை என்று சொல்லிய கருத்துக்கு பக்கம் பக்கமாய் அநாகரீகமாய் வார்த்தைகள் உபயோகித்து கட்டுரை எழுத முடிகிறது. ஆனால் மக்கள் பிரச்சினைக்காய் இவர்கள் என்ன செய்தார்கள்..? ஒன்றுமே இல்லை மக்கள் செய்ததை தாங்கள் செய்ததாய் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள்.

கேரளாவில் இருக்கும் முஸ்லீம் கட்சிகளின் கூட்டமைப்பில் வார்டு உறுப்பினர் முதல் எம்.பி. வரைக்கும் தங்களின் இந்த மாத சம்பளத்தை தமிழக மழை நிவாரண நிதிக்கு கொடுக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்திருக்கிறார்கள். அதைச் சொன்ன என் நண்பன் உங்க எம்.பி. , எம்.எல்.ஏக்கள் எல்லாம் என்ன செய்தார்கள் என்று கேட்டான். நாம் ரஜினி பணம் தந்தது பத்தலை, கமல் தரவேயில்லை என்றெல்லாம் கூப்பாடு போடுவோம். நம்ம எம்.பி. எம்,எல்.ஏக்களையோ பிரசிடெண்ட்டையோ கேட்க மாட்டோம். இதை நான் அவனிடம் எப்படிச் சொல்வது. சிரித்து மழுப்பத்தான் முடிந்தது. ஆனால் அவன் ஒண்ணுமே செய்யாத அரசு எதுக்கு உங்களுக்கு..? என்று திருப்பிக் கேட்டான். உண்மைதானே மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும் மக்கள் பிரதிநிதிகளும் எருமை மாட்டின் மீது மழை பொழிந்தது போலல்லவா இருந்தார்கள்... இன்னும் இருக்கிறார்கள்.

பாதிக்கப்பட்ட பகுதிக்குச் செல்லாமல் கொஞ்சமே கொஞ்சம் தண்ணீர் தேங்கியிருக்கும் பகுதிகளுக்குச் சென்று நிவாரணம் வழங்குகிறேன் என்று சொல்லி போட்டோவுக்கும் வீடியோவுக்கும் போஸ் கொடுப்பதில் இருக்கும் அந்த வேகம் பாதிக்கப்பட்ட மக்களை காப்பதில் இருந்திருக்க வேண்டும். அது ஏன் இவர்களிடம் இல்லை. அரசியல்வாதிகள் முதல் அரசு அதிகாரி வரை 'அம்மாவின் ஆணைக்கிணங்க' என்று ஆரம்பித்துப் பேசுவது இந்த மாதிரியான சூழலில் ரொம்ப முக்கியமா? மக்களை அதட்டி உருட்டி பேச வைக்கும் செயல்கள் எல்லாம் எதற்காக...? எல்லாம் பணத்தின் பின்னே ஓடும் வாழ்க்கைக்காகத்தானே..? இப்படி பாதிக்கப்பட்ட மக்களின் அவலத்தை தங்களின் அரசியல் ஆதாயமாக்கிப் பாக்கத் துடிக்கும் அற்பப்பதர்களே உங்கள் வீட்டில் ஏதேனும் நிகழ்ந்தாலும் இப்படித்தான் இருப்பீர்களா..? பணம் பணம் என்று திரியும் நீங்கள் மனிதாபிமானத்தை தொலைத்தவர்கள்தான் என்பதை நாங்கள் அறிவோம்... மனிதாபிமானத்தோடு வருபவர்களை எதற்காக இப்படிப் படுத்துகிறீர்கள்..?

ஸ்டிக்கர் ஓட்ட நேரமானதால் கெட்டுப் போன உணவுப்பண்டங்களை கொட்டிய ஆளுங்கட்சியினர்... ஸ்டிக்கர் ஓட்டித்தான் சாப்பாட்டுப் பொட்டலம் தருவோம் என பசியோடு மழையில் மக்களை அடித்து விரட்டிய ஆளுங்கட்சியினர்... மக்களை சந்திக்காமல் போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் ஆளுங்கட்சியினர்... அமைச்சர் வந்துதான் சாப்பாட்டு பொட்டலங்களைக் கொடுக்க வேண்டும் என தண்ணீரில் கொட்டிய ஆளுங்கட்சி ரவுடிகள்... மக்களால் விரட்டப்பட்ட ஆளுங்கட்சியினர் என்றெல்லாம் செய்திகள் வந்த போதெல்லாம் எதுவுமே பேசாமல் இருந்த முதல்வர் இந்த ஸ்டிக்கர் கலாச்சாரத்தை ஆதரிக்கிறார் என்றுதானே அர்த்தம். இப்போதுதான் பிரச்சினை செய்யும் ஆளுங்கட்சியினரை பற்றி தகவல் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லியிருப்பதாக செய்திகள் வருகின்றன. எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. ஒட்டும் வரை ஸ்டிக்கர் எல்லாம் ஓட்டியாச்சு என்பதால் சொல்லியிருப்பாரோ என்னவோ..? மக்களின் முதல்வர் என சிறையில் இருந்த போது கண்ணீர் சிந்தி, வெளியில் வந்த போது கொட்டும் மழையில் நின்று கத்திய மக்கள் வெள்ளத்தில் தத்தளித்தபோது ஒரு சொட்டு கண்ணீராவது சிந்தியிருப்பாரா நம் முதல்வர்...? சீவிச் சிங்காரிச்சு ஹெலிகாப்டருக்குள் இருந்து ரெண்டு விரலைக்காட்டியபடி பயணித்தபோது தண்ணீரில் தவித்த குப்பனையும் சுப்பனையும் கண்டாரா..? அந்தப் பயணம் எதற்கு...? நானும் இருக்கிறேன் என்பதைச் சொல்லவா...?

ஸ்டிக்கர் ஓட்டுறாங்க... ஒட்டுறாங்கன்னு கத்துற எதிர்க்கட்சியெல்லாம் என்ன செய்கிறார்கள். கொடுக்கும் பொருட்களில் எல்லாம் அவர்கள் கட்சிக்கான விளம்பரத்தோடுதானே கொடுக்கிறாரகள். இது வெள்ளச் சேதம்... இதில் பாதிக்கப்பட்டவனுக்கு தற்போதைய தேவை என்ன என்பதை அறிந்து தங்களுக்கான சுய விளம்பரம் இல்லாது கொடுத்தால் நீங்கள் மக்கள் மனதில் நிற்பீர்கள்... அதை விடுத்து இதுபோல் கொடுக்கும் போது உங்கள் மீது மரியாதை உண்டாவதற்குப் பதிலாக வெறுப்புத்தான் ஏற்படும். தமிழக அரசுக்கு என்று ஒரு பொதுவான முத்திரை இருக்கு அதை இந்த இரண்டு அரசுகளும் எப்போதாவது பயன்படுத்தியிருக்கின்றனவா...? வெள்ள நிவாரணப் பொருட்களைக் கொடுக்கும் போது  அந்த முத்திரை இட்டுக் கொடுக்கலாமே...? மத்திய அரசு கொடுத்த நிவாரணத் தொகை மக்களுக்கு வரும்போது அரசு முத்திரையா வரப்போகுது.. அதிலும் அம்மா முத்திரைதானே வரும். இங்கே எல்லாமே அரசியல் ஆகிப் போச்சு... இதனால் மக்கள் மனதில் வேதனைதான் மிஞ்சியிருக்கிறது.

அரசியல் அல்லக்கைகளே உதவி செய்பவர்களை தடுக்காதீர்கள்... மனிதன் மனிதனுக்கு உதவி செய்கிறான்... நீங்கள் கொஞ்சம் ஒதுங்கியே இருங்கள். இப்போதைய தேவைகளை விட மக்களுக்கு இனிமேலான தேவைகளே அதிகம். அதை நிறையப்பேர் செய்யக் காத்திருக்கிறார்கள்.. அவர்களைத் தடுத்து மக்கள் பெறும் உதவிகளை கெடுக்காதீர்கள்.  இன்னும் சில மாதத்தில் இந்த வேதனைகள் எல்லாம் மறைந்து மக்கள் எப்பவும் போல் வாழப்பழகியவுடன் 500, 1000த்துடன் வந்து உங்கள் ஓட்டுக்களைப் பொறுக்கிச் செல்லுங்கள். எங்கள் மக்கள் மறப்பார்கள்... மன்னிப்பார்கள். இதுவரை இப்படித்தான் இருந்தார்கள்... இனிமேலும் இப்படியே இருப்பார்களா என்பது கேள்விக்குறிதான். எது எப்படியோ காசுக்கும் மயங்கி ஓட்டுப்போடும் காலம் வரும்வரை தாங்கள் குடையாய் இருக்க வேண்டாம்... குடைச்சலாவது கொடுக்காமல் இருங்கள்.

தயவு செய்து உதவி செய்பவர்களை குறை கூறாதீர்கள். அவர்கள் பேருக்காக செய்கிறார்கள் என்று சொல்லாதீர்கள். பேருக்கோ தேருக்கோ செய்கிற மனப்பான்மை அவர்களிடம் இருக்கு. ஆனால் உங்களிடம் என்ன இருக்கு..? பேர் வாங்குவதற்காக மற்றவனின் பொருளை தான் கொடுப்பதுபோல் கொடுக்கும் கீழ்த்தரமான மனசு மட்டும்தானே இருக்கு. இனிமேல் தயவு செய்து சாதி, மதத்தை வைத்து பொழப்பு நடத்தப் பார்க்காதீர்கள். நாங்கள் சாதி மதங்களை வெள்ளத்தில் அனுப்பிவிட்டோம். இப்போது எங்களிடம் நிறைந்து இருப்பது மனிதம் மட்டுமே. யாரைத் தீவிரவாதிகள் என்று சொல்லிச் சொல்லி அரசியல் செய்தீர்களோ அவர்கள்தான் இன்று தீவிரமாய் உதவுகிறார்கள். அவர்களின் பணி ஒட்டுமொத்த உலகையே திரும்பிப் பார்க்க வைத்த பணி. உங்கள் அரசியலுக்கு வேட்டு வைத்த பணி. நாங்கள் எப்போதும் சகோதரர்களே என்று கை கோர்த்த பணி. அந்த மகத்தான பணியின் முன் உங்கள் செயல்கள்தான் தீவிரவாதம்.. வாழ்வை இழந்து நடுத்தெருவில் நிற்கும் மக்களிடம் ஓட்டுக் கேட்கும் தீவிரவாதி நீங்கள்... உதவ வந்தவனிடம் என்னிடம் கொடு என கெட்டவார்தைகளால் அர்ச்சனை செய்யும் தீவிரவாதி நீங்கள். மக்களை அடிமைகளாகவே வைத்திருக்க நினைக்கும் தீவிரவாதி நீங்கள். எங்கள் அரசியல் தீவிரவாதிகளே... தயவு செய்து இனிமேல் எம் சகோதரர்களை அப்படி அழைக்காதீர்கள். 

கடைசியாக ஒன்று அல்லக்கைகளே... கோவிலில் இருக்கும் தெய்வம் கோட்டையில் இருப்பதுபோல் குதிக்காதீர்கள். கோட்டைக்கு அந்த தெய்வத்தை அனுப்பியவர்கள் இன்று அநாதையாய் ஆதரவற்று நிக்கிறார்கள்... அவர்களின் ஒவ்வொரு ஓட்டும் சகாயங்களையும் இறையன்புகளையும் சைலேந்திர பாபுகளையும் தெய்வங்களாக ஆக்கும் என்பதை மறந்து விடாதீர்கள். இதே வேகத்தோடு எம் மக்கள் இருக்கும் பட்சத்தில் கோட்டையில் இருக்கும் தெய்வத்திற்கு உற்சவமே நடக்காமல் முடங்க வேண்டியிருக்கும். நாளைய தீர்ப்பை இன்றே எழுதிக் கொண்டிருக்கும் எம்மக்கள் இனி விழித்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். இனி வரும் காலம் இளைஞர்களின் கையில் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.
-'பரிவை' சே.குமார் 

சனி, 5 டிசம்பர், 2015

தமிழ்க்குடிலின் சேவையில் நாமும் இணைவோமா...


மிழ்க்குடில் அறக்கட்டளை தன்னார்வத் தொண்டு செய்வதில் தனித்து விளங்குகிறது என்பதை அதனோடு தொடர்புடைய அனைவரும் அறிவோம். எனது நண்பன் தமிழ்க்காதலன் மற்றும் அன்பு அக்கா காயத்ரி உள்ளிட்ட குடிலின் உறவுகள் அனைவரும் தொண்டுள்ளத்தோடு செயல்படுகிறார்கள் என்பதை அவர்கள் செய்யும் பல செயல்கள் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.

தற்போது தமிழக மழை வெள்ள சேதத்தில் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மற்றும் கடலூரில் அரசின் உதவிகள் கிடைக்கப்பெறாத நிலையில் மக்களே தன்னார்வத்தோடு இறங்கி வேலை செய்கிறார்கள். சென்னையைக் கவனத்தில் கொண்ட் அளவுக்கு கடலூரை யாரும் கவனிக்கவில்லை என்ற செய்திகள் முகநூல் பக்கத்தில் நேற்றுக் காலைவரை அதிகம் பகிரப்பட்டன. அதன் பிறகு கடலூரில்  தன்னார்வத் தொண்டர்களும், மக்கள் கொடுத்த பொருட்களைச் சுமந்த வாகனங்களும் நிறைந்து மக்கள் பாதுகாப்பில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றன என்ற செய்திகள் வர ஆரம்பித்தன.


கடந்த இரண்டு நாட்களாக தமிழ்க்குடில் அறக்கட்டளையின் சார்பாக எனது நண்பன், இதயச்சாரல் வலைப்பூவில் எழுதி வந்த  தமிழ்க்காதலன் தனது நண்பர்களுடன் இணைந்து மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து வருகிறார். தமிழ்க்குடில் அறக்கட்டளை தன்னலம் கருதாது செயல்படும் ஒரு அமைப்பு... எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் செயல்படும் அமைப்பு என்பதால் நாமும் அவர்களுடன் கை கோர்க்கலாம். நம்மாலான உதவிகளை நாம் செய்யலாம்.

பஹ்ரைனில் இருக்கும் தம்பி தினேஷ் குமார், தனது நண்பர்களிடம் வசூலித்து ஒரு தொகையை மக்கள் நிவாரணப் பணிக்காக அனுப்புவதாகச் சொல்லியிருக்கிறார். நாமும் நம்மாலான உதவியைச் செய்யலாம். வெளிநாட்டில் என்றால் பணமாகவும், உள்நாட்டில் என்றால் முடிந்தால் பொருளாகவோ அல்லது பணமாகவோ கொடுக்கலாம். அபுதாபியில் இருக்கும் நட்புக்கள் நாமெல்லாரும் சேர்ந்து அனுப்பலாம் என்று நினைத்தால் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். இல்லை தாங்களே தனியாக அனுப்புவது என்றாலும் இல்லை அவர்களைத் தொடர்பு கொண்டு உண்மை விவரம் அறிந்து நான் உதவி செய்து கொள்கிறேன் என்றாலும் 9818126890 என்ற நம்பரில் தொடர்பு கொண்டு விவரம் அறிந்து கொள்ளுங்கள்.


பாதிக்கப்பட்ட மக்களுக்காக தமிழ்க்குடில் களப்பணியாற்ற இறங்கியிருப்பது குறித்து காயத்ரி அக்கா தனது தூரிகைச் சிதறல் தளத்திலும் முகநூலிலும் பகிர்ந்து கொண்ட செய்தி கீழே

"அன்புத்தோழமைகளுக்கு தமிழ்க்குடிலின்அன்பான வணக்கம்.

இயற்கையின் விளையாட்டில் பாதிக்கப்பட்ட நம் மக்களுக்காக நம்மால் இயன்ற அளவு உதவிசெய்திட இருக்கிறோம். முதல் கட்டமாக கடலூர் மக்களுக்கு நம் கரங்களை நீட்டிட எண்ணி நம் பயணத்தைத் துவங்கியிருக்கிறோம். இச்செயலில் தங்களையும் இணைத்துக்கொள்ள விரும்பும் அன்புள்ளங்கள் தொடர்பு கொண்டு உதவிட வேண்டுகிறோம். உங்களின் ஒவ்வொரு சிறுதுளியும் எங்கோ இருக்கும் நம் சகோதர சகோதரிகளுக்குப் பயன்படும் என்பதால் தங்களுடைய ஒத்துழைப்பையும் வழங்கிட வேண்டுகிறோம்.  தமிழ்க்குடில் அன்பர்கள் இன்று நிவாரணப்பொருட்களோடு கடலூருக்கு சென்றுள்ளனர். 

நம் பயணத்தில் தொடர்ந்து கரம் கோர்த்து வரும் அனைவருக்கும் நன்றியும், மகிழ்ச்சியும்.

என்றென்றும் அன்புடன்,
தமிழ்க்குடில்"

விபரம் அறிய காயத்ரி அக்காவின் முகநூல் பக்கம் செல்ல இங்கு சொடுக்குங்கள்.

நண்பர்களே... பாதிப்பில் இருக்கும் மக்களுக்கு நம்மாலான உதவிகளைச் நாமும் செய்யலாமே... வாருங்கள் இணைந்து செயலாற்றுவோம்.










இங்கு பகிரப்பட்டிருக்கும் படங்கள் அனைத்தும் கடலூர் மாவட்ட கிராமங்கள்ல் தமிழ்க்குடிலின் நிவாரணப் பணியின் போது எடுக்கப்பட்டவை.

நன்றி.
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 4 டிசம்பர், 2015

மனசின் பக்கம் : சென்னை டூ கடலூர்

ழையின் கோரத் தாண்டவத்தில் வீடு, உடமைகள் இழந்து வாடும் நம் சென்னை மற்றும் கடலூர் சொந்தங்கள் இந்த மீளாத்துயரத்தில் இருந்து மீண்டு வர இறைவனைப் பிரார்த்திப்போம்.


ண்பர்களே... தயவு செய்து நடிகர்களைத் தொங்காதீர்கள்... உதவி செய்வது அவரவர் விருப்பம். சித்தார்த்தும் ஆர்.ஜே. பாலாஜியும் வெள்ளத்தில் இறங்கி வேலை செய்கிறார்கள் என்றால் அதற்கு அவர்களிடம் நல்ல மனது இருக்கிறது. எல்லோரிடமும் நாம் அதை எதிர்பார்க்க வேண்டாம். நடிகர்கள் அவர்கள் தொழிலில் பணம் சம்பாரிக்கிறார்கள். அதில் நீ உதவலை... நீ உதவியது பத்தலைன்னு எல்லாம் சொல்லி எந்தக் காரியமும் ஆகப் போவதில்லை. நம் தமிழக மக்களுக்கு ஜாதி மத பாகுபாடுயின்றி நல்ல மனது இருக்கிறது. எந்தப் பலனும் எதிர்பார்க்காமல் நான் இதைத் செய்தேன்... நான் இதைச் செய்யலாமென காத்திருக்கிறேன் என்றெல்லாம் விளம்பரம் தேடிக் கொள்ளாமல் உதவி செய்யும் அவர்களைப் பாராட்டுவோம்.

ர்ப்பிணிப் பெண்கள் பிரசவ வலியால் துடிக்கிறார்கள் அவர்களுக்கு உதவி செய்யுங்கள் என்று முகநூல் பக்கத்தில் பகிர்வதைப் பார்க்கும் போதும் மனசு கஷ்டப்பட்டாலும் அவர்களுக்கு உதவி செய்து குழந்தை பிறந்ததும் தாயும் சேயும் நலம் என போட்டோ போடும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. முகநூலும் டுவிட்டரும் ஆக்கப்பூர்வமான பணிக்கு பயன் படுத்தப்படுவதில், முக்கியப் பங்காற்றுவது குறித்தும் நட்புக்கள் முனைப்புடன் செயல்படுவது குறித்தும் மிகுந்த மகிழ்ச்சி.

வ்வளவு துயரங்களுக்கு மத்தியிலும் அரசோ, மந்திரிகளோ எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. அம்மாவின் ஆணைப்படி நடக்கும் அரசு அதிகாரிகளும் நமக்கு நாமே என்று உதார் நாடகம் நடத்தியவர்களும் மாற்றம் முன்னேற்றம் முதல்வர் நாற்காலியே என்று சொல்லியவர்களும் எங்கே போனார்கள்..?. இத்தனை பேரிடரிழும் மற்றவர் செய்யும் உதவிகளை தங்கள் செய்ததாய்ச் சொல்லும் ஈனப்பிறவிகள் இவர்களை இனம் காட்டிய மழைக்கு நன்றி என்றுதான் சொல்ல வேண்டும்,

ன்று நம்மைப் பார்த்து செய்வீர்களா...? செய்வீர்களா...? என்றார்கள். இன்று நாம் அவர்கள் செய்வார்களா என்று ஏங்கிக் கொண்டிருக்காமல் நமக்கு நாமே உதவிகளைக் குவித்து வருகிறோம். முகநூல் பக்கமெல்லாம் உதவிகள்... உதவிகள்... நாங்கள் மதத்துக்குள்ளும் ஜாதிக்குள்ளும் சிக்கியவர்கள் அல்ல... தமிழர்கள்... மனிதாபிமானம் நிறைந்த தமிழர்கள் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கும் நம் சொந்தங்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்களே... அவர்களை வாழ்த்துவோம்.

வடியில் இருக்கும் நண்பனின் வீடு வெள்ளத்திற்குள்... அவனுக்கு நெஞ்சளவு தண்ணீர் இருப்பதாய்ச் சொன்னான். சின்னக் குழந்தைகள் வேறு... இப்போது அருகில் இருக்கும் குடியிருப்பு வளாகத்தில் தங்கியிருப்பதாகவும் நலமுடன் இருப்பதாகவும் சொன்னான். மனசு சந்தோஷப்பட்டாலும் இதுபோல் எத்தனை குடும்பங்கள்... தவித்துக் கொண்டிருக்கும் என்று நினைத்தால் வேதனை அதிகமாகிறது.

(அடுத்தவன் அனுப்பியதில் அம்மா போட்டோ... வாழ்க அம்மா)
பாதிக்கப்பட்ட மக்களுக்கு பால் மற்றும் அத்தியாவசியப் பண்டங்களை அதிக விலைக்கு விற்கும் கடைக்காரர்களே சற்றே சிந்தியுங்கள். இந்த இயற்கை... சென்னையையும் கடலூரையும் புரட்டிப் போட்டு விட்டு ஆங்காங்கே உங்களைப் போன்ற சிலரை விட்டு வைத்திருக்கிறது என்றால் இந்த நேரத்தில் அவர்களுக்கு உதவுவீர்கள் என்ற நம்பிக்கையில்தான். இப்படி ஒருவன் சாகக்கிடக்கும் போது அவன் வயிற்றில் அடித்து சொத்து சேர்த்து எங்கு கொண்டு போகப் போகிறீர்கள்...? யோசியுங்கள்... இந்த நேரத்தில் தவிக்கும் ஒரு குழந்தைக்கு நீங்கள் செய்யும் உதவியே உங்களை வாழவைக்கும் என்பதை மறக்காதீர்கள்.

ம் வலைப்பூ நட்புக்கள், முகநூல் நட்புக்கள் எல்லாம் களப்பணியிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருட்கள் கொடுத்து உதவுவதிலும் தீவிரமாய் இருப்பது கண்டு, எங்கோ இருந்து கொண்டு எதுவும் செய்ய இயலாத கையறு நிலையில் எங்கு என்ன தேவை, யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற செய்திகளை உடனுக்குடன் தாங்கள் பகிர்ந்து கொள்வதுடன் இவரை அழையுங்கள் அவரை அழையுங்கள் என்று சொல்லும் உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்.

க்கள் அவதிப்படும் நிலையில் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள் என்று கேட்டால் பதில் பேசமால் ஓடும் அமைச்சர்கள்தான் நாளை உங்களுக்கு சேவை செய்வேன் என பணத்தோடு வந்து நிற்பார்கள் ஓட்டுக்காக... இனி அவர்களை ஓட ஓட விரட்ட வேண்டும். இன்று நம்ம முதல்வர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அம்மா அவர்களின் தொகுதியில் அமைச்சர்களை மக்கள் விரட்டி, செயலாளரை நையப் புடைத்தார்களாமே அப்படி அடித்து விரட்ட வேண்டும்.

க்களுக்கு உணவு வழங்க வெள்ளத்திற்குள் வாகனத்தில் பயணித்த வைகோ, மாற்றுத் திறனாளி குழந்தைகளைக் காப்பாற்றி உணவளித்த இளையராஜா,  ஒரு கோடி கொடுத்து தனது உயர்ந்த உள்ளத்தைக் காட்டிய லாரன்ஸ், தனது வீடுகளை தங்குவதற்குப் பயன்படுத்திக் கொள்ளச் சொன்ன மம்முட்டி, நிவாரணப் பணிக்காக உண்டியல் ஏந்தி வசூலித்த கர்நாடகா மக்கள் பள்ளிக்குழந்தைகள், நிவாரணப் பணிக்கு பணம் கொடுத்த பீகார் மற்றும் ஜார்கண்ட் முதல்வர்கள், இரண்டு மாதங்களுக்கு சாப்பாடு, உணவு என எல்லாம் கொடுக்கிறேன் என்றும் தனது வீடு, திருமண மண்டபம், முதியோர் இல்லம் என எல்லா இடத்திலும் தங்கச் சொன்ன அஜீத், மண்டபங்களைத் திறந்து விட்ட ரஜினி, விஜய், நிவாரணத் தொகை கொடுத்த இலங்கை கிரிக்கெட் வீரர் சங்ககாரா, முதல் மாத சம்பளத்தைக் கொடுத்த பீகார் துணை முதல்வர், அள்ளிக் கொடுத்த தெலுங்கு நடிகர்கள், இவற்றிற்கெல்லாம் மேலாக டோல்கேட்களை எல்லாம் டிசம்பர் 11ம் தேதி வரை திறந்து விட வைத்த ஷாஜகான் சார் என எல்லாருக்கும் நன்றிகள்.

மேலே சொன்னவர்கள் எல்லாம் பிரபலங்கள்.... இவர்கள் விளம்பரம் தேவையில்லை என்று சொன்னாலும் மீடியாக்கள் விடுவதில்லை... விரட்டிப் பிடிப்பார்கள்... ஆனால் இவர்களின்றி எந்த விளம்பரமும் இல்லாமல் சாப்பாடு, உடை, போர்வை, பால், மாத்திரைகள்,  நாப்கின் என இன்னும் இன்னுமாய் வண்டி வண்டியாய் ஏற்றி அனுப்பும் நம் சொந்தங்கள் அனைவருக்கும் கோடானு கோடி நன்றிகள்.

டோல்கேட்டில் பணம் வசூலிக்காமல் திறந்து விட வேண்டும் என்று திரு.ஷாஜஹான் சார் செய்த செயலை ஏதோ தாங்கள் செய்தது போல் காட்டிக் கொள்ளத் துடிக்கும் அரசியல்வாதிகளை என்ன செய்வது..? 

(கடலூரில் இருக்கும் கிராமத்தில் களப்பணியில் இருக்கும் நண்பன் எடுத்த போட்டோ)
டலூர் நகரைத்தை விட அதைச் சுற்றி இருக்கும் 80க்கும் மேற்பட்ட கிராமங்களே அதிகம் பாதிக்கப்பட்டிருப்பாதாகச் சொல்கிறார்கள். கடலூரைக் கண்டு கொள்ளவில்லை என்று முகநூலில் தம்பி தினேஷ் உள்ளிட்ட நிறைய நண்பர்கள் பகிர்ந்திருந்தார்கள். இன்று போதுமான ஆட்கள் களப்பணி செய்கிறோம்... நிறைய பொருட்களை மக்கள் அனுப்பிய வண்ணம் இருக்கிறார்கள் என்பதுதான் தற்போதைய செய்தி.

டலூர் களப்பணியில் எனது நண்பன் தமிழ்க்காதலன் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறான். தமிழ்க்குடில் அறக்கட்டளை மூலமாக பாதிக்கப்பட்ட இன்னும் உதவிகள் போகாத கிராமங்களுக்கு உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறான். நான் அவனிடம் சொன்னதெல்லாம் உதவி செய்... நீயும் பாதுகாப்பாய் இரு என்பதே... அறக்கட்டளை மூலமாக உதவும் நண்பனையும் அவனுக்கு உறுதுணையாக இருக்கும் காயத்ரி அக்கா உள்ளிட்ட உறவுகளுக்கும் நன்றி. 

ஷ்டப்பட்டு பொருட்களைச் சேகரித்துக் கொடுத்தால் அதை ஆளும் கட்சியும் ஆளத் துடிக்கும் கட்சியும் திருடி தாங்கள் கொடுப்பது போல் கொடுக்க நினைக்கிறார்கள் என்ற செய்திகளைக் கேட்கும் போது 'சே... கேவலப்பட்ட ஜென்மங்கள்... இவர்கள் இதிலும் அரசியல் பண்ணி என்னத்தை சாதிக்கப் போகிறார்கள்... மலம் தின்னும் மனிதர்கள்' என்றே எண்ணத் தோன்றுகிறது.

ன்று எங்கள் வரிப்பணத்தில் டிவி, மிக்ஸி, கிரைண்டர் என உங்கள் படங்களைப் போட்டுக் கொடுத்தீர்கள். இன்று தவிக்கும் மக்களுக்கு கொடுக்கப்படும் பொருட்களை எல்லாம் பறித்து அதில் உங்கள் படத்தை ஓட்டிக் கொடுக்க நினைக்கும் கேவலம் உலகில் வேறு எங்கும் நிகழுமா..? இப்படிப் பெயரெடுத்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்...? வாழ வைக்க வேண்டாம்... வாழ வைக்க நினைக்கும் ஒரு சாமானியன் கொடுக்கும் பத்து ரூபாய் பண்டத்தில் உன் போட்டோ போட நினைக்கும் கேவலத்தை நிறுத்தச் சொல்லுங்கள். தமிழனுக்கு தமிழன் மட்டுமின்றி உலகமே உதவும் போது கோடிகளில் புரளும் நீங்கள் எல்லாம் பிடுங்கி பெயரெடுக்க நினைக்கிறீர்களே.... இது எந்த வகையில் நியாயம்...? யோசிப்பீர்களா...? யோசிப்பீர்களா..?

க்களின் வரிப்பணம் என்னாச்சு என்று கமல் காட்டமாய்க் கேட்டதை பலர் கேலி செய்கிறார்கள். நம் வரிப்பணத்தை விலையில்லா கிரைண்டர், மிக்ஸியாகக் கொடுத்து விட்டு இப்போது பேசாமல் அமர்ந்திருக்கும் ஆட்சியாளர்களை என்ன செய்வது..? அவர் சராசரி தமிழனாய் கேட்டிருக்கிறார்... உடனே நீ பணம் கொடுத்தாயா என்று கேள்வி எழுப்புகிறோம். அவர் கொடுக்க வேண்டும் என்று நாம் எதற்காக எதிர்பார்க்கிறோம்... அப்படியே அவர் கொடுத்தாலும் விளம்பரம் பண்ணிக் கொண்டு கொடுக்க வேண்டுமா என்ன.. கேட்டால் எங்கள் பணம்தானே உன்னிடம் இருக்கு என்று வேறு சொல்கிறோம். இனி எவன் படத்தையும் தியேட்டரில் பார்க்காதீர்கள்... எவனுக்கும் கட்-அவுட்டும் பாலாபிஷேகமும் செய்யாதீர்கள்... இப்படி இருப்பீர்களா..? சகஜநிலைக்கு மாறியதும் அவர்கள் படம் வரும்போது நாம் மீண்டும் பால்குடம் எடுக்கத்தானே போறோம்... அவர்களை திட்டுவதை விடுத்து நாம் திருந்துவோம்.


முகநூலில் தொடர்ந்து செய்திகளை பகிர்ந்து கொண்டிருக்கும் ஜாக்கி சேகர் அண்ணா, முகநூல் நண்பர்கள் ராஜ் அருண், வசந்த் பாலாஜி, கனி ஓவியா அக்கா,சுபஸ்ரீ ஸ்ரீராம் அக்கா, கிருத்திகா தரன் அரவிந்த் நிவி, திருமதி. ஜோதிமணி சென்னிமலை மற்றும் வலைச்சித்தர் அண்ணன் திண்டுக்கல் தனபாலன், சுவிஸ்சில் இருக்கும் ஆல்ப்ஸ் தென்றல் நிஷா அக்கா, 'தமிழ்க்குடில்' காயத்ரி அக்கா,  சகோதரிகள் தேன் மதுரத்தமிழ் கிரேஸ், மைதிலி கஸ்தூரி ரங்கன் உள்ளிட்ட இன்னும் நம் உறவுகள் அனைவருக்கும் நன்றி.

க்களைக் காக்கும் பணியில் தன் இன்னுயிரை ஈந்த சகோதரன் பரத்தின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

ப்போது மீண்டும் மழை வலுத்திருப்பாதாக செய்திகள் சொல்கின்றன. குடந்தை சரவணன் அண்ணனிடம் பேசிய போது மழை பெய்கிறது என்றும் முதல் முறையாக மழை மீது கோபம் வருகிறது என்றும் சொன்னார். உறவுகளே பத்திரமாய்... பாதுகாப்பாய் இருங்கள்.

(மீண்டும் அடுத்த வெள்ளி)
-'பரிவை' சே.குமார்.

வியாழன், 3 டிசம்பர், 2015

மனசு பேசுகிறது: மழையின் கோரத்தாண்டவம்

ழையின் கோரத் தாண்டவத்தில் சிக்கி சின்னாபின்னமாகியிருக்கிறது நம் சிங்காரச் சென்னை. முகநூலிலும் செய்திகளிலும் தவிக்கும் நம் மக்களைப் பார்க்கும் போது மனசு வலிக்கிறது. கிராமங்களில் எல்லாம் மழை நீர் ஓடிச் சென்று சேமிக்கப்படுவதற்கு ஊரணிகளும் கண்மாய்களும் இருப்பது போல் சென்னையில் இருந்த ஏரிகளும் குளங்களும் எங்கே போனது என்பதை நாம் எல்லோரும் அறிவோம். ஏரிகளில் வீடு கட்டியதால்தான் தண்ணீரில் மிதக்கிறார்கள் என்பதை இனி சொல்லி என்னாகப் போகுது. தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தண்ணீரில் தத்தளிக்கும் மக்களைப் பார்த்து இப்போது ஓரு சில அறிவு ஜீவிகள் கேட்கும் இந்த கேள்வி சென்னைக்கு மட்டுமானது அல்ல ஒட்டுமொத்த தமிழகமே ஏரிகளையும் குளங்களையும் இழந்துதான் நிற்கிறது. வருத்தத்தில் இருக்கும் உறவுகளின் நெஞ்சங்களில் வேலைப் பாய்ச்சாதீர்கள்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட ஈரநெஞ்சம் கொண்ட தமிழர்கள் தங்களால் இயன்றதைச் செய்து வருகிறார்கள். அவர்களுக்கு உறுதுணையாக முகநூல், டுவீட்டரில் எல்லாம் நண்பர்கள் எங்கே பிரச்சினை, யாரை அணுக வேண்டும் என்றெல்லாம் இரவு பகல் பாராது பகிர்ந்து வருகிறார்கள். தங்கள் உயிரையும் துச்சமென மதித்து வெள்ளத்திற்குள் நீந்தி பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றி வரும் தமிழ் இளைஞர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். எல்லாரிடமும் மனிதம் இருக்கிறது... மதம், ஜாதி என்ற போர்வைதான் அதை மறைத்து வைத்திருக்கிறது, இப்போது அந்தப் போர்வையை மழை வெள்ளத்தோடு அனுப்பிவிட்டு மனிதத்தை மலரச் செய்திருக்கும் நம் உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும். மழையில் மலர்ந்த மனிதம் மரிக்காது இருக்கட்டும்... ஜாதி, மத போர்வை தண்ணீரோடு போகட்டும்.


ஜாக்கி அண்ணா மழை நேரத்தில் உதவியதை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். விடாது கொட்டும் மழையில் வண்டியில் போய் உதவி செய்வது என்பது பெரிய விஷயம்தான். ஸ்டார்ட் ஆகாத டிவிஎஸ் 50ஐ தள்ளிக் கொண்டு வந்த ஒரு பையனும் அவனது அம்மாவும் அவர் எவ்வளவு சொல்லியும் கேட்காது அந்த மழையில் மவுண்ட்ரோடு எப்படி போகணும் என்று திரும்பத் திரும்ப கேட்டதைச் சொல்லி வருந்தியிருந்தார். மேலும் மழை வெள்ளத்தில் பேருந்துக்காக காத்திருந்த ஒரு இளம்பெண்ணிடம் உனக்கு என்ன உதவி வேண்டும் என்றாலும் கேள்... இப்போ பஸ் வராது என்று சொல்லியும் பஸ் வந்திரும் என்று சொல்லி அவரிடம்  உதவி கேட்க மறுத்திருக்கிறார். மழை நேரம்... ஏன் மறுக்க வேண்டும்... என்ன பட்டாலும் நாம திருந்தப் போவதில்லை என்றெல்லாம் கருத்துக்கள் வந்தாலும் அந்த நேரத்தில் அந்தப் பெண் யோசித்தது தவறென்றாலும் இன்றைய சூழல், மழை நேரம் எல்லாம் யோசித்து அந்தப் பெண் மறுத்திருக்கிறாள். ஜாக்கி அண்ணாவும் சரியென அங்கிருந்து கிளம்பிவிட்டாராம்.

சென்னை முகப்பேரில் இருக்கும் சகோதரன் (சித்தி பையன்) மற்றும் பத்திரிக்கை நடத்தும் சகோதரி ஆகியோருடன் பேசினேன். நலமாக இருப்பதாகச் சொன்னார்கள். அதுவும் சகோதரனுக்கு பத்திரிக்கையில் பணி, அடாது மழையிலும் பணிக்கு வந்திருந்தான். வீட்டிற்கு முன்னே தண்ணீர் நிற்பதாகவும் இப்போது உள்ளுக்குள் வரவாய்ப்பில்லை என்றும் ஏரி உடைந்தால் வீட்டுக்குள் தண்ணீர் புகலாம் என்றும் சொன்னான். நம் உறவுகளிடம் பத்திரமாக இருங்கள் என்று சொன்னாலும் தண்ணீருக்குள் தவிக்கும் லட்சோப லட்சம் மக்களுக்காக மனசு வேண்டிக் கொண்டே இருக்கிறது. இன்னும் சில நண்பர்களுக்கு போன் போகவில்லை. சித்தப்பா மகன் தம்பி சரவணனுக்கு லைன் கிடைக்கவில்லை. மனைவியை பேசச் சொல்லி நலமாய் இருப்பதாய் அறிந்தேன்.


எல்லாம் இழந்து தவிக்கும் மக்க்ளின் நிலையைப் பற்றி யோசிக்காமல் தொலைக்காட்சிகள் மக்களின் முதல்வர் ஆணைப்படி என்றும் முதல்வர் வேட்பாளர் என்றும் சொல்லிக்கொண்டு பேசுவதைப் பார்க்கும் போது செருப்பால் அடிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. உதவிக்கரம் நீட்ட நம் மக்கள் எல்லாம் மழையிலும் வெள்ளத்திலும் கிடக்கும் போது சொகுசாய் அறைக்குள் உட்கார்ந்து கொண்டு அரசியல் நடத்தும் மந்திரிகளை என்னவென்று சொல்வது..?  மக்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டிய மேயரும், மந்திரியும் பேசாமல் ஓடுவதை தொலைக்காட்சிகள் காட்டும் போது கேவலமாய் இருக்கிறது. அதைவிடக் கேவலம் அரசு அதிகாரிகள் எல்லாம் பேசுவதற்கு முன்னர் அம்மாவின் ஆணைப்படி என்று அரம்பிப்பது.... அப்படி பேச ஆரம்பிக்கும் போது ஏன்டா நாய்களா... அங்க அவனவன் சாப்பாட்டுக்கு வழி இன்றி தண்ணியில சிக்கித் தவிக்கும் போது என்னடா உங்களுக்கு அம்மா புகழ் பாட வேண்டியிருக்குன்னு தூக்கிப் போட்டு மிதிக்கணும்ன்னு தோணுது...

அம்மாவோட ஆட்சியில மலட்டாறுல கூட தண்ணி பெருக்கெடுத்து ஓடுதுன்னு இன்னோவா வாங்கின இளிச்சவாயன் சொல்றான். அரசாங்கம் சரியில்லைன்னு எதிர்க்கட்சி பேட்டி கொடுக்கிறான்... இவனுக அரசியல் பண்ண இதுவா நேரம்..? ரெண்டு நாளாத் தவிக்கிறானுங்க... அரசாங்கம் ஒண்ணுமே செய்யலைன்னு புலம்பிக்கிட்டு நிக்காம நம்ம மக்கள் உதவிக்கரம் நீட்டிக் கொண்டே இருப்பது பாராட்டுக்குரியது. இன்றுதான் அம்மாவும் பிரதமரும் ஹெலிகாப்டரில் அமர்ந்து பார்க்கிறார்களாம். என்ன பார்த்து என்ன செய்வது..? பாதிக்கப்பட்ட.... பாதித்த மக்களுக்கு ஒரு அரசு துரித கதியில் நடவடிக்கை எடுத்து பாதுகாக்க வேண்டாமா?

நாம் இன்னும் சினிமாக்காரனுக பின்னாடித்தான் திரியிறோம்... மீடியாக்கள் அவனுக காலைக் கழுவுவதிலேயே குறியாய் இருக்கின்றன. ரஜினியும் விஜய்யும் திருமண மண்டபங்களைத் திறந்துவிட்டதை பெரிதாக பேசுகிறார்கள். ஆனால் எத்தனை பேர் என் வீட்டில் ரெண்டு குடும்பம் தங்கலாம்... மூனு குடும்பம் தங்கலாம்... எங்கள் பேக்டரியில் தங்கிக் கொள்ளலாம் என்றெல்லாம் சொல்லி உதவிகள் செய்து கொண்டே இருக்கிறார்கள். வெளியில் தெரியாமல் உதவி செய்யும் நண்பர்கள், உறவுகள் மத்தியில் சினிமா ஜிகினாவின் செயல்கள்தான் முன்னுக்கு நிற்கின்றன. மழை விட்டு இயல்பு வாழ்க்கை திரும்பியதும் அம்மாவின் ஆணைப்படி மழை விட்டுவிட்டது என்றும் ரஜினியும் விஜய்யும் மண்டபங்களைக் திறந்து விட்டதால் மக்கள் பாதுகாப்பாய் இருந்தார்கள் என்றும் மீடியாக்கள் செய்தி வெளியிட்டாலும் ஆச்சர்யமில்லை.


தெலுங்கு நடிகர்கள் அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள்... அதை வரவேற்ப்போம்... அல்லு அர்ஜூன் மக்களுக்கு உதவி செய்ய களத்தில் இறங்கி வேலை செய்திருக்கிறார். அவர் பிரபலம் என்றதும் மீடியாக்கள் அவரைப் பேட்டி எடுக்க பின்னால் நாய் போல் அலைந்திருக்கின்றன... ஆனால் அவர் அதற்கெல்லாம் நேரம் ஒதுக்காது தன்னாலான உதவிகளை செய்ய விரைந்திருக்கிறார். மீடியாக்களே உதவும் மனிதர்களை உங்கள் டி.ஆர்.பி. ரேட்டிங்கிற்காக தொந்தரவு செய்யாதீர்கள்.  உங்களுக்கு தேவை டி.ஆர்.பி. ரேட்டிங்கும் தேர்தலுக்கான போட்டா போட்டியும்... ஆனால் எங்களுக்கோ மனித நேயமும்... மனிதமும்தான் இப்போதைய தேவை. அதை எங்கள் மக்கள் எல்லாரும் காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள். தயவு செய்து உங்கள் போலிப் பிரச்சாரங்களை நிறுத்துங்கள். அம்மாவின் ஆணைப்படி... அதிக சேதமில்லை.... மழை நீர் வீதிகளில் ஓடவில்லை என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்த தொலைக்காட்சி நிலையங்களை எல்லாம் மழை வாயடைத்து வைத்திருக்கிறது... அதற்கு ஒரு சபாஷ் போடலாம்.

சென்னை உறவுகளே... மழை விட்டு விட்டது என்றாலும் பாதுகாப்பாய் இருங்கள்... அரசையும் அரசாங்கத்தையும் எதிர்பார்த்து இருப்பது என்பதும் நம்மைப் பொறுத்தவரை திருமணத்திற்கு வரச்சொல்லி வளைகாப்புக்கு வந்த கதைதான். இவர்கள் எல்லாம் அரசியல் செய்ய மட்டுமே பிறந்தவர்கள்... அரவணைக்க அல்ல என்பதை வெட்ட வெளிச்சமாக்கிய மழைக்கு நன்றிதான் சொல்ல வேண்டும். இந்த மழை வெள்ளத்திலும் சாக்கடைக் கால்வாய்களில் அடைத்திருக்கும் பாலிதீன் கவர்களை எடுத்து சுத்தம் செய்யும் துப்புரவுத் தொழிலாளர்கள், மின்சார வாரிய ஊழையர்கள், மழையிலும் தங்கள் கடமையைச் செய்த காவலர்கள், வெள்ளத்தினூடே பேருந்தை இயக்கிய டிரைவர்கள் என அனைவரும் பாராட்டுக்குரியவர்களே... அவர்களின் சேவையைப் பாராட்டுவோம்.


குடந்தையூர் சரவணன் அண்ணாவிடம் அவ்வப்போது முகநூல் அரட்டையில் தொடர்பு கொண்டு பேசினேன். பொன்வாசுதேவன் அண்ணா, கார்த்திக், நாடோடி இலக்கியன், ஜாக்கி அண்ணா, மணிஜி அண்ணா, கே.ஆர்.பி. செந்தில் அண்ணா, ஆவி என உறவுகளின் முகப்புத்தக கருத்துக்களால் அவர்கள் எல்லாம் நலமுடன் இருப்பது குறித்து சந்தோஷம். கணேஷ்பாலா அண்ணா, ஸ்ரீராம் அண்ணா, சென்னை பித்தன் ஐயா மற்றும் நம் சென்னை வலைப்பூ நண்பர்கள் அனைவரும் நலமுடன் இருப்பதாக சில நண்பர்கள் முகநூலில் சொல்லியிருந்தார்கள். மகிழ்ச்சி... உறவுகளே பத்திரமாக இருங்கள்.

கரண்ட் பிரச்சினை வந்தபோது கூட சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களை மாற்றந்தாய் மனப்பான்மையுடன்தான் பார்த்தார்கள். அதெல்லாம் இப்போது  ஒரு சிலர் பதிவாக்கும் போது கஷ்டமாக இருக்கிறது. அரசும் அரசியல்வாதிகளும் பேசிய பேச்சுக்களால் பாதிக்கப்பட்ட நம் மக்களை வேதனைக்கு ஆட்படுத்துவது என்ன நியாயம்? அதேபோல் இப்போது கடலூரில் அதிக பாதிப்புக்கள் இருக்கும் போது சென்னையை மட்டுமே மையப்படுத்தி வேலைகள் செய்வது சரியா...? கடலூரையும் பாருங்கள்... அதுவும் தமிழகத்தில்தானே இருக்கு... பாதிக்கப்பட்டவர்கள் எல்லாரும் நம் மக்களே... இங்கு அரசியல் வேண்டாம்... எல்லாரையும் காப்பாற்றுங்கள்... எல்லோருக்கும் உதவுங்கள்...


இந்த அரசும் அரசியல்வாதிகளும் நம்மை காசை வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடும் சவங்களாக மாற்றி வைத்திருக்கிறார்கள். காசு கொடுத்தால் போதும் என்பதாலேயே இவ்வளவு மழையிலும் நம்மைப் பற்றி சிந்திக்கவேயில்லை. இனி வரும் காலங்களில் பணத்துக்கு மசியாமல் நமது ஓட்டுக்களை நல்லவர்களுக்கு போடுவோம்.

சரி அரசியல் எதற்கு நமக்கு... நமக்கு இப்போதைய தேவை நம்மளது பாதுகாப்பு, உறவுகளே பாதுகாப்பாய் இருங்கள்... பத்திரமாய் இருங்கள்...

-'பரிவை' சே.குமார்.

புதன், 2 டிசம்பர், 2015

குறுந்தொடர்: பகுதி - 13. கொலையாளி யார்?

முன்கதை


தொழிலதிபர் தணிகாசலம் ஊட்டியில் வைத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அவரை யார் கொலை செய்தார் என்பதைக் கண்டுபிடிக்க தனது விசாரணையைத் தொடங்கும் இன்ஸ்பெக்டர் சுகுமாரன், வேலைக்காரி முதல் அவரது வாரிசுகள் வரை விசாரிக்க எந்தத் தகவலும் கிடைக்காமல் திணறுகிறார்.  லதாவிடம் மறுவிசாரணைக்குப் பிறகு மீண்டும் மதுரைக்குச் செல்லும் சுகுமாரன், பொன்னம்பலத்திடம் தானாக வந்து மாட்டிக் கொள்ளும் வருணை கொலைகாரன் என்று முடிவுக்கு வந்து விசாரிக்கிறார்.
இனி...


சுகுமாரன் சத்தமாகச் சிரிக்கவும் அவரைப் பயத்துடன் பார்த்தான் வருண்.

“என்ன மிஸ்டர் வருண்... நாம சிவராமன் பெயரைச் சொன்னதும் இந்தாளு எதுக்கு இப்படிச் சிரிக்கிறானேன்னு நினைக்கிறீங்களா..?” என வருணைப் பார்த்து சிரித்துக் கொண்டே கேட்டார் சுகுமாரன்.

“.....” வருண் ஒன்றும் பேசாமல் கேள்விக்குறியோடு அவரைப் பார்த்தான்.

“எனக்கு சிவராமன் மேல சந்தேகம் இருந்துச்சு... ஆனா அந்தாளை விசாரிக்கலை... என்னோட சந்தேக வட்டத்துல இருந்தாலும் ஏனோ அவரை தேடிப் போகலை... சரி விடுங்க... அப்புறம் உங்கம்மா கதை சொன்னீங்க பாருங்க... அருமையான கதை... எவ்வளவு அழகா ஸ்கீரின் பிளே பண்ணுறீங்க... கை தேர்ந்த இயக்குநர் மாதிரி...”

“சா... சார்....”

“இருங்க... நான் பேசி முடிச்சிருறேன்... உங்கம்மா.... கதையில என்ன சொன்னீங்க.... அப்பா அம்மாவை தொழில் வளர்ச்சிக்காக தவறா பயன்படுத்துனாருன்னுதானே.... ஹா... ஹா... இதெல்லாம் தமிழ் சினிமாவோட ஓல்ட் டிரெண்ட் மிஸ்டர் வருண்... உங்கப்பாவுக்கு தெரியாம உங்கம்மாவுக்கு ஒரு இல்லீகல் கனெக்சன்... அது தெரிஞ்சப்பவும் அவரு அதை விட்டுட்டு திருந்தி வாழு, எனக்காக இல்லாட்டியும் நம்ம பிள்ளைகளுக்காக நீ எங்கூட இருக்கணுமின்னு கேட்டிருக்கார்... ஆனா உங்கம்மா அந்த வாழ்க்கையை நம்பி இந்த வாழ்க்கையை விட்டுட்டுப் போயாச்சு... இப்போ நிம்மதியில்லாத வாழ்க்கை... இதுதான் உண்மைக் கதை...”

“சா...சார்...”

 “இவனுக்கு எப்படி இதெல்லாம் தெரியும்ன்னு நினைக்கிறீங்கதானே... இந்த ஒரு வாரமா ஊட்டியில நான் என்ன டீ ஆத்திக்கிட்டு இருந்தேன்னு நினைச்சீங்களா...? எனக்கு ஏகப்பட்ட பிரஷர்... ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான விசாரணையின்னு கேசை முன்னோக்கி நகர்த்தினேன்... முதல்ல உங்கம்மா பற்றி விசாரிக்க எண்ணமில்லை... ஆனா அவங்க பிரிவுக்கான காரணம் சரியாத் தெரிஞ்சாத்தான் எதையும் முடிவு பண்ண வசதியாக இருக்கும்ன்னு தல்லாகுளம் இன்ஸ்பெக்டர் பெருமாள்... என்னோட பிரண்டுதான்... அவருக்கு கூப்பிட்டு யாருக்கும் தெரியாம விசாரிச்சு விபரம் சொல்லச் சொன்னேன். அவர் சொன்ன விபரம்தான் இப்ப நான் சொன்னது...”

வருண் உலர்ந்த உதடுகளை நாக்கால் தடவி ஈரப்படுத்திக் கொண்டான். பொன்னம்பலம் சிரித்துக் கொண்டே “இன்னும் இருக்கு மிஸ்டர் வருண்...” என்றதும் மறுபடியும் ஏதோ பேசவந்த வருணைப் பேச விடாது சுகுமாரனே தொடர்ந்தார்.

“இன்னொன்னு தெரியுமா...? இந்தக் கேசுல எங்களுக்கு எந்தவித துப்பும் கிடைக்கலை... இவரா வைர மோதிரக் கதையைக் கொண்டு வந்தாரு... எனக்கு இல்லாத ஒரு துருப்புச் சீட்டை பிடிச்சிக்கிட்டு இங்க வர விருப்பம் இல்லை... அதனால சனி, ஞாயிறுல்ல போவோம்ன்னு சொல்லி வச்சேன். இங்க வர்றதுக்கு முன்னாடி பெருமாள் விவரம் கலெக்ட் பண்ணிக் கொடுக்கவும்தான் ஒரு முடிவோட இங்க வந்தோம். உங்க தங்கையை விசாரிச்சிக்கிட்டே உங்க முகத்தை வாசிச்சிக்கிட்டு இருந்தேன்... நாங்க இங்க தங்கி விசாரிக்கலாம்ங்கிற முடிவோட உங்க வீட்டை விட்டுக் கிளம்பும் போது நீங்களா வந்து மாட்டிக்கிட்டீங்க... மற்றதெல்லாம் எங்க பிளான்படி நடந்துச்சு... ஆனா நீங்க வந்து மாட்டினது பிளான்ல இல்லாத்து... உங்க அம்மா கதையை ஆரம்பிச்சப்பவே கதை இப்படியில்லை... வேற மாதிரின்னு சொல்லி, பெருமாளை வர வச்சு உள்ள தூக்கிப் போட்டிருப்பேன்... ஆனா இந்தக் கொலையில யார்யார் இருக்காகன்னு தெரிஞ்சிக்கத்தான் நாங்க எதுவும் செய்யாம உங்களைப் பேச விட்டோம்...”

சுகுமாரன் நிறுத்தவும் அவரை அடுத்துப் பேச விடாமல் வருண் வேகவேகமாப் பேச ஆரம்பித்தான்  “ப்ளீஸ் சார்... உங்க விசாரணை குறித்து சந்தோஷம்தான்... ஆனா என்னைய குற்றவாளி மாதிரி ஆக்கி நீங்களே பேசிக்கிட்டு போறீங்களே சார்.. ப்ளீஸ்... என்னை புரிஞ்சிக்கங்க... எங்கம்மா சொன்ன கதை அது... அதைத்தான் நான் உங்ககிட்ட சொன்னேன்... நீங்க வைரமோதிரம் பற்றி கேட்டதால பத்மாவதி ஆண்டிக்கிட்ட இருக்குன்னு சொல்ல வந்தவன்தான் அப்பாவோட மறுபக்கம் இதுக்கு உதவியா இருக்குமேன்னுதான் நான் கேள்விப்பட்டதைச் சொன்னேன்... அதுபோக அந்த மோதிரம் தர்ஷிகாவுக்கு செய்யும் போது ஆண்டிக்கும் அப்பாதான் செஞ்சு கொடுத்தார். ஆனா அதுவே எனக்கு எதிராத் திரும்பும்ன்னு நினைக்கலை... அம்மா சொன்னாங்கன்னு அப்பாவைக் கொல்ல நான் உடன்பட்டிருப்பேன்னு நீங்க நினைக்கிறீங்களா..? தர்ஷிகாவுக்கு அவரு தெய்வம்ன்னா... எனக்கும்தான்... அவரோட அந்தப்பக்கம் எப்படியிருந்தாலும் எங்களுக்கான வாழ்க்கை ரொம்ப நெகிழ்வானது... அர்த்தமுள்ளது... அந்த அப்பாவை அவரோட வயசான காலத்துல நான் அப்படிப் பாத்துக்கணும்... இப்படிப் பாத்துக்கணும்ன்னு கனவு கண்டவன் சார்... எனக்கு எங்க அப்பா இருந்தாத்தான் பெருமையே... இறந்தால் அல்ல...” என்றபோது அவன் கன்னத்தில் கண்ணீர் இறங்கியது .

"அது தெரியும் வருண்... உங்க பேச்சுல இருக்க உண்மையை நான் நம்புறேன்... ஆனா இந்தக் கொலையோட ஆரம்பப்புள்ளி உங்ககிட்டதான் இருக்குன்னு என் உள்மனசு சொல்லுது... அது நீங்க தெரிஞ்சு செஞ்சீங்களா... தெரியாமச் செஞ்சீங்களான்னு தெரியலை...”

“சா...சார்... சத்தியாம எனக்கு எதுவும் தெரியாது... அப்பா மேல உள்ள கோபத்துல அம்மா அவரைப் பற்றி தப்பாச் சொன்னா அதுல அர்த்தம் இருக்கு... ஆனா சிவராமன் அங்கிளும் எதுக்காக சொல்லணும்... எனக்குப் புரியலை சார்....”

“பத்மாவதியோட உங்க அப்பாவுக்கான உறவு... இல்லேன்னா உங்கம்மாவுடன் சிவராமனுக்கான உறவு... இது ரெண்டுல ஏதோ ஒண்ணு தப்பான உறவா இருக்கணும்... அதுதான் கொலைக்கான காரணி... அது நமக்குத் தெரியணுமின்னா நாம சிவராமனை விசாரிக்கணும்...”

“எப்படி சார்... எந்தக் குளூவும் இல்லாமல் அவரை விசாரிப்பீங்க...” வருண் கொஞ்சம் பதட்டத்தில் இருந்து வெளிவந்தது போல் தெரிந்தது.

“இதே வைர மோதிரம் குளூவோட போவோம்... இல்லாததை வைத்துப் பேசுவோம்... எப்படியும் நமக்கு பிடி கிடைக்கிற மாதிரி ஏதாவது கிடைக்கும்... அதுக்கு முன்னால சிவராமன்கிட்ட போன் பண்ணி பேசிட்டு அப்பா கொலை விஷயமா ஏதோ முக்கிய தடயம் கிடைச்சிருக்காம்... இன்ஸ்பெக்டர் பேசினார். நான் அங்க வாறேன்னு சொல்லுங்க... மத்ததை அங்க போயி பாத்துக்கலாம்... ஆனா அங்க நாம மட்டும்தான் போறோம்... தர்ஷிகா வேண்டாம்... போனைப் ஸ்பீக்கர்ல போட்டுப் பேசுங்க”

“ஓகே சார்... “ என்ற வருண் சிவராமனை அழைத்தான்.

“சொல்லு வருண்...” எதிர்முனையில் சிவராமன்.

“அங்கிள் எப்படியிருக்கீங்க... நாளை நான் அங்க வாறேன்...”

“நல்லாயிருக்கேன்... ஏன்...? என்ன விஷயமா வர்றே..?”

“அப்பா கேசுல ஏதோ குளு கிடைச்சிருக்காம்... இன்ஸ்பெக்டர் வரச்சொல்லியிருக்கார்... நான் மட்டுந்தான் வர்றேன்... வேற யாரும் வரலை...”

“எ... என்ன குளூவாம்...? அப்ப கொ...லையாளி யா...யார்ன்னு கண்டுபிடிச்சிடலாமா?” கொஞ்சம் பதட்டமாவது தெரிந்தது. பொன்னம்பலத்தைப் பார்த்துச் சிரித்தார் சுகுமாரன்.

“தெரியலை அங்கிள்... இதுவரை ஒண்ணும் கிடைக்கலைன்னார்... இப்பத்தான் ஏதோ சொல்றார்... நான் அங்க வாறேன்... நாம போயி பார்க்கலாம்...” 

“ஓகே... நீ இங்க வா... நாம போகலாம்... ஆமா நீ ஏன் ஒரு மாதிரி பேசுறே...? என்னாச்சு...?” சிவராமன் ரொம்ப ரிலாக்ஸாக பேசுவது போல் தெரிய சுகுமாரனின் முகம் சோர்வுற்றது.

“ஒண்ணுமில்லை அங்கிள்... லேசா தலைவலி... அதான்...?”

“ம்... டாப்லெட் எதாவது போடு... நல்லாத் தூங்கு... சரியாத் தூங்கியிருக்கமாட்டே...”

“சரி அங்கிள்... ஆமா ஆண்டி எங்கே...?”

“உங்கிட்ட எப்படி சொல்றதுன்னு பார்த்தேன்... நீயே கேட்டுட்டே...”

“ஏன்... என்னாச்சு... எனி பிராப்ளம்...?”

“ம்... பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டா... இப்போ ஹோமா ஸ்டேஜ்... ” அவரின் குரல் உடைந்தது. வருண், சுகுமாரன், பொன்னம்பலம் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

(தொடரும்...)
-‘பரிவை’ சே.குமார்.